அணங்கு எனும் சக்தி வழிபாடே சாக்தம்.
இயற்கை பக்தனுக்கும் இயற்கையாம் தேவிக்கும் இடையே நடந்த பக்தி வடிவத்திற்கு அபிராமி பட்டரின் 101 பாடல்கள் காலம் தாண்டிய சாட்சியாக என்றும் விளங்குவன.
"நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே"
- என்பதில் சூலினி என்ற சொல்லாட்சிக்கு, அன்னை வயிற்றில் நாம் சூல் கொண்டதிலிருந்தே நம்மைக் காக்கும் அபிராமி என்பது பெறப்படும் உள்ளிட்ட விளக்கம்.
சோதித்து முடித்தபிறகு பட்டர் பாடவில்லை. அன்னையால் சோதிக்கப்படும்போதே பாடி அருளப்பட்ட 101 பாடல்களுக்கு எளிய உரை.
***

No comments:
Post a Comment