முல்லா கதைகள்: 4
****************
முல்லா, தமது ஊரிலிருந்த பண்க்காரரிடம் போய் “ எனக்கு சிறிது பணம் தேவைப்படுகிறது, கொடுங்கள்' என்று கேட்டார்.
“ எதற்குப் பணம்?” என்று பணக்காரர் கேட்டார்.
“ ஒரு யானை வாங்கப் போகிறேன்” என்று முல்லா பதில் சொன்னார்.
அதற்கு அந்தப் பணக்காரர் , “ யானைக்கு தீனி போடுவதற்கே பணம் நிறைய வேண்டுமே? உங்களிடம் பணம் இல்லாதபோது யானையை எப்படிக் காப்பாற்றுவீர்கள்?” என்று கேட்டார்.
இதைக் கேட்டு கோபமுற்ற முல்லா “ நான் பணம் வாங்கத்தான் உங்களிடம் வந்தேனே தவிர அறிவுரை பெறுவதற்காக அல்ல”
நீதி:-
1) அறிவுரை தந்து முனையிலேயே முயற்சியைக் கிள்ளி எறிவோர் உலகில் அதிகம்.
2) பணம் இல்லாதவர்கள் ரோஷம் காட்டினால் பணம் கிடைப்பதில்லை.
**
No comments:
Post a Comment