Friday, 27 December 2013

சுந்தர காண்டம் 776 - 800



பாடல்-776:

மேகங்கள் இடி ஒலி கேட்கவில்லை
அலைகடல் ஒலி கேட்கவில்லை
அரக்கர்களின் முரசு ஒலியால்!
மலைகுகை போல வாய் திறந்தனர்
புகை கவிய பெருங்கோபம் வீசினர்
மூங்கில்காடு தீப்பற்றியது போல
ஆயுதம் எறியும் அரக்கர்கள்
அனுமனைச் சுற்றித் திரண்டார்கள்.

பாடல்-777:

அறமே வடிவாகிய அனுமன்
அறவன் எனப் பெயர் பெற்றவன்
“அசோகவனமே அழிந்தாலும்
தனக்கு உதவி புரிய ஒரு எரிந்த மரம் நிற்கிறது என
அதன் அருகில் சென்றான்
“இப்போது என் ஒரே துணை நீயல்லவா” என
அந்த மரத்தை விருப்பமுடன் கையில் எடுத்தான்
பாற்கடலைக் கடைகின்ற
மந்திரமலை போல நிமிர்ந்து நின்றான்!

பாடல்-778:

அனுமன் அந்த மரத்தினால்
அரக்கர்களை அடித்தபோது 
மலைகள் நெறிந்தன பொடியாயின
இடி கூட சிறிதாயிற்று
அரக்கர்களின் இரத்தம்
மலை அருவியில் கலந்து சிவப்பானது
அச்சமுற்ற அரக்கர்கள்
ஒருவர் கையை ஒருவர் பற்றி நின்றனர்
அவர்களது பெரும் தலைகள்
அனுமனால் அடிபட்டு தரையில் உருண்டன.

பாடல்-779:

அரக்கர்களில்
உயிர் பிழைத்த சிலர்
படைக்கருவிகள் எறிந்தனர்
மற்ற பலருக்கும் சேதாரமே உண்டானது
பறை போன்ற கண்கள் இழந்தனர்
தரையில் விழுந்தனர்
பிறைச்சந்திரன் போன்ற பற்கள் இழந்தனர்.
பிடரிகள் தலைகள் பிய்ந்தனர்
குற்றுயிர் சிதற மிதிபட்டனர்
குடலும் குருதியும் குழைவாகினர்
அரை பட்டனர்
முடை நாற்ற உடல்கள் அழிபட்டனர்.

பாடல்-780:
அனுமனின் தாக்குதலால் உண்டான
கனலும் தீப்பொறியும்
அரக்கர்களின் உடல் மயிரை தீய்த்தன
படைக்கருவிகள் உடைப்பட்டன
நீண்ட தோள்கள் உடைந்தன
வயிறுகள் கிழிபட்டன
ஆங்காங்கே
மலை போல விழுந்தார்கள்.

பாடல்-781:

அனுமனின் பலத்தின் முன்
பொருள்களை இருள் மூடுவது போல
உடல் கருத்த
அரக்கர்கள் அப்பளமாயினர்!
கதாயுதம் எடுபடவில்லை
அம்புகள் பயனில்லை
அனுமன் உதையால்
மார்பு நொறுங்கும் ஒலிகள் கேட்கின்றன
வீரமுழக்கமு போனது
விழிகளும் போனது
அச்சத்தில் இரத்தம் கக்குகின்றனர்
நிற்கவும் முடியாதவர்கள்
நீண்ட நேரம் நிலத்தில் புரள்கிறார்கள்
விதைகள் தெளிப்பது போல உயிர்களைத் தெளித்துவிட்டு
பிணங்களாக விழுகிறார்கள்.

பாடல்-782:
அனுமன்
அரக்கர்களின் உடல்களை
மலை மீது மோதிட வீசினான்
குறி தவறி வீசிய உடல்களில் சில
வானவெளி போயின
குபேரனின் அளகாபுரி போயின
கடலில் விழுந்தன
சிதைந்த உடல்கள்
பல பக்கங்களில் சென்றன
மேலே எறியப்பட்ட உடல்களோ
சுவர்க்க லோகம் போயின.

பாடல்-783:
இன்னும் சில அரக்கர்களை
கால்கள் தனியாக தோள்கள் தனியாக பிய்த்து வீசினான்
அந்த உடல்கள்
இறகுகள் அறுக்கப்பட்ட
மலைகளின் கூட்டமாகத் தெரிந்தன
கொடிய அரக்கர்களை
வாலில் பிணித்து
பம்பரமாய் சுற்றவும் செய்தான் அனுமன்.

பாடல்-784:
ஒடிந்தன அரக்கர்களின் வாள்கள்
ஒடிந்தன கட்டான விரல்கள்
ஒடிந்தன கோடாலிகள் சூலங்கள்
அறுபட்டன தோள்கள், கால்கள்
உடைந்தன பற்களின் கூட்டங்கள்
அறுபட்டன பெரிய கைகள்
முடிந்து போயின அரக்கர்கள் ஆயுளும்.

பாடல்-785:
அனுமன் தாக்குதலில்
வலிமையான தலைகள் சிதறின
ஒளி நிறை கவசங்கள் சிதறின
பசும்பொன் வீரக்கழல்கள் கதறின தெறித்தன
பொன் மாலைகள் தெறித்தன
அணிகலன்களும் மாலைகளும் தெறித்தன
வீரப்பட்டங்களும் விருதுகளும் தெறித்தன
குண்டலங்கள் தெறித்தன
கருவிழிகளும் தெறித்தன!

பாடல்-786:

அனுமனின் தாக்குதலில்
சிதறியவை பட்டியல் இன்னும் இருக்கிறது
பற்கூட்டங்கள் சிதறின
தோல்களும் எலும்புகளும் பொடிபட்டன
முகண்டி எனும் கருவிகள்
கப்பணங்கள் சிதறின
பிளக்கப்பட்ட உடல்களின் வழியே
சிந்திப் போயின உயிர்கள்.

பாடல்-787:
அனுமனுடைய அங்கங்கள்
ஒவ்வொன்றுமே
பலப்பல அரக்கர்களை வீழ்த்தின
கால்களால் பலர் இறந்தனர்
கைகளால் பலர்
அனல் விழிகளால் பலர்
அதிகரிக்கும் வலிமை தந்த திகைப்பினால் பலர்
குத்துகளால் பலர்
வாள்களினால் பலர்
அனுமன் எறிந்த மரங்களினால் பலர்.


பாடல்-788:

அனுமன் இழுத்து சிலர் இறந்தனர்
அனுமன் இடித்து சிலர் இறந்தனர்
அனுமன் வீசி எறிந்து சிலர்
அனுமன் பிடித்த போதே சிலர் இறந்தனர்
அனுமன் ஆரவாரிப்பு ஒலி கேட்டே சிலர் இறந்தனர்
அனுமனிடம் அடி வாங்கி சிலர் இறந்தனர்
அனுமனின் கோபப்பார்வையால் சிலர்
சிலர் இறந்ததைப் பார்த்தே
இறந்தனர் சிலர்.

பாடல்-789:

காற்றாடி எவ்விதமாக
திசையெல்லாம் திருப்பித் திருப்பி பறக்குமோ
அது போல் பறந்த அனுமன்
சிலரை ஓடிச்சென்று கொன்றான்
சிலரை
உடலோடு உடல் மோதி கொன்றான்
சிலரை
நெடிய மரத்தினால் அடித்துக் கொன்றான்
பிணங்களின் நடுவே ஒளிந்த சிலரைத்
தேடித் தேடிக் கொன்றான்.

பாடல்-790:
மலைக்குச்சமமான அனுமன்
மலையை விடவும் வலிவான அனுமன்
தன்னை முட்டியவர்களை முட்டிக் கொன்றான்
வரிசை வரிசையாக வந்தவர்களை
நெருங்கிச் சென்று கொன்றான்
பலரைக் கட்டிப் பிடித்தே கொன்றான்
தன்னைத்தட்டியவர்களை
தட்டியே கொன்றான்.



பாடல்-791:

தீப்பொறிகள் பறக்க
அரக்கர்கள் எறிந்த ஆயுதங்களை
பொடியாக்கும் அனுமனிடம்
எந்த அரக்கர் தப்ப இயலும்?
மயக்கமடைந்து உறங்கிய
அரக்கர்களையும் அனுமன் கொல்வான்
உணர்வு பெற்று எழுந்தாலும் கொல்வான்
வானில் பறந்தாலும் கொல்வான்
நிலத்தில் நின்றாலும் கொல்வான்

பாடல்-792:

ஒரு மனிதன்
இரத்தம் கக்குவது கண்டிருப்போம்
இலங்கை நகரமே
இரத்தம் கக்குவது போலுள்ளது
ஆம் -
இலங்கை நகரின் வாசல்கள் எங்கும்
அரக்க வீரர்களின் மூளைகளும் கொழுப்புகளும்
சேறும் வண்டலும் போல் உள்ளன
தூசி  நிறைந்த தெருக்களில்
ஆறு போல இரத்தம் காணப்படுகிறது.

பாடல்-793:
நினைக்கும் நேரமே
உலகில் மிகக்குறுகிய நேரம் என்பார்கள்
வேதம் நிகர்த்த அனுமனுக்கோ
அந்த அளவுக்கு கூட நேரம் தேவைப்படாமல்
அரக்கர்களை
வாலினாலும் கைகளாலும் கட்டி
மரத்தின் மீது எறிந்தான்.
ஆலையில் இடப்பட்ட கரும்பாகி
உடலில் பெருகியது குருதி.
ஒலிக்கும் கடலில் சென்று
குருதி கலக்கிறது ஒலிக்காமல்!

பாடல்-794:

தூக்கி எறியப்பட்ட அரக்கர்கள் உடலால்
கொடி பறக்கும் மாளிகைகள் இடிந்து விழுந்தன
பெரும் துதிக்கை யானைகள்
மடங்கி விழுந்து மரணமாயின
கோபுரங்கள் தகர்ந்தன
உயிர் துறந்தவைகளில்
பெண் யானைக்கூட்டமும் உண்டு
குதிரைகளும் உண்டு.

பாடல்-795:

அனுமன்  கொன்ற அரக்கர்களின் உடல்கள்
வீசப்படும் போது
சிலர்
தமது சொந்த மாடங்களையே உடைத்தனர்
தமது சொந்த மனைவியரையே அழித்தனர்
தமது சொந்த குழந்தைகளையே கொன்றனர்.

பாடல்-796:

கொல்லும் யானை ஒத்த அனுமன்
சில அரக்கியர்க்கு அருள் செய்து
“வீடு நோக்கிச் செல்க” என்பான்
சிலரை உயிரோடு அனுப்பினான்
ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு
வீடுகள் வரை போய்ச்சேருமாறு உதவினான்.

பாடல்-797:

கொல்லப்பட்ட அரக்கர்களை வீசி எறிந்தான்
அவை விழுகின்றன -
மரங்களில்!
வீட்டுத் திண்ணைகளில்!
நாற்சந்திகளில்!
நகரத்தின் நடு இடங்களில்!
வீதிகளில்!
தேசம் முழுதும் உடல்கள்!

பாடல்-798:

அரக்கர்கள் அனைவரையும்
கொல்லும் தொழிலை
நிறுத்தாமல் செய்தபடியே இருந்தான்
அதனால்
எமனின் தொழில் தடை பட்டது
அனுமன் பறித்து வீசிய உயிர்கள்
விண்மீன்களில் விழ
மேகங்களில் விழ
வானில் விழ
மற்ற மற்ற இடைவெளிகளில் எங்கும் விழுந்தன.

பாடல்-799:

அரக்கர்களின் சினமோ
இன்னும் இன்னும் அதிகமானது
போர் மோகம் அதிகமானது
வானம் முழுதும் சூழ்ந்தார்கள்
அனைத்தும் சூழ்ந்து
அரக்கர்கள் நிறமும் மேகமும் ஒன்றே ஆனது
போரிடும் அனுமனோ சூரியன் ஆனான்.

பாடல்-800:
அரக்கர்களுக்கும் கடலுக்கும்
இப்போது ஒற்றுமை வந்து விட்டது
ஆரவாரத்தால் !
கண்டவர் சோர்வடைய பருத்து தோன்றுவதால்!
வலிமை படைக்கலன்கள்
கடல் மீன்கள் போல ஒளிர்வதால்!
அனுமனோ
கடலையும் கடையும்
மந்தர மலை போலிருந்தான்!

--அனுமனோடு மீட்போம்.

Wednesday, 18 December 2013

சுந்தர காண்டம் 751 - 775



பாடல்-751:

“நாம் காவலுக்கு வைத்த அரக்கர்களின் வீரம் அழகு!
அடடா! எத்தனை அழகு! என்ன வியப்பு!
மலையை
சோலையை
ஒரு குரங்கினால் அழிக்கச் செய்து விட்டு
அதனை இங்கு வந்தும் சொல்றார்கள்
மூடர்களும்  இப்படி பேசமாட்டார்கள்!”
பரிகாசம் செய்தான் இராவணன்.

பாடல்-752:

“இராவணன் திருவடியில் விழுந்து
புகார் செய்த தேவர்கள்
“அரசனே
அந்தக் குரங்கின் உடலைத் தாங்கும்
பூமி வலிமை புகழ்ச்சிக்கு உரியதுதான் ஆனால்
அனுமனின் வலிமையோ
மும்மூர்த்திகளில் ஒருவன் எனப் புகழ்ந்தாலும் அடங்கிவிடாதது
ஐய! அந்தக் குரங்கை காணுங்கள்” என்றனர்.



பாடல்-753:

அப்போது அந்த இடத்தில்
அனுமன் வருகையால் பூமி பிளக்க ஆரம்பித்தது
கடல் நீர் புகுந்து பாய்ந்தது
எட்டுத் திசை யானைகளும் தேவர்களும்
நிலை கெட்டு ஓடினர்
கொவ்வை வாய் அரக்கியர்கள்
கருவும் சிதைந்து சோர்ந்தனர்
அண்டமே வெடிக்க அனுமன்
“ஆம்” என ஆர்த்தான் ஆர்ப்பரித்தான்.

பாடல்-754:

அனுமனின் ஒலி
பெரிய மலைக்குகை தாக்கும் இடியின் ஒலி
பிரளய கால கடல் பொங்கும் ஒலி
சிவதனுசை இராமன் ஒடித்த ஒலி
இத்தனை ஒலிகளும்
இராவணனின் பத்து தலைகளைக் குலுக்கின
இருபது செவிகளை இறுக்கின!

பாடல்-755:

இராவணனுக்கு அப்போது புல்லிய முறுவல் எனும்
புன் சிரிப்பு தோன்றியது பொறாமையும் தோன்றியது
எல்லையிலா ஆற்றல் கொண்ட
எண்ணற்ற பேரை ஏவினான்
அவர்கள் கிங்கரர்கள்
“ஆகாய வழி அடையுங்கள்
கொல்லாமல் கொண்டு வாருங்கள் அக்குரங்கை” என்றான்.

பாடல்-756:

இராவணன் ஆணைக்கு
நிலவுலகம் அழிக்கும் பிரளயகாலக்கடல் போல
கிங்கரர்கள் கிளம்பினார்
சூலம் -வாள் - உலக்கை -வேல் - தோமரம் - தண்டு
பிண்டி பாலம் எனும் வகை வகையான ஆயுதங்களுடன்!

பாடல்-757:

அந்த அரக்கர்கள் அசாதாரணமானவர்கள்
போர் என்றால் அவர்களுக்கு கற்கண்டு
போர் என்றால் மதுவின் போதை
அந்த இயல்பை எப்படிக் கூறுவதெனில்
அவர்களது போர் வெறி
பரந்த காட்டை விடப் பெரிது
உடலின் தோற்றமோ மலையினும் பெரிது.

பாடல்-758:

தேவர்களும் அசுரர்களுமே எமக்குஅற்பம் எனில்
இச்சிறு குரங்கா எமக்கு ஈடு?
பூச்சிகளும் பழங்களும்  தின்று வாழும் குரங்கோடு போரா?
என்று பல நாட்கள் வருந்தும் நெஞ்சம் உடையவர்கள்.

பாடல்-759:

அந்த அரக்கர்கள் இடையில் வாள்
உடம்பில் கவசம்
காலில் வீரக்கழல்
திசை முட்டும் தோள்கள்
ஆகாயம் தொடும் தலைகள்
மலைகளை இடறும் கால்கள்
அவர்கள் பேச்சோ
ஓங்கி அடிக்கும் பேரிகை ! மேகத்தின் இடி!

பாடல்-760:

தேவர்கள் எறிந்த ஆயுத காயங்களும்
அசுரர்கள் தந்த ஆயுதத்தழும்புகளும்
அந்த அரக்கர்களின் அணிகலன்கள் ஆகும்
அரக்கர்கள் வாய் எனும் குகையால் 
வாரி விழுங்க
ஆண் யானையும் பெண் யானையும் ஏற்றவை
பிறைச்சந்திரன் போல வளைந்த பற்கள் கொண்டவர்கள்
கோபத்தால் கொதிக்கும் கண்கள் கொண்டவர்கள்

பாடல்-761:
என்ன ஆயுதமில்லை அவர்களிடம்! அடடா!
சக்கராயுதங்கள்
உலக்கைகள்
தண்டுகள்
கூரிய வாள்கள்
இரும்பு  வளை போட்ட தடிகள்
சங்க வாத்தியங்கள்
சம்மட்டிகள்
முசுண்டி
எறி ஈட்டிகள்
வேல்கள் சூலங்கள்
முக்கோல்கள்
பொன்பிடி இட்ட வச்சிராயுதங்கள்
பகைவரை இழுத்திட கயிறுகள் கோடாலிகள்
வில் அம்புகள் கூர் நுனிதடிகள்

பாடல்-762:

அந்த அரக்கர்கள்
உடல் வலிமை மட்டுமே பெற்றவர்கள் அல்ல
தெய்வத்தன்மை மிகு அணிகலன்கள் அணிந்தவர்கள்
ஆயுதமும் கோபமும் தமது விழிகள் ஆக்கி நின்றவர்கள்
அவர்களை நோக்கி
“ஏன் நெருக்கித் தள்ளுகிறீர்கள்” என்றால்
“நீங்கள் விரைவாக ஏன் செல்லவில்லை” என்பார்கள்
தமக்கு முன்னே நிற்பவரையோ
தமது வெப்ப மூச்சினால் தீய்ந்து போகச் செய்வார்கள்.

பாடல்-763:

அவர்கள் வாய்
சினத்தால் மடிந்தே இருக்கும்
அவர்கள் முகத்தில் ஆயுதம் பிரகாசிக்கும் ஒளி
அவர்கள் கரங்களில் வில்
விரைந்து நடக்கும் கால்கள்
பிரளய கால மேகம்
மழை பொழியக் காத்திருக்கும் கருமேகம் போன்றது
அவர்களது உடம்பு.

பாடல்-764:

அந்த அரக்கர்களுக்கு
கொதிக்கும் மனது உருவாயிற்று
ஒருவரை ஒருவர் முந்தி நடந்தனர்
காரணம் -
“அசோகவனத்தையும் செய்குன்றத்தையும்
ஒரே குரங்கு அழித்ததாம்” என்பதால்!
அவர்கள் செருக்கு காயமானது
இதை விட அவமானமில்லை என்பதால்.

பாடல்-765:

முரசுகள் அடிக்கும் ஒலி
வில்லில் நாண்பூட்டும் ஒலி
வீரக்கழலில் பிறந்த ஒலி
சங்கு ஒலி
அனைத்து ஒலிகளும் ஒருமித்து எழுந்தன
அந்த ஒலி
ஊழிக்கால மழை ஒலியை அடக்கிற்று
ஊழிக்கடலின் இரைச்சலையும் அடக்கிற்று

பாடல்-766:

அந்த அரக்கர்களில் சிலருக்கு
தெருவில் நடக்க இடம் இல்லை
அதனால் வானம் வழி சென்றனர்
தம் புருவங்களையும் வில்லையும் வளைத்து
கோபக்கனலுடன் புகையுடன் பெருமூச்சு விட்டனர்
வரிசையாகச் செல்லும் சிலர் முந்தியதால்
முறை தவறியதால்
கோபம் கொண்டனர்
“இலங்கை பரந்துபட்டதாக இல்லை” என்று விழித்தனர்.

பாடல்-767:

அரக்கர்கள் பல வகைப்பட்டனர்
வாள்களை அசைப்பவர்கள்
கோபத்தால் வாயை மடிக்கிறவர்கள்
வழியில் காணப்படும் கற்களைத் தூளாக்குபவர்கள்
எடுத்த காலை கீழே வைக்க தரை இல்லாமல்
செருக்கு கொண்டு நெருக்குபவர்கள்
தமது வலிமை மிகு பற்கள் கடித்து
நெருப்பு போல கொதிக்கின்றவர்கள்.

பாடல்-768:

அந்த அரக்கர்கள் அனைவரும்
மலை போல் நின்றனர்
பலவகைக் கருவிப்பயிற்சி பெற்றவர்கள்
பெற்ற வரத்தால் ச்¢றப்பு பெற்றவர்கள்
இடிப்பேரொலி எழுப்பும் குணம் பொருந்தியவர்கள்
தேவர்களை வென்றவர்கள்
அசுரர் உயிர் கொன்று தின்றவர்கள்
அனைவராலும் அசோகவனத்தின்
அகன்ற பூமி நெளிய ஆரம்பித்தது!

பாடல்-769:

மின்னல் ஒளியும்
வீரக்கழலும் கொண்ட நாகர்களை மோதி
புறமுதுகு காட்டி ஓடச் செய்து சிரித்தவர்கள் அரக்கர்கள்
குபேரனுடைய புகழே அழியும்படி
அளகாபுரியை அழித்து வென்றனர்
“நம்மோடு போரிட எவரேனும் கிடைப்பார்களா”
என்று தேடுகிறவர்கள்.

பாடல்-770:

அரக்கர்களால்
ஆகாத காரியங்கள் எவையுமில்லை
மலைகளை இடற வேண்டுமா?
அலைகடலை முழுதும் குடிக்க வேண்டுமா?
சூரியனை மண்ணில் விழச் செய்ய வேண்டுமா?
வான் மேகங்களைப் பிழிய வேண்டுமா?
பாம்புகள் தலைவன் ஆதிசேஷனை
தரையோடு தரையாக அரைக்க வேண்டுமா?
நிலத்தைப் பெயர்த்து எடுக்க வேண்டுமா?
இவை எல்லாமும் செய்ய
ஒரே ஒரு அரக்கரே போதும்!

பாடல்-771:

அந்த அரக்கர்களின் நடையில்
புழுதிப்படலம் கிளம்பிச் சென்று
உயர்ந்து உயர்ந்து சென்றது
தேவர்களின் விழிகளில் படிந்தது
அனுமனை நோக்கி அரக்கர்கள் நடை -
சிங்கங்களின் தொகுதி போல
கொல்புலிக்கூட்டங்கள் போல
வான் தொடும் பேய்கள் வரிசை போல
கடல் கடைந்த போது உண்டான நஞ்சு போல
மேகங்கள் மலை நோக்கி வருவது போல இருக்கின்றது

பாடல்-772:
அசோகவனத்தை சூழ்ந்த
அரக்கர் கண்களில் தீப்பொறி வந்தது
மூச்சுக் காற்றில் புகை வந்தது
எல்லாத் திசைகளிலும் இடி போல முழங்கினர்
அவர்கள் நடையில்
கொடிய பிரளயக்காலக் காற்று வீசியது
இடிகளின் கூட்டம் கூட பயந்து விட்டது
அதனால் பூமிக்கே வராமல் காற்று அஞ்சியது


பாடல்-773:

அரக்கர்கள் ஊதும் கொம்பின் ஒலி
கார்கால மேகம் போல இடிக்கும் முரசு ஒலி
மண்ணுலக உயிர்கள் அஞ்சும் போர் ஒலி
ஒலிகளின் கூட்டு சக்தி
அனுமனை மிரட்டி மோதிட வந்தன
அனுமனோ
விண்ணை முட்டும் கயிலை மலை போல நிற்கிறான்
வெயில் தரும் கதிரவனும் அஞ்சி விலகினான்.

பாடல்-774:

எந்தச் செயல் பொருத்தமானது?  எதைச் செய்வது உயர்வு ?
எதைச் செய்வது வெற்றி ?
எவரினும் அதிகம் உயர்ந்தோன் என
கம்பன் புகழும் அனுமன்
“பக்குவமான இயல்புடைய அறிவு உண்டாவதே
வாழ்வின் வெற்றி” என அறிந்தவன்
அசோக வன அழிவினால்
அரக்க வீரர்கள் தோற்றோடுகின்ற
வலிய போர்ச்செயலும் இனிதே நிகழ இருக்கிறது”
அனுமனின் உள் நெஞ்சு குதூகலித்தது.

பாடல்-775:

“இவன் தான்! இவன் தான்! இவன்தான்!” என
அனுமனைச் சுற்றி நின்றனர் அரக்கர்கள்
பிடிப்பதே நமது பணி என முற்பட்டு எதிர்த்தனர்
காற்று போல போரிட்டனர்
அரக்கர்கள் உடல் கருப்பின் நிறம்
பகலில் ஒரு இரவு எனத் தெரிகின்றது
அரக்கர்களின் படை கருவியோ மிக வலிது
மண்ணும் , மலையும், வானமும் , ஒப்பற்ற இலங்கையும்
ஒரு சேர அதிரும்படி
தப்பாமல் நஞ்சு போல் கொல்கின்ற படைக்கருவிகளை
அனுமன் மீது செலுத்துகிறார்கள்.

--அனுமனோடு மீட்போம்.

சுந்தர காண்டம் 726-750



பாடல்-726

அனுமன் பல வகை மரங்கள் வீசினான்
அதனால்
பெரும் தாமரைத் தடாகம்
சிவந்த சந்தனக் கட்டை அரைத்துக்
கரைத்தது போல் ஆனது
அசோக வனத்து மரங்கள் விழுந்து விழுந்து
உப்பு நீர்க் கடல் இப்போது
சாமரம் எனும் இசை பாடும்
வண்டுகளுடன் மலர்க்கடலாக மாறியது

பாடல்-727:

ஒவ்வொரு திசையிலும்
அனுமன் வீசிய நொச்சி மரங்கள்
கடலின் நீண்ட அலைகளில் மிதக்கின்றன
அரக்கர் மாளிகை மேல்
சந்தன மரங்கள் விழுந்து
வாசல் கதவுகள் முறிந்து தூளாயின.

பாடல்-728:

நந்தவனத்தில் இருந்த பூக்களை விட
ஆகாய நட்சத்திரங்கள் போல
அனுமன் வீசிய மரங்களின் பூக்கள் அதிகம்
அனுமன் வீசிய புளிய மரங்கள்
எங்கே சென்று விழுவது என
கடலில் சிதறி விழ
கடல் சங்குகள் அதிர்ச்சியுற்றன அதனால்
தமது முத்துக்கள் சிந்திட நிலை கெட்டு ஓடின.

பாடல்-729:

அனுமன் வீசிய மரங்கள் எளிதானவை அல்ல
பல வகை பொன்னாலும் மணியாலும் ஆனவை
அவை
இரவில் ஒளிரும் இந்திரன் வில் போலத் தெரிந்தன
:”இப்போதே அனுமன்
அனைத்து அரக்கரையும் கொல்வான்” எனும் குறிப்புடன்!

பாடல்-730:

அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்களால்
அழிந்த இடங்கள் அதிகம்
யானை கட்டும் இடங்கள்
ஆடல் அரங்குகள்
கள் குடிக்கும் இடங்கள்
குதிரைகள் கட்டும் இடங்கள்
இவை மட்டுமா?
அழகு செய்த தேர்களும் தான்,.

பாடல்-731:
அசோக வன மரங்களை மட்டுமா
பிடுங்கி வீசினான் அனுமன்?
பொன்னால் செய்த கொடிகளை
அறுத்து எத்திசையிலும் எறியும் போது
சூரிய கிரணக் கதிர்கள் அறுந்து விழுந்து
மேகம் படிந்த உடலில் புகுவது போல் உள்ளன.

பாடல்-732:
பேரொளி வீசும் பொன்மயமான மதில்கள் -
அனுமன் வீசும் மரங்களையும்
பெரு குன்றுகளையும்
தாங்க முடியாமல் நெரிகின்றது
மாளிகைகள் சாம்பலாயின
இலங்கையின் எல்லா இடமும் அழிந்தன.

பாடல்-733:

விண்மீன்களின் தலைவன் சந்திரன் வியந்தான்
ஆனால் மறைந்து ஒளிகிறான்
ஏன்
இராவணன் கண்டால் கேள்வி கேட்பான்
“என் மீது பகை கொண்ட குரங்கு
சோலையை அழிக்கும்போது
வேடிக்கை பார்த்தாயா ! ” என்று.

பாடல்-734:

குற்றமற்ற மணிகளால் ஆன பொன்மரங்கள்
மன்மதன் இருப்பிடம் போன்ற மரங்கள்
இரண்டு  கைகளாலும் அனுமன் பறித்து வீசிய போது
பேரொளி வீசிட
உலகமே ஒளிமயம் ஆனது.

பாடல்-735:

விலங்குகள் யாவும்
அச்சத்தால் கலங்கின கத்தின
கண்கள் புண்ணாகிப் பொங்கின
கடலில் பறவைகள் விழுந்தன
விழாதவையோ பறக்க முயன்றன
சில
சிறிது நேரம் சிறிது தூரம் சில பறந்தன
சிறகுகளை உதறின
சிறகுகள் ஒடுங்கி இறந்தன.

பாடல்-736:

அனுமனின் மலை போன்ற தோள்களும்
சூரியன் போல் பரந்த மார்பும்
கோபமாய் தீண்டியபோதே
மலர்களும் இதழ்களும் கூட்டுப் பறவைகளும்
தெய்வத்தன்மை மிகு மரங்களும்
சுவர்க்கம் புகுகின்றது என்றால் -
அருள் புரிந்தால்
வரும் பலனை நம்மால் கூறமுடியுமோ!

பாடல்-737:

அசோக வனத்தில் அனைத்தும் அழிந்தன
பொய்யையே தமது ஒழுக்கமாகக் கொண்ட
அரக்கர்கள் பாதுகாக்கும் சோலையில் அனைத்தும் அழிந்தன
ஆனால்
அதிசயிக்கத்தக்க மென்மையுடன்
சோலையை விட மென்மையான உள்ளமுடைய
அன்னம் போன்ற சீதை வாழும்  மரம் மட்டும் வாழ்ந்தது
மூன்று வகையான உலகங்களும் அழியும்
ஆனால் ஊழியின் இறுதியில்
திருமால் வீற்றிருக்கும் இலை உடைய ஆலமரம் மட்டும்
அழியாமல் வாழ்வதுபோல!

பாடல்-738:
எல்லா அணிகலன்களையும் வீசி எறிந்த சீதை
மிகுந்த ஒளியுடைய சூளாமணி மட்டும்  வைத்திருந்து
அதையும் இராமனுக்கென
அனுமனிடம் தந்து விட்டாள்
அலைகடல் தனக்குள் யோசித்தது
அழகிய சிகாமணி இவளுக்கு
இன்னொரு சூளாமணி இதோ என
சூரியன் எடுத்துத் தந்தது!

பாடல்-739:

சீதையும் மரமும் தவிர
அசோகவனம் முழுதும் அழித்த அனுமன்
தன்னந்தனியாக நிற்கிறான்
பதினான்கு உலகம் அளந்த திருமால் போல!
பாற்கடலைக் கடைந்திட நிற்கும்
மந்தாரமலை போல!
ஊழி இறுதியில் உலகமெல்லாம் அழித்து நிற்கும்
உருத்திர மூர்த்திப் போல!

பாடல்-740:

இத்தனை அழிவுகள் நிகழ்ந்த பின்
உறக்கம் கலைந்த  அரக்கியர்கள்
மனம் கொதித்தனர்
பொன் மலைபோல் நிற்கும்
புனித அனுமனை உற்றுப் பார்த்தார்கள்
“அம்மா! யார் இவன்” என்று அச்சம் அடைந்து
பிறகு சீதை நோக்கி
“நங்கையே இவனை அறிவாயா” என்றனர்.

பாடல்-741:

அரக்கிகள் வினவியதும் அற்புதமான பதில் தந்தாள் சீதை
நல்லவர் உலகிற்கு
ஆறுதல் மருந்து போல ஒரு சொல்!
“தீயவை என்பதை தீயவர்கள் தான் உணர்கிறார்கள்
நல்லவர்களோ எல்லாமும் நம்புவார்கள்”
மாரீசன் எனும் மாயமான் வந்த போது
“இது தீயவர் மாயம்” என இலக்குவன் உணர்த்தியும்
உண்மை என மயங்கியவள் நான்.

பாடல்-742:

சீதை கூறியதும்
அரக்கிமார்கள் வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடினர்
அப்போது வானமும் கடல்களும் குலைந்தன
அருகில் ஒரு மிச்சமாக நின்றது ஒரு மலை!
“நீக்குவேன் இதனை” என அனுமன் தனது
மலை போன்ற கைகள் நீட்டினான்.

பாடல்-743:

அந்த மலை சாதாரண மலை அல்ல
வானவெளி அடைக்கும் மலை
நாணத்தால்
வானத்தின் மனம் புண் ஆக்கும் மலை
கண்ணால் உயரம் காணமுடியா மலை
மேகம் மூட முடியா மலை
வலிய காற்று அடையாத மலை
இரவும் மூட முடியாத மலை
அட! இந்த உலகமே அதன் சுமைதாங்க முடியாத மலை.

பாடல்-744:

சந்திரன்
பல நாட்கள் பொழிந்து
பெருகி வரும் புதிய பால் ஒளி மட்டுமல்ல
அதன் கறை இருளையும்
வாரி நக்கும் பொன் குன்று அது!
இராவணன் கட்டளையால்
பிரம்மன் தனித்து உருவாக்கியது,

பாடல்-745:

அந்தக் குன்றின் ஒளி
சிவப்பு ஒளியைத் தனது சீதனமாகக் கொண்ட
சூரியனுக்கே அணிகலன் என ஒளிரும் ஒளி கொண்டது
அந்த மலையில்
தூண்  போல நிமிர்ந்த இடங்களில் இரத்தினங்கள்!
மலையின்  சுற்றுப்புறங்களில்
தங்கமும் முத்துக்களும் பதித்த ஒளி!
இவ்வளவு சிறப்பு பெற்ற மலை
எம்மால் புகழக்கூடிய பொதுவான தன்மை பெற்றதல்ல!

பாடல்-746:

அழகிய வெள்ளி மலையான கயிலையை
கொடுந்தொழில் இராவணன்
வேரோடு பறித்ததைக்
கேள்விப்பட்டுள்ளான் அனுமன்
அச்செயல் சாதாரணம் என நினைக்கும் அளவு
பொன்மலையை மண்ணிலிருந்து எடுத்து
இலங்கை மீது வீசினான்!
மலையினால் மோதப்பட்ட
வானுயர் மாளிகைகள் பொடியாயின.

பாடல்-747:

அப்போது தோன்றிய
நெருப்புப் பொறிகள்  தெறித்தன
எப்பக்கமும் சுட்டன
அரக்கர்கள் அஞ்சி அழிந்தனர்
பிறருக்குத் தீமை செய்பவர்கள்
அந்தத் தீமையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு
இந்த அழிவே சாட்சி.

பாடல்-748:

இராவணனிடம்
அலறி அடைக்கலம் புகுந்தவர்கள் பட்டியல் இதுவே:
அசோகவனம் காக்கின்ற
ஆறு பருவத்துக்கும் உரிய தேவர்கள்;
அச்ச நெருப்பு மூண்டவர்கள்;
தம் உடையிலேயே சிறுநீர் பீறிட்டவர்கள்
மரங்களில் கிளைகள் கிழித்து குருதி வழிபவர்கள்
கால்கள் பின்னிட ஒரே காலுடன் நடப்பவர்கள்
திறந்த வாயுடன் ஊளையிடுபவர்கள்.

பாடல்-749:

சிங்கம் போல கர்ஜிக்கும் கோபமுடைய
இராவணன் திருவடி சேர்ந்தார்கள்
“திசை யானைகள் எல்லை வரை
காவல் காக்கும் மன்னனே
இப்போது
அசோகவனம் கூட
காவல்  செய்ய முடியாமல் ஆனோம்
மலைத் தோள் உடைய ஒரு குரங்கு
மரங்களை முறிக்கிறது
காவல் மிகுந்த சோலை இப்போது
தீப்பட்ட ஆடை!” என்று கதறினார்கள்.

பாடல்-750:
“இராவண மன்னா!
அக்குரங்கு செய்த அழிவு
சொல்ல முடியாத அளவு மன்னா!
தன் கால்களாலும் கைகளாலும்
அசோக வனத்தை
புல்லும் துகளும்
பொடியும் இல்லாத அளவு அழித்துவிட்டது
பொன் ஒளி வீசும் செய்குன்று
பிடுங்கி வீசப்பட்ட நகரம்
சிறிய இடம் மட்டுமே அழியாமல் உள்ளது” என்று கதறினர்.

--அனுமனோடு மீட்போம்.

Wednesday, 11 December 2013

சுந்தர காண்டம் 701 -725





பாடல்-701:
சூரியனும் சந்திரனும் வலம் வரும் மேருமலைக்கு சமமான
இரண்டு தோள்களையுடைய தனது வடிவத்துடன்
அசோகவனத்தை அழித்தான் அனுமன்
இரணியாட்சன் பூமியை
சுருட்டிச் சென்றதை மிட்டு எடுத்த
வராக மூர்த்திக்கு சமமாக
அடர்ந்த அசோகவனத்தை
கால்களால் துகைத்து அழித்தான்.

பாடல்-702:
அனுமன் கால்களால் தாக்கப்பட்ட
அசோகவனத்து மரங்கள் பிளந்தன
முரிந்தன நெரிந்தன
மடிந்தன பொடிந்தன மறிந்தன
எரிந்து கரியாய்ப் போயின ஒடிந்தன
துவண்டு சாய்ந்தன
உதிர்ந்து சின்னாபின்னம் ஆயின.

பாடல்-703:

சில மரங்கள் வேரோடு விழுந்தன
வெந்து போயின
வானத்தின் மேகத்தோடு நெருங்கின
காற்றினால் கடலில் வீழ்ந்தன
வண்டுகளுடன் வானோரின் ஊர் சென்றன
இன்னும் சில மரங்கள் உருவிழந்து சிதைந்தன.

பாடல்-704:
அனுமன் கழற்றி வீசிய மேக உயர மரங்கள்
எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளுக்கு
தழை உணவு ஆயின
இன்னும் சில
வான வழியே சென்று
தேவர்களின் சோலைகளைச் சிதைத்தன.

பாடல்-705:
அனுமன் வீசிய மரங்களால்
கடலில் அலைகள் அலைவுற்றன
அரக்கர் வீடுகள் பொடியாயின
இன்னும் பல மரங்கள்
மலை மீது மோதி தூளாயின
மரங்களின் வெண் மலர்கள் நிலை கலங்கின
நட்சத்திரங்களுடன் கலந்து கீழே விழுந்து சிந்தின.

பாடல்-706:
அனுமன் பிடுங்கி வீசிய மரங்கள்
மதம் கொண்ட திசை யானைகளின் தந்தங்கள்
நடுவே தொங்கின
பெண் யானைகளுக்கு உதவ
துதிக்கைகளில் இடுக்கி வைத்திருப்பது போல
மரங்கள் காணப்பட்டன.



பாடல்-707:
அனுமன் வீசி எறிந்த மரங்கள்
எல்லா உலகிலும் சென்று வீழ்ந்தன
அதனால்
நஞ்சு மிகு இராவணன் சோலை மலர்களை
செம்பஞ்சு பாதம் கொண்ட பெண்களால்
வித்தியாதரர் வாழும் உலகிலும் பறிக்க முடிந்தது!
இயக்கர்கள் வாழும் மலையிலும் பறிக்க முடிந்தது!
மரணமிலாத தேவர்கள் வாழும்
சுவர்க்கத்திலும் பறிக்க முடிந்தது.!

பாடல்-708:

பொன்னில் பதித்த இரத்தினங்களால்
செய்யப்பட்ட இராவணன் வீட்டை
தடிமனான அசோகவன மரங்கள் சுற்றி வருவதால்
மின்னல்போல் தெரிந்தன
பல மரங்கள்
சூரியன்கள் திரிவது போலவும் தெரிந்தன
வீசி எறிந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தூளாகி
ஊழிக்காலத்தில்
கீழே விழும் நட்சத்திரங்களை ஒத்திருந்தன.

பாடல்-709:
அனுமன் வீசிய மரங்கள்
கடலில் விழுந்த போது விழுந்தவை பட்டியல் இது :
“மரத்திலிருந்த பறவைகள்!
வண்டுகள்!
தேனீக்கள்! நறுமண மலர்கள்!
தேன் அரும்புகள் ! தளிர்கள்
இனிய காய்கள்” இவை அத்தனையும்
மீன் கூட்டங்களால் மகிழ்ச்சியாக விழுங்கப்பட்டன
அடடா -
உண்டு முடித்த மீன்களின் மேல் மரங்கள் வீழ
அவை இறந்து போயினவே.

பாடல்-710:
அனுமன் வீசிய மரங்களின் மலர்கள்
கடலில் உள்ள
புலால் மணத்தை மாற்றி
மலர் நறுமணம் வீசச் செய்தன
அதுமட்டுமா!
தேவர்கள் தம் மனைவிகளுடன்
மகிழ்ந்து குளிக்கும் குளமாக ஆகின கடல்கள்!

பாடல்-711:
அனுமன் பறந்து கடக்க வேண்டிய கடல் அல்ல
நடந்தே கடக்கலாம்! ஆம்!
அனுமன் பறித்து எறிந்த
மாணிக்க மயமான மேடைகளும்
அசோகவன மரங்களும்
கடலில் படிந்து வழி உண்டாக்கியதால்!

பாடல்-712:
மலை பொடியாவது போல்
வான் இடியால் உடையும்
பெரிய மலைகள் ஒத்த அசோக மரங்கள்
கோடை சூரியன் போல ஒளி விடுகின்றன.

பாடல்-713:

அனுமன் கோபமுடன் வீசிய
அளவிலாத மரக்கூட்டங்கள்
வானில் தழைத்துத்  தெரிவதால்
வலிமை மிகு இராவணன் அசோகவனம்
விண்ணிலும் இருக்கிறது என  நினைத்தனர் சிலர்.

பாடல்-714:
அனுமனால் வீசப்பட்டு
ஆகாயத்தில்பறக்கும் மாணிக்க மயமான மரங்கள்
தேன் துளி சிதற
பறவைகள் ஒலியோடு
நட்சத்திரங்களை நொறுக்கின
வாள் போல வில் போல ஆகாய விமானம் போல
பறக்கும் மரங்களின்
ஒளி தெரிகின்றது.

பாடல்-715:
ஒப்பற்ற போர் புரிவதில்
யானைக்கு சமமான அனுமன்
வீசி எறிந்த மரங்களும்
மரங்களின் கிளைகளும் இலைகளும்
வானம் வரை உயர்ந்து சென்று கடலில் விழும்போது
கடல் நீரை முகக்கும் மேகங்களை ஒத்துள்ளன.

பாடல்-716:

இராவணன்
முன்னர் கற்பக மரங்களை
கொடை குணம் மிக்க குளிர்ச்சியான
விண்ணுலகிலிருந்து மண்ணுலகம் கொண்டு வந்தான்
இப்போது  அவை பெயர்த்து வீசப்பட்டன
சுவர்க்கலோகம் சென்றன
தேவர்கள் சொர்க்கம் செல்வது போல காட்சி தந்தன.

பாடல்-717:

மாணிக்கங்கள் பதித்த
திண்ணைகளை இடித்தான்
மண்டபங்களை துண்டாக்கி உடைத்தான்
ஒளி பொருந்திய வலிமையான சுவர்களை
இடித்துத் தள்ளினான்
உயர்ந்த குன்றுகளையும் அழித்தான்.

பாடல்-718:

வேங்கை மரங்களையும்
ஆச்சா மரங்களையும்
கீரை போல இலகுவாகப் பறித்தான் வீசினான்
கற்பக மரங்களைப் பூக்களோடு ஒடித்தான்
சண்பக மர வரிசைகளையும் பறித்து எறிந்தான்
மாங்கனிகளோடு கிளைகளோடு
பெரும் மரங்களை வீசி முறித்தான்.

பாடல்-719:

மன்மதன் வரும் முன்பு
இளவேனிலாகிய வசந்தம் எனும் வசந்தன் வருவான்
பூஞ்சோலைகள் கலங்கி
நிலை குலைந்ததால்
வசந்தன் முகம் இப்போது பொலிவிழந்தது
சந்தன மரங்கள்
விறகுகளாய் எரிந்து சிந்தி அழிந்தன.

பாடல்-720:

“காமரம்” எனும் பண் பாடும் வண்டுகள் கலங்கும்படி
மரங்கள்
மண்ணோடு மண்ணாகி வீழ்ந்தன
அரங்குகள் தகர்ந்தன
பூ மரங்கள் எறிந்து பொரிந்தன.

பாடல்-721:
இலைகள்
சிறு கிளைகள் கொடிகள்
குயில் குலங்கள் தங்கும் தளிர்கள்
மென் மலர்கள் கொண்ட வாசல்கள்
வாசனைப் புதர்கள்
தேன் மழை
வண்டுகள்
மயில்கள்
எல்லாமும் அனுமனால் அழிந்தன.

பாடல்-722:

மேகங்களை மின்னல்கள் சுற்றிக் கிடப்பது போல
அனுமன் வீசிய பவளக் கொடிகள்
இலங்கை சூழ்ந்த மலைகளைச் சுற்றிக் கொண்டன
அனுமன் வீசி எறிந்த
பொன்மயமான கிளைகளும் மரங்களும்
மலைகளில் கிடப்பது
கவளம் கவளமாக உண்ணும்
யானைகளின் முகபடாம் போல ஒளி வீசின.

பாடல்-723:

அனுமன்
அசோக வனம் அழிக்கும்போது
பறவைகள் ஆர்த்த ஒலி ஓசை
மரங்கள் ஒடியும் இடி ஓசை
அறவடிவன் அனுமனின் குரலோசை
அண்டத்திற்கு அப்பாலும் கேட்டதே...
பாடல்-724:

பாதிரி மரங்களும்
கோங்கு மரங்களும்
பறவைகளோடு குஞ்சுகளோடும்
இசையுடன் குளிர்ப்பாடல்கள் பாடும் வண்டுகளோடு
அலைகள் கரைகளை அலம்பும் கடலில்
ஓசையுடன் விழுந்தன.

பாடல்-725:

ஆற்றின் கரையோர ஆச்சா மரங்கள்
வண்டலோடு கூடிய நல்ல நீர் கொண்ட
மண்ணுலக ஆற்றில் மடிந்தன
அனுமனால் வீசப்பட்ட
நீண்ட நீண்ட மரங்கள்
திருமால் கால் அலம்பிய
ஆகாய கங்கையில் விழுந்தன.

-அனுமனோடு மீட்போம்.

Sunday, 1 December 2013

சுந்தர காண்டம் 676 -700




பாடல்-676

நங்கையே
எண்ண முடியாத பெரிய வானர சேனை
நாளையே இந்நகருக்குள் வரும்
அப்பொழுது அவை நடுவில்
கருடன் மேல் திருமால் போல்
இராமனை என் முதுகில் நீ காண்பாய்.

பாடல்-677:

அங்கதன் தோள் மேல்
இராமனின் இளவல் இலக்குவன் வருவான்
மலையில் பொங்கும்
வெம்மையான சூரியக்கதிர்கள் என விளங்குவான்
போரிடும் முடிவோடு வானரப்படை இலங்கையில் தங்கும்
எனவே
கவலைகளும் கலக்கமும் நீங்கி விடுக
உனது தனிமை நீங்கப் போகிறது.

பாடல்-678:

“குராமலர்கள் சூடிய குழலியே
நீ குறிப்பிட்ட நாளில்
இந்த பெரும் சிறையிலிருந்து உன்னை மீட்காவிட்டால்
பழியும் பாவமும் தொடர்வதற்கு
அந்த இராமனே இராவணன் என ஆவான்
இந்த இராவணனே இராமன் ஆவான்” என்றான்.

பாடல்-679:

குற்றமற்ற
அனுமனின் மொழி கேட்டு
மயிலாகிய சீதை அறிவிலே தெளிவுற்றாள்
உவகையால்  மனம் களித்தாள்
உயிர் பெற்றாள்
“இவன் இராமனிடம் போவது நன்று” என்பதை
புத்தியில் வைத்தாள்
இப்படியாக சில வாசகம் சொன்னாள்:-

பாடல்-680:
“ஐயனே
மேன்மையானவனே
இராமனிடம் விரைக
தீயவை எதுவரினும் வெல்க
இனி ஒன்றும் சொல்ல என்ன இருக்கிறது
இப்போது நான் சொல்வதும்
முன்பு நிகழ்ந்தவைவும்
கோமகனுக்கு விளங்கும்” எனச் சொன்னாள்
இனிய சொற்கள் இசைக்கும் சீதை.

பாடல்-681:

அனுமனே.. இதனை நினைவூட்டு
அப்போது வனவாசத்தில் இருந்தோம்
சித்திரக்கூட மலையில் இருந்த எனது அருகில்
ஒரு காகம் வந்தது
கூர் வாள் நகத்தால் என் மார்பு கீறியது
அந்தக் காகத்திடம் இராமன் கோபித்தான்
அருகில் கற்கள் நடுவே
வளர்ந்திருந்த புல் கொண்டு
விரைவும் கொடுமையும் கொண்ட
பிரம்ம அஸ்திரத்தை ஏவிய  செய்தியை
மெல்லச் சொல்வாயாக
மென்மையாக விரிப்பாயாக.

பாடல்-682:

அது மட்டுமல்ல
 இன்னொன்றையும் இராமன் மனதில் விரிவாக
தைக்கும்விதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
ஆம்! அந்தக் காகம்
தன்னைக் கொல்ல வரும் அம்பு கண்டு அஞ்சியது
பிரம்மலோகம் சென்றது
பிரம்மன் கோபித்து அனுப்பி விட்டான்
உமையொரு பாகனிடம் சென்றது
திசை எட்டும் சென்றது
ஒவ்வொருவரும் தமது இடத்திற்கு
ஏன் வந்தாய் என மறுத்தனர்”

பாடல்-683:

அந்தக் காகம் வேறு யாருமல்ல
இந்திரன் மகன் ஜெயந்தன்!
அவனது துன்பங்களை
ஆகாயத் தேவர்கள் பார்த்து
“இராமனின் திருவடிகளே உனக்கு அடைக்கலம்
அங்கு சென்று விழு” என்று சொல்லியதும்
அந்தக் காகம் சரண் அடைந்தது
இந்நிகழ்வை அவன் நெஞ்சில் வைப்பாய் அனுமனே.

பாடல்-684:

ஜெயந்தன் இறுதியில்
இராமபிரானிடம் புகலிடம் பெற்றான்
மகிழ்ந்த இராமபிரான்
பிரம்மாஸ்திரத்திற்கு இட்ட ஆணை என்னவெனில்:
“இக்கொடியவனின் இரண்டாம் கண்ணை
அப்புறப்படுத்து” என்றதும்
தெய்வ அம்பு
அந்த காக்கையின் கண்ணைப் பறித்துச் சென்றது
இதனை நினைவூட்டுக.

பாடல்-685:

“தந்தையே உன் திருவடி சரணம்
என்ற தன்மையினால்
முன்பு நீ செய்த குற்றமும் பொறுத்தோம்”
என்று கூறி ஆறுதல் தந்ததை
அவனிடம் சொல்வாயாக.

பாடல்-686:

ஜெயந்தன் அச்சம் நீங்கினான்
இராமனை வணங்கி வானுலகம் சென்றான்
தேவர்கள் பூமழை பொழிய
யானை போன்ற இலக்குவன்
இவ்வெற்றியை அறிவதற்கு
இனிய சொற்களால் இராமனிடம் சொல்க.

பாடல்-687:

என் நாயகனே
உண்மை வழியோனே
என் இனிய உயிர் போன்ற கிளிக்கு
யார் பெயர் வைப்பது என்று கேட்டேன்
“என் தாயாகிய
மாசற்ற கேகய மன்னன் மகளாகிய
கைகேயியின் பெயர் இடுக”
என்று அக்காலத்தில் சொன்ன மொழியை
இராமனிடம் கூறுக.

பாடல்-688:

சீதாதேவி
அடையாளச் செய்திகள் யாவும் கூறிய பிறகு
இனி கூறுவதற்கு ஏதுமில்லை என உணர்ந்தாள் சீதை
தனது திருத்துகிலில் பொதிவுற்ற
பதித்து வைத்திருந்த
சூளாமணியை எடுத்தாள்
சூரியனை வெல்லும் ஒளி வீசியது அதன் சுடர்.

பாடல்-689:

சீதை தனது மலர்க்கையினால்
எடுத்த சூளாமணியைக் கண்டு அனுமன் வியந்தான்
“இது என்ன!” என்று திகைத்து வியப்புற்றான்
வியப்பால் வீங்கினான்
சூளாமணியின் ஒளியினால்
ஏழுலக இருளும் ஓடிப்போனது!

பாடல்-690:

அந்த சூளாமணியின் ஒளி
அரக்கர்களுக்கு ஒரு சந்தேகம் தந்தது
“மேகமண்டலச் சூரியன்
இராவணனுக்கு அஞ்சாமல்
இலங்கையுள் புகுந்துவிட்டானோ!!”
சக்கரவாகப்பறவைகளுக்கும் குழப்பம்
தினசரி சூரியன் போல் எண்ணி
துணையுடன் கூடாமல் சஞ்சலப்பட்டன
தாமரை மலர்கள் சூரியன் என எண்ணி மலர்ந்தன.
சூரிய காந்தக் கற்கள் தீ உமிழ்ந்தன

பாடல்-691:

அந்தச் சூளாமணி
சீதையின் கூந்தல் மேகத்தின் மேல்
ஒளிவிடும் சூரியனை ஒத்திருந்தது
சீதை மேனி போல் சிவந்திருந்தது
இராமனது திருவடி போல்
இருள் நீக்கி ஒளி உமிழ்கிறது.


பாடல்-692:

சீதை சொன்னது இது
“என்னைத் தேடி வந்து
என் இனிய உயிர் காத்த அனுமனே
இந்தச் சூளாமணி இதற்கு முன்பு பல நாட்கள்
என் ஆடையில் இருந்தது
இதுவே அடையாளம் எனப் பெற்றுக் கொள்! கோடி!!”

பாடல்-693:

சீதை தந்த சூளாமணியைத் தொழுதான் வாங்கினான்
தன் ஆடையில் சுற்றிக் கொண்டான்
பாதுகாப்பு செய்தான்
வணங்கினான் அழுதான்
மூன்று முறை வலம் வந்து வணங்கினான்
ஓவியப் பாவை போன்ற சீதை புகழ்ந்தாள்
புறப்பட்டான் அனுமன்
(சூளாமணிப் படலம் முற்றியது)

பொழில் இறுத்த படலம்

பாடல்-694:
வடக்கு திசை வழியே செல்ல
முடிவு செய்தான் அனுமன்
மலர்ச்சோலைகள் நடுவே விரைந்து சென்றான்
இலங்கையில் சிறிய வேலைதானே செய்தோம்
வீரத்திற்கு அது தீமை!” என ந்¢னைத்தான்
வேறு ஒரு செயல் செய்ய நினைத்தான்.

பாடல்-695:

இழி தொழில் அரக்கரை
அடித்துக் கொல்லாமல்
கடலில் சிதறி விழ வீசாமல்
மான் விழி சீதையை
இராமனின் திருவடியில் சேர்க்காமல் நான் எப்படி
இராமனின் அடியவன் என ஆக முடியும்?

பாடல்-696:

நான் எனது வாலினால்
இராவணனின்
பத்து தலைகளையும் இருபது தோகளையும் சேர்த்து
நெருக்கிக் கட்டவில்லையே
கொடிய சிறையில் வைக்கவில்லேயே
போரிலும் வெல்லவில்லையே
இராமனே தஞ்சம் என நான் கூறுவது
பொருத்தமாகவா இருக்கிறது?

பாடல்-697:

ஒன்று செய்வோம்
அரக்கர் கூட்டத்தை
எனது வலிமையால் கலங்கச் செய்வோம்
இராவணன் பார்க்கும் போதே
அவன் மனைவி மண்டோதரியின்
மலர்க்கூந்தல் பிடித்துக் கொண்டு போய்
சிறை வைத்தால் என்ன குறைந்து விடும்!

பாடல்-698:

மேலும் மேலும்
மற்ற ஒன்று எண்ணுவதற்கு நேரம் ஏது?
அரக்கர்களை வருந்தி ஓடச் செய்ய
எனது முழு வலிமையும் பயன்பட வேண்டும்
அரக்கர்களை
கடும்போரில் சிக்க வைக்க
வழிகள் என்ன என சிந்தித்தான் அனுமன்,.

பாடல்-699:

அரக்கர்களை
சினத்தினர் ஆக்க வேண்டும்
கோபமுற வைத்துவிட்டால்
என் நோக்கம் எளிதாகிவிடும்
இங்குள்ள சோலைகளை இறுக்கி
அழித்தால் பேரொலி கேட்கும்
அரக்கர்கள் கோபமுடன் தாக்கவருவர்
என் வலிமையுடன் மோதி உயிர் இழப்பர்
இதுவே என் தந்திரம்.


பாடல்-700:

வந்த அரக்கர்கள்
திருப்பிச் செல்ல முடியாது
வந்தவர்கள் வந்தவர்கள் தான்!
எவரும் திரும்பாமையால்
இராவணன் என்னிடம் மோத வருவான்
அவன் மகுடம் மிக்க தலைகள்
தரையில் உருண்டோட வைப்பேன்
இந்த  வெற்றிச் செய்தியுடன்
இராமனிடம் மகிழ்ந்து செல்வேன்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 21 November 2013

சுந்தர காண்டம் 651 -675



பாடல்-651:

சீதா தேவியே!
துன்பம் தாங்க முடியாமல் தாங்கள் உயிர்விட்டு விட்டால்
இராமபிரான் ஏழு உலகங்களையும் அரக்கர்களையும்
தனது அம்பினால் அழித்தாலும்
பழியும் பாவமும்
நீங்காது அல்லவா?

பாடல்-652:
பொன் போன்றவளே
“மூவுலக அரக்கர்களையும் கொல்வேன்” என்று
ஓங்கிய போர் வில்லாளன் இராமபிரான்
உன்னை இப்படி ஒரு சிறையில்  இட்ட பிறகு
எப்படி சாந்த குணம் கொள்வான்!
வியப்பாயிருக்கிறது அம்மா உன் பேச்சு!

பாடல்-653:

இராமன் இன்னும் இலங்கையில் தோன்றவில்லை
உண்மைதான்
அதற்கு வலிமையான தகுந்த காரணம் இருக்கிறது
அரக்கர்களைக் கொல்லாமல்
அவன் கடும் சினம் தணியாது
உன்னை மீட்காமல் போனால்
உன்னை உயிரோடு மீட்காமல் போனால்
மண்ணும் விண்ணும் பழிக்காதோ!
அரக்கர்கள் தப்பிட வேறு இடம் ஏது!
பாடல்-654:
அம்மா!
ஆக்ஞை சக்கரம் உடைய இராமனின் அம்புகள்
குளிர் ஆழக்கடல் மட்டுமல்ல
பதினான்கு உலகங்களையும்
ஊழிக்கால நெருப்பு போல உண்டுவிடாதா!

பாடல்-655:

“தேவரின் பகையான அரக்கரைக் கொன்றான்
தீய செயல்களை எழாமல் தடுத்தான்
தகுதியானவர்களை மீட்டான்
நல்ல வினைகளையே எந்த நாளும்
நிலைத்து வாழ இடம் கொடுத்தான்” என்று புகழ்ச்சியாக
நம்புதலாக
எடுத்துக் கொள்ளக் கூடாதோ அம்மா!

பாடல்-656:

உன்னால் உலகில்
நல்ல அறம் உண்டானால்
அது நல்லது தானே?
நீ ஒருத்தி அரக்கர் துன்பம் நீங்காமல்
சில நாட்கள் பிரிவு இடர் தீராமல் தங்குவதால்
உலகினர் அனைவரும்
நல்ல நாள் காணப்போகிறார்கள் என்றால் நல்லது தானே!


பாடல்-657:

மனம் புளித்து வெறுக்கப்படும் முட்கள் போன்ற அரக்கர்கள்
உடம்பு புண்ணாகி
அவர் தம் இரத்தத்தில்
பேய்கள் குடைந்து குடைந்து
குளிக்க வைக்கும் வரை இராமபிரான் விடப்போவதில்லை
இராவணனுக்கு அஞ்சி ஒளியும் தேவர்
அச்சம் நீங்கி
மணம் மலர களிக்கும் நல்வினை நடக்கத்தான் போகிறது
அதை நீ காணாயோ.

பாடல்-658:

ஊழிக்காலத்தின் இறுதிக்காலத்தில்
இடி விழுந்தது எப்படியோ அப்படிப் பாயும்
இராமனின் ஒளி மிக்க அம்பு!
அந்த அம்பு பிளந்து
புண்ணிலிருந்து பாயும் குருதிப் பெருக்கினால்
அலைகடல்கள் ஏழும் ஒன்றாக நின்று
பேரொலி இரைச்சல் கேட்பாய்
அதனை நீ காணாயோ!

பாடல்-659:
கர்ப்பம் கொண்ட அரக்கியர்கள்
பெரும் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள்
சோர்ந்து போவார்கள்
தமது தாலிகளை அறுத்து எரிவார்கள்
அவை
வான் உயரம் எழுந்த மலையினை விஞ்சும்
தாண்ட முடியாத வளர்ச்சியோடு குவியும்

பாடல்-660:

வானம் வரையில் நீண்ட பேய்கள்
கொடி இறகுகள் கொண்ட கழுகுக் கூட்டங்கள்
அரக்கர்களின் இரத்த வெள்ளத்தில் மூழ்கும்
அந்த இரத்தக்கறை நீங்க
அரக்கியர்களின் கண்ணீரில் மூழ்கும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-661:

இராமன் வெல்லும் காலத்தில்
கைகளினால் அடித்து ஒலிக்கப்படும் மத்தளங்கள் ஒலி
கைகளினால் தடவி ஒலிக்கப்படும் யாழ்கள் ஒலி
பாட்டிசை ஒலி கேட்பாய்
இது மட்டுமல்ல
தேவமங்கையர் நடனமாடிய
இலங்கையின் ஆடல் அரங்குகளில்
குரங்குகள் களித்துக் கூத்தாடுவதும் காண்பாய்.

பாடல்-662:

குற்றம் புரிந்த அரக்கர்களின்
புண்கள் இரத்தம் சொரிந்து
அலை பொருந்திய ஆறாகும்
ஆறு இழுப்பதால்
மலைகள் ஒத்த பெரிய உருவங்கள் மிக நெருங்கும்
அதனால்
பெரிய கடல் தூர்ந்து மேடாகும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-663:

சீதை ஒரு பெரு நெருப்பு
இலங்கையின் நடுவில் தங்கியதால்
இராமனது அம்பு எனும் பெருங்காற்று வீசி
தீவினை அரக்கர்கள் எனும் கரிகள் வெந்து சாம்பலாகிச் சிதறும்
அப்போது
இலங்கை எனும் பொன் உருகுவதை நீ காண்பாய்,.

பாடல்-664:

இராமனது அம்பினால்
இராவணன் இறந்து விழுவான்
காக்கைகள் அவன் தலையில் தாவும்
நல் வினைப்பயன் போன்ற சீதையாம் உன்னை
நோக்கிய கண்கள் இருபதினையும்
கூர்மையான மூக்கினால் கொத்தி உண்ணக் காண்பாய்.




பாடல்-665:

முற்காலத்தில்
இராவணனிடம் தோற்றுப்போன
திசை யானைகள் நாணமுற்று
முகம் திருப்பி நின்றன
நஞ்சாம் இராவணன் தலைகள்
இராமனது அம்பினால் அறுபட்டு உருண்டு ஓடி
திசை யானைகளின் கால்களை அடையும்
இதுவும் நீ காண்பாய்.

பாடல்-666:

நீலவானத்துக்கு வேர்த்தது போல
ஆங்காங்கே தோன்றும்
அழகிய கொடிகள் உடைய
இலங்கை நகரில்
இராமபிரான் அம்பு மழை பொழிவான்
கொழுத்த இரை கிடைக்கும் என நம்பும் பேய்கள்
புழுதியுடன் கூத்தாடுவதை
நீ காணத்தான் போகிறாய்.

பாடல்-667:

அரக்கர்கள் கரு நீல நிறமானவர்கள்
அவர்களது இரத்த வெள்ளம்
உப்பு நீர்க்கடல் நிறைந்து
ஊரெல்லாம் நுழைவதை நீ காண்பாய்
உலகம் கடைசியாக அழியும் வினாடியிலும்
உயிர் தின்னும் ஆசை விடாத எமனுக்கு
அளவுக்கு அதிகமாக
உயிர்களைத் தின்றதால் வெறுப்பு வந்து
முன்னர் தின்ற உயிர்களை
வெளியில் கக்குவதை நீ காண்பாய்.

பாடல்-668:

நல் மணம் வீசும் கற்பகமரங்கள் நிறைந்த
சோலையில் உள்ள குளங்களில்
தெய்வ மகளிர் போன்ற பெண்களோடு
அரக்கர்கள் குளிப்பார்கள்
அப்போது
ஒரு குரங்கின் வளைந்த வாலை
இன்னொரு குரங்கு பிடித்துக் கொண்டு
மாலை போல கூட்டமாகக் குளிக்கும்.
அதை நீ காண்பாய்.

பாடல்-669:

எதற்கு இன்னும்
பலப்பல சொல்வானேன்?
இராமனது தெய்வ அம்புகள்
இலங்கை அரக்கர்களை கொல்லும்
பிறகு அதுவும் தாண்டி மூன்று உலகிலுமுள்ள
அரக்கர்களும் இறப்பார்கள்
அதுவும் நீ காண்பாய்.

பாடல்-670:

இன்னும்
ஒரு முழு மாதத்திற்கு
துன்பத்தில் நீ உழல வேண்டியதில்லை
யான் இராமனைச் சென்று காண வேண்டிய
ஒரு செயல் தான் தேவை
அதற்குப் பின்
ஆண்மையாம் இராமபிரான்
ஒரு கணமும் தாமதிப்பானோ.

பாடல்-671:

“இராமனுக்கு உயிர் உண்டு” என்று
சொல்லும் அளவு தான்
அவனது உயிரின் நிலைமை உள்ளது
இராமபிரான் செல்லும் வழியில் உள்ள
காடுகள் முழுதும்
பூக்கள் முழுதும்
தளிர்கள் முழுதும்
சோலைகள் முழுதும் பொரிந்து தீய்ந்து விட்டன
இராமனின் திருமேனியின்
பிரிவு எண்ணங்கள் தீண்டியதால்!




பாடல்-672:

சுருங்கக் கூறினால்
இராமனுக்கு இப்போது எந்த உணர்வும் இல்லை
சோகம் என்பது
அறிவு தெளிந்து இருப்பவருக்குத் தானே?
மேகம் வந்து இடிந்து வீழ்ந்தாலும்
ஐந்து தலைப்பாம்பு
தோள்களிலும் மார்பிலும்
பற்கள் அழுந்தக் கடித்தாலும்
இராமனுக்கு எந்த உணர்வும் தோன்றாது!

பாடல்-673:

மத்தினால்
கடையப்படும் தயிர் போல
அவன் உயிரும் புலன்களும் தள்ளப்படுகின்றன
அதனால்
பைத்திய அளவும்
உனது பிரிவில் பிறந்த வேதனை அளவும்
எவ்வளவு என  எண்ணிட முடியுமோ.

பாடல்-674:

“இப்படிப்பட்ட நிலை உடையவன்
உனைப் பிரிந்து உயிர் தரிப்பான்
என நீ எண்ணுவது பொய் நிலை!
யான் புகல்வன அனைத்தும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல காட்டுவேன்
மெய்நிலை உணர்ந்து
எனக்கு விடை தந்தருள்க” என்றான்.

பாடல்-675:

அன்னையே
 இராமனின் தேவியே
தீர்த்தனாகிய இராமனும்
குரங்கு குல அரசன் சுக்ரீவனும்
உன்னைப் பற்றிய வார்த்தைகள் கேட்டு
மகிழ்வதற்கு முன்னமே
பெரிய கடல் தூர்க்கப்படப் போகிறது!
இலங்கையை முற்றுகையிட்ட
குரங்குகளின் ஆரவாரம் கேட்கப் போகிறது
அது கேட்டு
நீ மகிழ்ந்திருக்கப் போகிறாய்.

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 14 November 2013

சுந்தர காண்டம் 626-650



பாடல்-626

“பிரம்மனிடம் இராவணன்
பெற்ற சாபம்
எனக்குத் தெரியாது திரிசடை கூறும் வரை!
ஆம்
திரிசடை என் அச்சம் போக்கி கருணை தரும் தாய்
சத்தியமும் ஆண்மையும் உள்ள
ஒளிவீசும் மகுடம் கொண்டவிபீஷணனின் மகள்.

பாடல்-627:
அந்த சாபம்
இராவணம் மீது இருப்பதால் தான்
அறம் வெல்லும் என்று நம்பி வாழ்கிறேன்
இராமனின் வலிமை வெல்லும் என வாழ்கிறேன்
என் கற்பின் தூய்மை உலகறிய
காட்ட இயலும் என்று நம்புகிறேன்.

பாடல்-628:
அரக்கன் இராவணன்
இளவல் இலக்குவன் அமைத்த பர்ணசாலையை
தண்டகாரண்யத்திலிருந்து என்னோடு சேர்த்து
அகழ்ந்து கொண்டு
பெயர்த்து எடுத்து இங்கு வைத்துள்ளான்
உண்மை உணர்த்த
உன் கண்களால்  அனுமனே நீ பார்ப்பாயாக.

பாடல்-629:

ஆதலால் இந்த இடம் விட்டு
நான் நீங்குவது இயலாது அனுமா!
இராமனது திருமேனி ஒத்திருக்கின்ற
புதிய தாமரைமலர்கள் கொண்ட
பொய்கை நீர் வரை
சில சமயம் நடப்பது மட்டும் உண்டு -
தளரும் உயிரைக் காக்க!

பாடல்-630:

அன்பிற்கினிய சீதை
முடிவாகச் சொன்னது இது:-
“ஆதலால் அனுமனே
நீ கூறியது காரியம் அல்ல
வேத நாயகனிடம் திரும்பிச் செல்
அதுவே உனது காரியம்”
குற்றமற்ற அனுமன் கூறியது:-

பாடல்-631:

அடுத்த கணம் ஆகும்முன்
அனுமன் ஐயம் நீங்கினான்
துன்பமும் போனது
குற்றமற்ற அனுமன் கூறியது இது :-
“நன்று நன்று
உலகை உடைய நாயகனின்
துணையான பெருந்தேவியின்
தவத் தொழில் இது” என
சிந்தை களித்தான் அனுமன்.

பாடல்-632:

“இராவணனால் இந்த உலகம் இருளும் காலம் இது
இனி
தெளியும் காலம் வரும்
சில பகல்கள் பொறு
உயிரைப் போற்றி வைத்திரு
மருளும் மன்னவனுக்கு
யான் சொல்ல வேண்டிய வாசகம் அருள்வாய்” என
சீதாப்பிராட்டியின் திருவடி தொழுதான்.

பாடல்-633:
“நீதியோனே
உன்னை நோக்கிப் பகர்கிறேன்
இன்னும் இங்கு ஒரு மாதம் தான் இருப்பேன்
பிறகு
உயிரைப் பிடித்து வைத்திருக்க மாட்டேன்
அந்த இராமன் மீது ஆணை
இதனை மனதில் கொள் நீ”

பாடல்-634:

“மாலை தவழும் திருமார்பனுக்கு
மனைவியாக இல்லை எனினும்
தயவு எனும் ஈரம் அகத்தில் இல்லை எனினும்
தனது
வீரத்தைக் காத்துக் கொள்ளச் சொல்”
இதனை நீ வேண்டுவாயாக.

பாடல்-635:
பிறர் புகழும்
வெற்றி உடைய
இளையவன் இலக்குவனுக்கு
இந்த ஒரு வார்த்தை கூறுவாய் அனுமனே
“இராமன் கட்டளையால்
பஞ்சவடியில் எனைக் காத்திட்டவனுக்கே
நடுவில் ஏற்பட்ட
கொடிய சிறை வீட்டிலிருந்து என்னை
மீட்கும் பொறுப்பு உள்ளது”

பாடல்-636:
“அனுமனே இன்னும் ஒரு மாதம் தான்
நான் செய்தவம் தீர்ந்துவிடும்
அதற்குள் இராமன் வராவிட்டால்
புதிதாக பெருகும் கங்கை நீரில்
அடியேனுக்கும்
தனது சிவந்த கைகளால்
இறுதிக்கடன் செய்யச் சொல்லி செப்புவாய்”

பாடல்-637:
“இலங்கையில் இறக்கின்ற
சீதையாகிய நான்
சிறப்புமிகு மாமியார் மூவரையும்
தொழுது வணங்கினாள்” என
அறத்தின் நாயகன் இராமனிடம் சொல்
என்னிடம் அருள் இல்லாத இராமன் மறந்து விட்டால்
ஐயா அனுமனே ! நீ தெரிவிக்க மறக்காதே”

பாடல்-638:
மிதிலை நகர் வந்து என் கரம் பற்றி
மணம் செய்த நாளில்
“இந்த உலகப்பிறவியில் உன்னைத் தவிர
இரண்டாவதாக ஒரு மாதரை
சிந்தையாலும் தொடேன்” என்ற
செம்மையான வரம் தந்த வார்த்தையை
 இராமபிரான் திருச்செவியில் கூறு அனுமா..!

பாடல்-639:
“இராமனால் மீட்கப்படாமல்
இலங்கையிலேயே நான் இருந்து
இனிய உயிர் மாய்ந்து ஒஓன்உம்
மீண்டும் வந்து பிறந்து
இராமன் தன் மேனியைத் தீண்டுகின்ற
தீவினை தீர்ந்த வரத்தை
தொழுது வேண்டினாள் சீதை”
என்று விளம்புக அனுமனே.

பாடல்-640:
இராமன்
அரச பதவி ஏற்று ஆள்வதைப் பார்க்கவில்லை
சிறந்த மணிகளோடு கழுத்தில் கயிறு கொண்ட
யானை மீது பவனி வருவதும் பார்க்கவில்லை
பலப்பல திருநாட்களுக்கு ஏற்ற
இராமபிரானின் கோலங்கள் காண விதி இல்லை
என்ன சொல்லி என்ன பயன்
என் ஊழ்வினை எண்ணி நோகிறேன்.

பாடல்-641:
இராமன் எனை மீட்க இங்கு இலங்கை வரமாட்டான்
என்னை மீட்க வரமாட்டான்
தன்னையே எண்ணித் தளர்கின்ற
கோசல மக்களே அவனுக்கு முக்கியம்
அன்னையின் ஏக்க நோயே முக்கியம்
நந்தி கிராமத்தில்
பரதன் அனுபவிக்கும் இன்னல் நோய் தீர்வதே முக்கியம்
அயோத்தி தான் செல்வான்
இங்கு எப்படி வருவான்!

பாடல்-642:

அனுமா இதுவும் கூறு:
“என் தாய் தந்தைக்கும்
உறவினர் முழுமைக்கும்
என் வணக்கம் வ்¢ளம்புக
கவியின் மன்னன்
வானரத் தலைவன் சுக்ரீவனிடம்
சுந்தரத் தோளன் இராமனை
தொடர்ந்து காத்திடச் சொல்க
அழிவிலாத திருநகர் அயோத்திக்கு
அரசனாக்கச் சொல்”

பாடல்-643:

இப்படிப்பட்ட சொற்களை
சீதா தேவி கூறியதும்
“தையலே! இன்னமும்
துன்பப் படுதலை விடவில்லை” என்றான் அனுமன்
இனிய உரைகள் இயம்புவான் இப்படி:

பாடல்-644:

நீ இலங்கையில் இறப்பாய்
அதுவே உண்மை
உன் பிரிவால் தளரும் இராமன்
நீ இறந்தும் உயிர் வாழ்வான் தானே
காட்டைவிட்டு
அயோத்தியில் புகுந்து
அரச மகுடம் அணிவான் தானே
இதுவும் உண்மை தானே

பாடல்-645:

கற்புக்கரசியே
உன்னைப் பிறர் வெறுத்து விலகி ஓடுமளவு
கொடுமைச் சிறையில் வைத்த
இராவணன் உயிர் வாழ்வானாம்
பொய்க்காத வில்லை உடைய இராம இலக்குவன்
பின் வாங்கிப் போவார்களாம்
இந்த சொற்களோடு ஒப்பிட
எந்த வார்த்தையாவது உண்டா?

பாடல்-646:

நல்லவளே
உன்னை நலியச் செய்த தீயர்வர்களை
கொல்லமாட்டோம்
எமது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு
இராமனிடம் எல்லோரும் செய்வோம்
எம் அரசன் இராமன்
தனது வில்லினை
புத்தம் புதிதாக வைத்திருக்க வேண்டுமல்லவா!

பாடல்-647:

கடக்க முடியாத
நீந்த முடியாத துன்பக்கடலில்
பங்கெடுத்துக் கொண்டு நீந்தாமல் நாங்கள் இருந்தால்
தேயாத பெரும் செல்வமான
கிஷ்கிந்தை அரசை ஈந்தவனுக்கு
உன்னை மீட்டுத் தராமல் நாங்கள் ஓய்ந்தால்
மீட்காமல் சுகம் பெற்றால்
எம்மை விட உயர்ந்தவர்கள்
யார் இருக்கப் போகிறார்கள்?

பாடல்-648:

“நல் பலன் அளிக்கும் வேள்விகள் புரியும்
நல்லோர்களை முனிவர்களை
கொன்று தின்ற அரக்கர்கள் குடலை
பேய்கள் தின்னும்படி கொல்வேனே தவிர
நாடு திரும்பமாட்டேன்” என
தண்டகாரணிய முனிவர்களுக்கு
வாக்களித்த இராமனுக்கு
உன்னை மீட்பது இயலாத காரியமோ.

பாடல்-649:

அகைவர்களால்
சிறை வைக்கப்பட்ட உன்னை
“மீட்டோம்” என்று சொல்லமுடியாமல்
வெறும் கையோடு திரும்பினால்
நாட்டு மக்கள் ஏற்பார்களா
நல்லவர்கள் ஏற்பார்களா
நல்ல நூல் கற்றவர்கள் ஏற்பார்களா

பாடல்-650:

கற்புடைய சீதை
நல்குணங்கள் அணிகலனாக அணிந்த சீதை
சத்தியம் தவறாத சீதை
அறம் தீண்டாத அரக்ககள்
தீண்டும் முன்னே இறந்தாள்” என்று
மனம் தேறி
திரும்பிப் போனால்
அது என்ன வீரமா?

--அனுமனோடு மீட்போம்.

Thursday, 7 November 2013

சுந்தர காண்டம் 601-625


பாடல்-601:

சீதை உரைத்ததும்
பெருந்தன்மை கொண்ட அனுமன்  திருவடி தொழுதான்
“அருந்ததி போன்றவளே
இராமனின் அடியவராக
குரங்குக் கூட்டத்தின் தலைவர்கள்
கடல் மணலை விட பலராவர்
அந்த வானரக்கூட்டங்கள்
ஏவிய வேலைகள் செய்யும் தன்மை உடைய ஒருவனாக வந்துள்ளேன்”
என்றான் அனுமன்.

பாடல்-602:

அன்னையே கேள்
எமது இராமனின் வானர சேனை அளவு எவ்வளவு?
எழுபது வெள்ளம்!
இந்தக் கடல் நீர் வெள்ளம் ஒப்பிட்டால் பள்ளத்து நீர்!
அவர்கள் அனைவரும்
ஒரு கையால் குடிக்கவும் கடல் போதாது
இலங்கை இன்று வரை தப்பிப் பிழைக்க காரணம்
அரக்கர் காவல் செய்யும்
இலங்கை இருக்கும் இடம் தெரியாமை தான்
தெரிந்துவிட்டால் பிழைக்காது இலங்கை.

பாடல்-603:
வாலியின் சொந்தங்கள் பல
வாலியின் தம்பி சுக்ரீவன்
வாலியின் மகன்கள்
அங்கதன்- வசந்தன் - துமிந்தன்
வெற்றி உடைய குமுந்தன்
நீலன் -இடபன்
குமுதாக்கன்- பனசன்
சரபனுக்கு மூத்தவனாகிய சாம்பவான்
எமனை நிகர்த்த துன்மர் மற்றும் சாம்பன்
கவயன் - கவயாக்கன்
உலகெல்லாம் அறியும் உத்தமசங்கன்
வினதன் - துவிதன் - நளன்.

பாடல்-604:
இது தவிர படைத்தலைவர்களும் பலர்
தம்பன் - ஒப்பற்ற தூமன் - ததிமுகன் - சதவலி
“இவர்கள் படைத்தலைவர்கள் மட்டுமல்ல
இராமனின் அம்பு போல் தப்பாமல் உதவுவர்
இராமபிரான் தலைமை கீழ் இயங்கும்
வானரங்கள் தொகைக்கு எல்லை இல்லை எனலாம்
கச்சணிந்த முலையாய்!
 இங்குள்ள அரக்கர்களின் பெருந்தொகை
இராமனது துணை வலிமை முன்பு குறுந்தொகை!”
என முடித்தான் அனுமன்.

-உறுக்காட்டு படலம் நிறைவு.



சூளாமணிப்படலம்

பாடல்-605:

அனுமன் கொண்ட உணர்வுகள் இவை:-
“உலகின் அம்மா இவளுக்கு
உவமை சொல்தல் எளிதோ?
தாமரை வாழ் இலஷ்மி போன்ற
இவள் இன்னல் கொள்கிறாள்.....
அண்டம் முதலான சகலத்திற்கும் நாயகனாம்
இராமனின் ஆவி இவளை
எடுத்துக் கொண்டு இராமனிடம் செல்தலே கருமம்”

பாடல்-606
அனுமன் மொழிந்தான்:
“அடியேன் உரை கேட்டு கோபிக்க வேண்டாம்
இராவணன் கொன்றபின்
அவனை வெல்லுவதில் பலனில்லை
பல வார்த்தைகள் பேசுதலில் என்ன பயன்?
இராமனின் எதிரில் நின்னைக் காட்டுவேன்
நீயே காண்க !அதற்கு இதுவே காலம்”

பாடல்-607:

“பேரழகு பொற்கொடியே
ஒரு நொடிதான்
 ஒரே ஒரு நொடி தான்
இராமன் தங்கியுள்ள
மலையிலே உன்னோடு குதிப்பேன்
மென் மயிர் அடர்ந்த
என் தோளில் அமர்ந்து இனிய உறக்கம் கொள்!”

பாடல்-608:
சுருள் கூந்தலாளே...நெடியோன் இராமன் முன்
நினது நிலைமை கண்டும்
வெறும் கையோடு எப்படிப் போவேன்
அரக்கர்கள் தொடர்ந்தால்
சிதைந்து சிதறும்படி அழித்து
மனச்சினம் முடிப்பேன்

பாடல்-609:
“இலங்கையோடு பெயர்த்து எடுத்துச் செல்”
என்றாலும் பெயர்ப்பேன்
வலது கையால் ஏந்துவேன்
இடக்கையால் எதிரிகளைப் பொடிப்பேன்
வீரக்கழலும் வில்லும் கொண்ட
இராம இலக்குவர் திருவடிகளில்
தாழ்ந்து நிற்பேன்
இது எனக்கு ஒரு வேலையே அல்ல”

பாடல்-610:

“அருந்ததி போன்றவளே
அழகிய இராமன் அருகில் சென்று
உன் உயிர் மருந்து அனைய தேவி
நெடிய வஞ்சனை கொண்டோர் சிறையில்
பெரிய துயரத்தோடும்
விடுபட வழியில்லாமல் இருந்தான்” எனச் சொன்னால்
என் அடிமைத் தொழிலால் என்னதான் பயன்.

பாடல்-611:
இராமபிரானிடம்
புண்படாத தோள்களுடன் சென்று
அரக்கர்கள் வலிமை சொல்வேனா?
என் உயிர் பாதுகாப்புக்காக
சீதையைக் கண்டு வரவில்லை என்பேனா?
சீதையைக் கண்டு மட்டும் வந்தேன் என்பேனா?

பாடல்-612:
“அன்னை சீதையே...
இங்குள்ள மதில் சூழ் இலங்கையை
நெருப்பால் உருக்க வேண்டுமா?
வலிமைமிகு இராவணனை அழித்து
அரக்கர் குலம் முழுதும் கொன்று
போர்த்தொழில் செய்க !பிறகு செல்க” என்று
கட்டளையிட்டாலும் செய்கிறேன் இப்போதே! இன்றே!”

பாடல்-613:
“பிறை நெற்றி பெற்றவளே
நான் உன்னை எடுத்துச் செல்வேன்
இராமபிரானுக்கு மனத்துயர் நீங்கித் தெளிவு வரும்
பிறகு
அரக்கர் கூட்டம் முழுதும் அழியும்
கொன்று அழிக்கப்படும்
அழிவற்ற இந்த உலகுக்கு
அவர்கள் செய்த துயரை நீக்கிட அது நல்லதாகும்.

பாடல்-614:
“இனிய சொற்கள் பேசும் இளவஞ்சிக் கொடியே
அடியேன் தோளில் விரைந்து ஏறுக
இனி சொல்லக் கூடியது வேறொன்றும் இல்லை
இதனை நான் செய்த நல்வினைப் பயனால்
அடியேனுக்கு அருள வேண்டும்!” என
சீதையின் திருவடி வணங்கினான்.

பாடல்-615:
அனுமன் கூறும் நல்வார்த்தைகள்
தாய்ப்பசுவுக்கு முன்னே செல்லும்
கன்று ஒத்திருந்தது
அதனைக் கேட்டாள் தூய சொற்கள் கொண்ட சீதை
“சொன்னதை சொன்னபடி செய்தல்
இவனுக்கு அரியதும் அல்ல சிரமமும் அல்ல” என நினைத்து
பின் வருவன கூறினாள்:-

பாடல்-616:
“அனுமனே! அன்பின் வடிவனே
உனது ஆற்றலின் முன்
இது அரிய பெரிய செயல் அல்ல
நீ நன்கு ஆராய்ந்துள்ளாய் .. செய்தும் முடிப்பாய் எனினும்
பெரிய அறியாமையோடு
பேதைத் தன்மை மிக்க
பெண்மைக்கே உரிய
சிறிய அறிவும் என்னிடம் உள்ளது”

பாடல்-617:
“என்னை எடுத்துச் செல்லும்போது
கடல் நடுவில் அரக்கர் சூழ்ந்தால்
போரிடவும் முடியாது
என்னைக் காப்பாற்றவும் முடியாமல் தடுமாறும்
துணையற்றவன் ஆவாய்”

பாடல்-618:

“இன்னொரு  காரணமும் உண்டு
இராமபிரான் வெற்றி வில்லுக்குப் பழி உண்டாகும்
என்னை வஞ்சித்த
நாய் போன்ற இராவணனின்
வஞ்சகத் தொழிலையே
நீயும் செய்ய நினைத்துவிட்டாயா?
இதனை நல்ல செயல் என்பார்களா?யோசி”

பாடல்-619:
“போர் நிகழ வேண்டும்
எம் கொற்றவன் வில் தொழில் நடக்க வேண்டும்
தேவர்கள் பார்க்கும்போதே என் உடலை
காம இச்சையுடன் நோக்கிய
அரக்கனின் கண்களை
காகம் குத்தித் தின்ன வேண்டியது நிகழாமல் இன்னும்
நான் உயிருடன் இருக்கிறேன் என்பது பொய்!”

பாடல்-620:
நாணமில்லாத அரக்கியர்கள்
சூர்ப்பனகை போல மூக்கு அறுபட வேண்டும்
அவமானம் அடைந்து
மங்கல நாண் அறுபட வேண்டும்
இதனை இராம இலக்குவர் வில் தான் விளைவிக்கும்
அது வரை
என் நாணம் சிறப்பு பெறாது.

பாடல்-621:
“பொன்மயமான திரிகூட மலைமேல்
அமைந்த இலங்கை
இனி
பகைவர்களின் எலும்பு மலை பெறச் செய்தால் தவிர
எனது நற்குடிப்பிறப்பும் ஒழுக்கமும்
மாசற்ற கற்பும்
மற்றவர்களுக்கு எப்படி காட்டுவேன்?”

பாடல்-622:
“பிறருக்கு
அல்லல் தருவதையே தொழிலாகக் கொண்ட
அரக்கருடைய இலங்கை மட்டுமல்ல
எல்லையிலா உலகங்கள் யாவும்
என் சொல்லினால் சுடுவேன்
அப்படிச் செய்தால்
அது
தூயவன் வில் ஆற்றலுக்கு அழுக்கு என
அச்செயலை செய்யாமல் வீசி விட்டேன்”

பாடல்-623:
“என்னை நீ எடுத்துச் செல்லாதே!
காரணம்  இன்னொன்றும் உண்டு
என் உரை கேள் அனுமனே மெய்யனே
ஐம்பொறிகள் அடங்கிய உன்னையும்
உலகம்
ஒரு ஆண் என்று கூறும்
ஆதலால் இராமனின் திருமேனி தவிர
உன் உருவம் தீண்டுதல் தகுமோ?

பாடல்-624:
“அற்பன் இராவணன்
இவ்வளவு நீண்ட காலம் என்னைத் தீண்டாமல் உள்ளான்
தீண்டியிருந்தால் அவன்உடம்பில் உயிர்
கண் இமைக்கும் முன்னே பொருந்தாமல் போயிருக்கும்
அதனால்தான் -
வலிய கையினால்
நிலம் பெயர்த்து
நிலத்தோடு என்னை எடுத்துக் கொண்டு போனான்”

பாடல்-625:

தாமரைப்பூவில் தோன்றிய பிரம்மனின் சாபம் ஒன்று
 என் உயிரைக் காத்து வருகிறது
“இராவணனே...
உன்னைக் கூடும் விருப்பமில்லாப் பெண்களைத்
தீண்டினால்
தெய்வத்தன்மை மிக்க உன் பத்து தலைகளும்
நிலத்தில் சிதறி விழும்”
என்பதே அது!

--அனுமனோடு மீட்போம்.

Sunday, 3 November 2013

சுந்தர காண்டம்-576 -600





பாடல்-576:

எங்கள் குலத்தலைவன் சுக்ரீவன் அறிவீர்களா?
வானில் ஒற்றைச் சக்கரத்தில் செல்லும்
சூரிய குலத்துக்குத் தலைவன்
அவன் வாழும் ருசிய முக மலைக்கு
இராமனும் இலக்குவனும் வந்தனர்
இராமபிரானின் உயிர் நண்பனாக
சுக்ரீவனும் தேவர்களும் நட்பு கொண்டனர்.

பாடல்-577:

உயர் வேதங்களும் உயர் ஞானங்களும்
காணமுடியா இராமன்
சீதையைத் தேடி வந்ததைக் கூறினான்
தன் துன்பம் கூறி மனம் புண்பட்டான்
மனநோய் மிகுதியாக விம்மினான்
அப்போது
குரங்குகள் நாங்கள்
நீ விட்டுச்சென்ற அணிகலன்கள் காட்டினோம்
அதைக் கண்டு மயக்கமுற்று விட்டான்.

பாடல்-578:

ஒளிமிகு வேல் படை மிக்கவன் இராமன்
சோர்வின் உச்சி அடைந்து விட்டான்
தூயவளாகிய உன் நகைகள் காட்டினோம்
அமுதம்தெளித்தாலும்
தீராத பெரிய நோய் அவனை அடைந்தது
ஆறாப்பிணி கொண்டனன்
எவரால் அதனைப் போக்க முடியும்.

பாடல்-579:

மனம் அயர்வு உற்று மிகச் சிரமப்பட்டு
மனம் தெளிந்தான்
ரிஷிய முக மலைக்கு அப்பால்
கிட்கிந்தம் எனும் மலை உள்ளது
அங்கு தான் வாலி வாழ்கிறான்
தனது வாலிலே இராவணனைக் கட்டித் தொங்கவிட்டு
கடல்களைத் தாவி
வலிமையோடு வாழ்பவன் வாலி.

பாடல்-580:

அத்தனை வலிவு மிக்க வாலியை
ஒரே அம்பினால்
வீழ்த்திய வலிமையாளன் இராமன்!
அது மட்டுமா
வாலி அபகரித்த அரசை மீட்டு
சுக்ரீவனுக்கே மீட்டும் அளித்தான்
“மழைக்காலம் முடிந்ததும்
சீதையைத் தேடிட
சேனையோடு உதவுக” என்றான் இராமன்
அதன் பின் நான்கு மாதங்களும் தங்கியிருந்தான்.

பாடல்:581
முன் நடந்ததும் அனுமன் அறிவான்
மூன்று காலமும் அறிவான்
அப்படிப்பட்ட அனுமன் சொன்னவை இவை:-
“வில் நெற்றி பெற்ற சீதா தேவியே
சுக்ரீவன் படைகள் வந்துசேர நான்கு மாதம்  ஆகின
நான்கு திசைகளும் அதற்கு அப்பாலும் தேடிட
எம் இனம் அனுப்பினான் இராமன்
தெற்கு திசையில் தேட எனக்கு உத்தரவு
இதுவே இதுவரை நிகழ்ந்தது”
 
பாடல்: 582
அன்பன் அனுமன் உரை கேட்டாள் சீதை
உள்ளம் நொந்தனள்
சிறந்த பொறுமை மிக்க இராமனுக்கே
இத்தனை துன்பமா என நினைத்தனள்
மனம் இரங்க இரங்க அவள் எலும்புகள் உருகின
அவள் இதயம்
இன்பமும் துன்பமும் ஒன்றாய் சுமந்தன
தனக்காக
இராமன் பிரிவில் உருகுகிறான் என்ற இன்பம்
இராமன் தன்மீது
இத்தனை அன்பு வைத்து துயரம் கொள்கிறானே என்பதால் துன்பம்!

பாடல்:583
துன்புறும் மனமே கொண்ட சீதை
கண்ணீர் வழிந்து வழிந்து
வெப்பமான உந்திச்சுழியில் உலரும் சீதை
“ஐயனே ! அளக்கமுடியாத கடலை
எப்படிக் கடந்து வந்தாய்?” என்றனள்

பாடல் : 584
“ஒய்வில்லாத மாயை எனும் பெரும் கடலை
உனது இராமனின் திருவடி பற்றுவோர் எளிதாக
கடக்கிறார்கள் அல்லவா? அதுபோல்நானும் வான் காற்றில் ஏறி
கருங்கடல் கடந்தேன்” என்றான்

பாடல்-585
முத்துக்களைவிட
நிலவைவிட
அழகிய  புன்முறுவல் பூக்கும் சீதை கேட்டாள்:
எப்படி உன் உடல் இத்தனை சிறிதாயிற்று?
அணிமா முதலிய எட்டுவகை சித்திகள் கற்றாயோ?
உன் தவத்தின் பயனோ! எனக்குச் சொல்க ”

பாடல்: 586
எப்படி எனக் கேட்கும்போது
வீரன் ஒருவன் பதிலா சொல்வான்? செய்தே காட்டினான்
ஆம் -
சிறிய மூர்த்திவடிவம் விட்டு பெரும் தோளுடன்
விஸ்வரூபம் எடுத்தான் விண்ணை முட்டினான்
தலை நிமிர்ந்தால்
உச்சி வான் இடிக்கும் என்கிற அளவு
உயரம் அடைந்தான் அனுமன் சற்றே தலை வளைந்தான்

பாடல்-587:

அனுமனின் பெரும் உருவம் வளர்ந்து கொண்டே வந்தது
நன் நெறியால் அடையும் பெருமை குணம்
ஐம்பூதங்களிடம் மட்டும்தானே இருக்கும்?
“இப்போது அனுமனிடம் உள்ளதே!” என
வியக்கும் வண்ணம் வளர்ந்தது.

பாடல்-588:

வானைத் தொட்டு வளரும் அனுமன்
தனக்குத் தான் மட்டுமே உவமையாகிய
பொன்மயமான மேருமலை என உயர்கிறான்
அவனைச்சுற்றிலும்
முன்பும் பின்பும் உள்ள நட்சத்திரங்கள்
மேருமலை மரங்களைச் சுற்றிலும்
மின்மினிப்பூச்சிகள் பறப்பது போல் உள்ளன.

பாடல்-589:

அனுமனின் விஸ்வரூபம்
கண் கடந்த காட்சி
அறிவு கடந்த காட்சி
அனுமனின் இரண்டு குண்டலங்களின் ஒளி
வானின் ஒன்பது கோள்களில்
சூரியன் சந்திரன் ஒளியுடன் பகை கொண்டது போல்
அதிகமாக ஒளிர்ந்தன.

பாடல்-590:

அனுமனின் விஸ்வரூபம்
திருமாலையே அசர வைத்தது
ஆம்!
திரிவிக்கிரம அவதாரத்தால்
எல்லா உலகங்களையும் அளந்த திருமால்
“வலிமையிலாத குரங்கு இது” என
அலட்சியமாக எண்ண முடியாத அனுமனை
அச்சு ஆணி போல் அமைந்த அனுமனை
நன்கு நோக்கினான்
“மிக உயர்ந்த பெருமைகள் எல்லாம்
ஒரே இடத்தில் இருந்து விடாது” என எண்ணியபோது
வெட்கம் அடைந்தான்.


பாடல்-591:

எட்டுத் திசைகளிலும் உள்ள
உலக உயிர்கள் அனுமனைப் பார்த்தன
மேலுலக அமரர்கள் தேவர்கள்
அனைவரையும்
தனது தாமரைக் கண்களால் அனுமன் பார்த்தான்.

பாடல்-592:

மேல் நோக்கி அனுமன் வளர
விண் வளர உயரும் போது
அனுமனின் இரண்டு பாதமும் அழுத்தமாக
இலங்கையை அழுத்தின
அவ்வூரின் நிலத்தில்
கடல் அலைகள் தழைந்து நுழைந்தன
புரண்டன மீன் இனங்கள்.

பாடல்-593:

அனுமனின் பெரிய உருவம்
விரிந்து விரிந்து விரிந்து
அவன் தாமரைத் திருவடிகளும்
காணமுடியாமல் மறைந்துவிட்டது!
“இனி அரக்கர்கள் இறப்பார்கள்” என மகிழ்வுற்றது
வஞ்சிக் கொடி போல் இடையும்
மாசற்ற கற்பும் கொண்ட சீதை தெய்வம்.
இன்னொன்றும் நினைத்தது
“உன் மகா உருவத்தை ஒடுக்க
எனக்கு அச்சமாய் உள்ளது  அனுமா!”

பாடல்-594:

சீதை தெய்வம் இப்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது
தூணைக் காட்டிலும் வலிவுடைய இராமன் தோள்களை
தழுவியது போன்ற மகிழ்ச்சி நிலையில்  இருக்கிறது
தளிர்க்கும் சிந்ததையுடன் அது  அனுமனிடம் சொன்னது
“அனுமனே உனது விரிந்த மகா உருவை காணும்
வல்லமையோடு காணும் உயிர்த்தொகுதி
உலகில் எதுவுமே இல்லை! அதனால் குறுகுக”

பாடல்-595:

வானவெளி கடந்து
வளர்ந்த ஆண்மை அனுமன்
“நீ அருளியபடி நடப்பேன்” என
தன் உருவம் ஒடுக்கி
அனைவரும் காணும்
சிறிய உருவம் கொண்டான்
தூண்டாமலே துலங்கும் விளக்கு போன்ற
சீதை அப்போது கூறியவை இவை:-

பாடல்-596:

“காற்றின் கடும் வேகம் பெற்றவனே
உலகை
மலைகளோடு பெயர்த்து எடுத்தாய்
மேலுலகைப் பொடி செய்தாய்
ஆதிசேஷனை ஒரு கரத்தால் பற்றி இழுத்தாய்
 நினது அளப்பரிய ஆற்றலை விளக்க இயலுமா?
நீ
கடலின் மீது நடந்தாய் என்பதும் கூட
நின் பெருமைகளோடு ஒப்பிட்டால்
எளிய செயல்களே”

பாடல்-597:

“நெடிய கரங்கள் கொண்ட வீரா!
சக்கரம் ஏந்திய தடக்கை கொண்டவன் இராமன்
ஆண்மை மிக்கவன் இராமன்
அவனது அருளும் புகழும் பல யுகங்கள்
நிலை பெறச் செய்ய நீ ஒருவனே போதும் என ஆனாய்
இலங்கை ஏழுகடலுக்கு அப்பால்பட்டு இருந்திருந்தால்
உனது பெருமைக்கும் உனது தாண்டுதல் வலிமைக்கும்
பொருத்தமாக இருந்திருக்கும்!”

பாடல்-598:

உனது உருவம் எத்தகையதோ
அத்தனை பெரிது
உனது அறிவும் ஆற்றலும்!
ஐம்புலன் அடக்கும் திறமை
அதுவும் அப்படிப்பட்டதே!
மனத்தெளிவின் பயன் எண்ணமகிய நீதியும்
அப்படிப்பட்டதே!
பிரம்மன் முதலிய மேலோர்களுடன் உன்னை ஒப்பிட்டால்
அவர்கள் நல்ல குணங்களே இல்லாதவர்கள் ஆகிவிடுவர்!

பாடல்-599:

“மின்னல் போன்ற பற்கள் கொண்ட
அரக்கர் வலிமை நோக்கி
எனது ராமன் போரிடத் துணையாக
இலக்குவன் மட்டும் தானே உள்ளான்? என்ன செய்வது?
எப்படி வெல்லுவான்” என்று கலங்கினேன்
இன்று ஐயம் தெளிந்தேன்
உயிர் பெற்றேன்
நீயே என் இராமனின் துணை என்றால்
அரக்கர்களின் கதி அதோகதி !

பாடல்-600:
அழகின் ஒளி முகம் கொண்ட
திருமகள் சீதை
“இனி நான் இறந்தாலும் தவறில்லை
என்னை வருத்திய அரக்கரை
வேரோடு அறுத்தவள் ஆனேன்
இராமனின் திருவடிகள் அடைந்தேன்
இனி புகழ் மட்டுமே அடைவேன்
இழிவான பழி தீண்டேன்”  என்று மனம் மகிழ்ந்தாள்.

--அனுமனோடு மீட்போம்.


Sunday, 27 October 2013

சுந்தர காண்டம் 551-575



பாடல்-551:

சீதை உணர்வுகள் பெயரிட முடியாமல் விம்மின
இது -   
பிறந்த பயன் அறியாது இறந்தவர்கள்
பிறவிப் பயன் அடைந்த மகிழ்ச்சிக்கு சமமோ!
விலை உயர்ந்த பொருளை மறந்தவர்கள்
பல்லாண்டுகள் சென்று அறிந்த உணர்வோ!
உடலைத் துறந்த உயிர்
மீண்டும் வந்து ஒட்டிய திறமோ!

பாடல்-552:

மாணிக்கம் இழந்து
மீண்டும் பெற்ற
புற்றுப்பாம்பென மகிழ்வு பெற்றாள்!
பழைமை மிகு சொத்துக்கள் இழந்து
மீண்டும் பெற்றவரை ஒத்தாள்!
மலடி ஒருத்தி குழந்தை பெற்ற நிலைக்கு உவமை ஆனாள்
குருடாய் உழந்து
விழி பெற்ற ஓர் உடல் ஒத்தாள்




பாடல்-553:

சீதை
அனுமன் தந்த மோதிரம் வாங்கினாள்
முலைக்குவையில் வைத்தனள்
தலையினால் தாங்கினாள்
கண்களில் ஒற்றினாள்
தோள்கள் பூரித்தனள் மெலிந்தனள்
வெப்பத்துடன் ஏங்கினள் உயிர் பெற்றனள்
அந்த உணர்வு
இந்த  உணர்வு தான் என அறுதியிட்டுக் கூற இயலுமோ!

பாடல்-554:

அந்த மோதிரத்தை முகர்ந்து பார்த்தாள்
தன் முலை மேல் வைத்து
அழுத்தித் தழுவிக் கொண்டள்
ஒளிரும் ஆனந்தக்கண்ணீர் ததும்பினாள்
வெகு நீளமான நேரம் அதையே நோக்கினாள்
ஏதேதோ அதனுடன் பேச விரும்பினாள்
ஆனால் பேசமாட்டாள்
மேலும் மேலும் விம்மல் கொள்கின்றாள்
ஆனால் தன்னுள் விழுங்குகின்றாள்

பாடல்-555:

அந்த மோதிர ஒளியால்
சீதையின் நீண்ட கண் பொன்நிறமானது
மின்னல்  போன்ற உடல்
பொன் நிறமானது
இராமனின்  மோதிரம் தீண்டிய உடன்
பொன்னாக மாற்றும்
ஸ்பரிச வேதி எனும் தெய்வமணியோ!

பாடல்-556:

இராமனது மோதிரம் வாழ்க வாழ்க
பசியால் இடர்பட்டு உழந்தவர்கள்
அடைந்த அமுது அது
இறக்கும் நிலையில் உள்ளவர்கள்
உயிர் பிழைக்க வைத்த மருந்து அது
இல்லறம் ஏற்றவர் போற்றும் விருந்தினர் அது

பாடல்-557:

சீதை
அம்மோதிரமுடன்
இப்படியான தன்மைகள் பெற்று
உயிர் இன்பம் பெற்று
முத்த நகை உடையவளாகி
விழி நீர்
முலை முகட்டில் தத்திப்பாய்ந்தது
மழலைச் சொற்கள் தள்ள
“உத்தமா! உயிர் தந்தாய்” என இன்னமும் கூறுவாள்.


பாடல்-558:

“மூன்றுலகமும் படைத்த பிரம்மனுக்கு முதல்வன்
இராமனின் தூதனாக வந்தாய்
உன் செம்மையால் உயிர் தந்தாய்
உனக்கு எளிதாய் கைம்மாறு செய்ய முடியுமோ!
என் அம்மை அப்பனாகிய தெய்வமே!
அருளின் வாழ்விடமே
இம்மை  இன்பமும் மறுமை இன்பமும்
புகழும் தந்தாய் நீ” என்றாள் சீதை.

பாடல்-559:

வலிமை மிகு
பருத்த பெருத்த தோள் உடையவனே
துணை இல்லாதிருந்த எனது
துன்பம் தீர்த்த வள்ளலே வாழி
நான் கற்பு நிலை மனத்தவள் என்றால் - 
“பல யுகங்கள் - நாட்கள் - ஆண்டுகளெல்லாம்
நீ இன்று இருப்பது போலவே
சிரஞ்சீவியாக வாழ்க” என்றாள் சீதை.

பாடல்-560:
தூண்  போல திரண்ட தோள் உடைய
அனுமனை நோக்கி
சீதை மீண்டும் பேசினாள்
“சிறந்த குணமுடையவனே
இராமபிரான்
இலக்குவனுடன் எங்கே இருக்கிறான்
உன்னை எங்கே சந்தித்தான்
என்னை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியை
யார் சொல்ல அறிந்தான்?” என்றாள்.

பாடல்-561:

கருமேக நிற கொண்ட
மாய அரக்கன் மாரீசன் என்பவன்
இராவணன் ஆணையால் மாய மான் ஆகினான்
மாயமான் எனத் தெரிந்தே நீ அதை விரும்பினாய்
இராமன் அம்பு எய்தான்
சுய வடிவம் பெறும் நிலையில்
“ஓ சீதா!  ஓ இலக்குமணா!” என
இராமன் குரலில் அழைத்தான்
அது பொய்க் குரலின் ஓசை
மயக்கியது உன்னை அம்மா”

பாடல்-562:

பொய்க்குரலை -
இளவல் இலக்குவன் கேட்கக்கூடாது
என இறைவர் இராமன் விரும்பினான்
வில்லினால் உண்மை ஒலி உண்டாக்கினான்
ஆனால் வென்றது-
விதியின் வெப்பமே!
பொய்க்குரல்-
பொல்லாப் பொருள் ஆனது!
வில்லாளன் இராமன் -
இளையவன் இலக்குவன் வரவு கண்டான்.

பாடல்-563:

இராமபிரான்
இளைய வீரன் முகம் கண்டான்
முகம் கொண்டே கருத்தும் புரிந்தான்
அங்கு
வண்டுகள் உறையும் பர்ண சாலை வந்தான்
உன் திருவடிவைக் காணாமல்
“உயிர் உண்டோ இல்லையோ” எனும் படி
 இன்னலில் இராமன் உழன்றான்
இன்னொரு காரணமும் வேண்டுமோ எனும் படி
மனம் உழன்றான்.

பாடல்-564:

சீதாதேவியே
தேடி இன்று உன்னைக் கண்டு கொண்டேன்
நீ வாழி ! இராமனுக்கு தீது ஏதுமில்லை
மெய் உயிர் நீயிருக்க
பொய் உயிர் தாங்கியது போல
இராமன் அங்கே வாழ்கிறான்
ஆண் தகை நெஞ்சில் நீ அகலவேயில்லை
அதனால் அழிவில்லை
இங்கே நீ இருக்கும்போது
அங்கே அவன் உயிர் எப்படிப் போகும்?

பாடல்-565:
அன்னையே
அப்படிப்பட்ட அண்ணலை ஆண்ட அன்னையே
உன்னை
காடுகளில் தேடினான்
மலைகளில் நாடி அலைந்தான்
உயிரில்லாமல் பொறியால் இயங்கும் இயந்திரப் படிவம் ஒத்தான்
தன் உயிரை
புகழுக்கு விற்ற ஜடாயுவைக் கண்டான்.

பாடல்-566:

Ƒஜடாயுவின் மேனி நோக்கி
வான் வரை துயரம் கொண்டு இராமபிரான் -
“என் தந்தையே
நீ எப்படி இப்படி ஆனாய்” என்றதும் விளக்கினான்
இலங்கை வேந்தன் தன்னை
வஞ்சனை செய்தததை
Ƒஜடாயு சொல்லச் சொல்ல
இராமனுக்குள் உலகம் வேகும் அளவு
வெம்மையான கோபமெனும் சீற்றத் தீ நிமிர்ந்தது.

பாடல்-567:

Ƒஜடாயுவின் பண்புதான் என்னே!
இராமன் சீற்றம் மிகுந்து
“மூன்று உலகங்களும் தீய்ந்து
நீறாகப் போகும்படி
என் சின அம்புகளால் அழிப்பேன்” என
கையிலிருந்த வில்லை நோக்கிட
“இராமா!
ஒரு சிறியவன் உனக்குச் செய்த தீமையால்
உலகுக்கே தீமைசெய்ய கோபம் உறுவாயோ
உன் தன் சினம் ஆறுக” என்றான்
தந்தை நிலையிலிருந்த ஜடாயு
அதனால்
சீற்றம் அடங்கி ஆறினான் இராமன்.

பாடல்-568:

“செம்மை குணவானே
இராவணன் எந்த வழியே சென்றான்
அவன் தங்குமிடம் எது?” என இராமன் வினவினான்
கழுகு அரசன் ஜடாயு பதில் கூற முனையும் போது
விதியின் வலியால் இறந்தான்
வில்லேந்திய இராமனும் இலக்குவனும்
துன்பத்தில் வீழ்ந்தனர்.

பாடல்-569:
துன்பாத்தால் அயர்ந்த அவர்கள்
மிகச்சிரமமுற்று மனம் தேறி
தந்தை முறை உடைய ஜடாயுவுக்கு
ஈமக்கடன்களை
தேவரும் மருளும்படி செய்தனர்
கயமைத் தொழில் செய்த அரக்கனை
நாம் தேடிக் காண்போம்” என்று முடிவு செய்தனர்
மேகம் தொடும் மலைகள் காடுகள் கடந்தனர்.

பாடல்-570:

அந்த வழிகளெல்லாம் அன்னையே
நின்னைக் காணாமல் இராமன் அயர்ந்தான்
மிகவும் மனம் தேறிக் கொண்டு
செங்கண் வழியே சிந்திய கண்ணீர்
நெடுவழியை சேறாக்கியது
நெருப்பிலுற்ற மெல்லிய மெழுகு என
அறிவு கலங்கினான் மெய்யன்
புலம்பும் சொற்கள் கூறினான் இவ்வாறு.

பாடல்-571:

“இவ்வுலகில்
எவரால்தான் கர்மவினை கடக்க முடியும்!”
என்று கூறிய
வீரத்திருமகன் உறையும் பெருந்தோள் இராமபிரான்
அறிவு மயங்கினான்
ஐம்புலன்களும் வேறு வேறாய் கழன்றன
நல்ல ஊமத்தம் பூவை
தன் தலை நாகம் அருகே அணிந்த
சிவபெருமான் போல் ஆனான்
தனை ஒன்றும் உணராதவன் ஆனான்.

பாடல்-572:

குளிர் மேக வடிவினன் இராமபிரான்
கோபம் தலைக்கேறிய நிலையில்
கோதாவரி நதி மீது சினம் கொண்டு
“சூரிய உதயத்தில் பவழக்கொடி சீதை
உன் குளிர் நீரில் ஆடியது உண்மையெனில்
அவளைத் தேடி தந்துவிடு !
இல்லையேல் நீ என் அம்பினால்
நெருப்பு ஆகிவிடுவாய்” என்றான்.

பாடல்-573:

நதிக்கு அடுத்து
மலையிட சினம் பாய்ச்சினான்
“ஏ! நீளப்பரந்த மலையே!
அழகிய பூங்கொடி சீதாதேவியை
உன்னிடம் தேடி என்னிடம் காட்டாவிட்டால்
உன் இனம் சேர்ந்த
எல்லா மலைகளையும் அழிக்க இந்த அம்பே போதும்” என்றான்.

பாடல்-574:

மலைக்கு அடுத்து
மான்களிடம் சினம் பாய்ச்சினான்
மாரீசன் பொன்மான் வடிவம் கொண்டதால்
என் மான் சீதை அகன்றாள்
ஏ! மான்களே!
கொலைபுரியும் என் அம்பினால்
உங்கள் பெயரே இனி உலகில்
இல்லாதபடி ஒழிப்பேன்” என்றான்.

பாடல்-575:

தன் மனதிலிருந்தே வேறுபட்ட இராமன்
உயிர் போன்ற இலக்குவன் கூறிய சொல் எனும் அருமருந்தால்
மனம் தேறினான் அதன் பிறகு
அனுமன் கூறியது இது.

--அனுமனோடு மீட்போம்.

Sunday, 20 October 2013

சுந்தர காண்டம் 526 - 550




பாடல்-526: 

இராமனின் திருவடி
செம்மை இதழ் தாமரை என ஒருசொல்லில்
எளிதாகக் கூறிட இயலாது
நாயகன் திருவடி குறித்து
திருத்தமாகக் கூறினால்
கடலில் விளையும் பவழமும்
குவளை மலரின் கருநிறம்  ஆகிவிடும்!
பாடல்-527:

அணிகலன்கள் அணிந்தவளே கேள்
இராமனின் ஒளி மிகுந்த விரல்
கடலில் விளையும் இளமை பவழக் கொடியல்ல
கற்பக மரங்களின்
செந்நிற அரும்பல்ல
உதய இளம் சூரியனின் கதிரொளி
ஓரளவு உவமையாகலாம்!

பாடல்-528:

இராமனின் திருவடி நகங்களுக்கு
சிறியவும் பெரிதுமான
மாசிலாத பத்து சந்திரன்களும் இணை அல்ல
ஒளிவீசும் வைரங்கள் இணையல்ல
அதனால் -  
திருவடி நகங்களுக்கு உவமை நான் அறியேன்

பாடல்-529:

இராமனின் திருவடிகளைப் புகழ்ந்து முடித்து விட இயலாது
அயோத்தியில் அவை நிலத்தில் படவேயில்லை
பின்பு
காட்டில் வருந்தின
திரிவிக்கிரம அவதாரத்தில் அந்தத் திருவடிகள்
எல்லா உலகங்களையும் பொருந்தின
அதன் சிறப்பை எப்படிக் கூறுவேன்!

பாடல்-530:

இராமனின் கணைக்காலுக்கு
உவமை ஏதுமில்லை
ஆதிசேஷன் எனும் பாம்புப் படுக்கையில் துயிலும்
திருமாலின் கணைக்கால்
ஓரளவு உவமையாகும்
கொல்லும் அம்புகள் தாங்கும் அம்பறாத்துணி
இராமனின் திருவடிக்கு ஒப்பல்ல.

பாடல்-531:
இராமனது தொடைகள்
அறம் போற்றும் பறவை அரசன் கருடனது
அழகு மிக்க பிடரிக்கு சமம்
பெரும் புகழ் மிகு மத யானைகளின் துதிக்கைகள் 
இராமனின்தொடைகளுக்கு நாம் சமமில்லை என வெட்கப்படும்
உலகில் வேறெதுவும் உவமை உள்ளதா!

பாடல்-532:

தாமரை மலர் மட்டுமல்ல
எல்லா உலகங்களும் திரண்டு உண்டான
அழகிய கொப்பூழுக்கு எதை உவமையாக்குவது!
சுழித்துப் பெருகும் கங்கை ஆற்றின்
அழகிய நீர்ச்சுழ்¢ உவமை அல்ல அது இழிவே ஆகும்
மகிழம்பூ என்பதும் இணையல்ல
அழகுக்கு உவமை எங்கு தேடுவது?

பாடல்-533:

என் தெய்வமான சீதையே
ஒப்பற்ற அழகு பெற்ற ஒப்பற்ற உயர்வு பெற்ற
மரகத மலை போன்றது
இராமனது மலை போன்ற மார்பு.
அந்த்ச் மார்பினை அடையும் சிறப்பு பெற்றவர்
தவம் செய்த திருமகளை விட வேறு யார்?

பாடல்-534:

இராமனது முழங்கால்
இதழ்கள் நெருங்கிய தாமரை மலர் என
எண்ணிய வண்டுகள் மொய்க்கும் நீங்காத அழகுடையது
இராமனது பெரிய கைகள்
முழங்கால் அளவு நீண்டிருப்பது
ஐராவதம் எனும் திசை யானையின் துதிக்கை
ஒத்திருக்கும் முழங்கால்கள்  என ஓரளவு சொல்லலாம்
வேறு உவமை என்ன சொல்ல?

பாடல்-535:

பசும் இலைகள் கொண்ட தாமரை அரும்பு
சூரியனைக் கண்டு மலர்ந்தது போல உள்ளது
இராமனின் கரங்கள் 
இப்படியான மென்மையான கரங்கள்
இரண்யனின் வச்சிரம் போன்ற உடலை
பிளந்தது உண்மையா என சந்தேகப்படுபவர்
இராமனின் கை நகங்களைக் பார்க்கட்டும்

பாடல்-536:
சீதை தெய்வமே
இராமனின் தோள்களை
மலைகளுக்கு உவமை கூறுவதா? இயலாது!
மலைகளுக்கு இராமனது திரட்சி இல்லை
இராமனது ஒளி இல்லை
வெற்றித் திருமகளோடு சேர்ப்பு இல்லை
மாமேரு எனும் வில் ஒடியும்படி
வலிமையான நாண் புரளவில்லை புகழில்லை
ஒன்றைப் போல் இரண்டில்லை

பாடல்-537:

கடலில் விளையும் சங்கும்
பாக்கு மரமும்
இராமனின்  கழுத்துக்கு உவமை என
சிற்றறிவினர் கூறுவதை ஏற்க முடியாது
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட
திருமாலின் இடக்கரம் உள்ள
பாஞ்ச சன்யம் இராமனின் கழுத்துக்கு உவமை.

பாடல்-538:

அண்ணலின் திருமுகம் தாமரை என்று கூறினால்
கண்ணுக்கு உவமை எதனைக் கூறுவேன்?
குளிர்சந்திரன் என்று உரைப்பேனா?
சந்திரனோ
விண்ணில் உடல் பொலிந்து
பிறகு மெலிந்து தேய்வானே!

பாடல்-539:
சந்தனக்குழம்பும் அகிலும் கலந்து பூசிய
அகன்ற தோள் அமலன் இராமன்
அவனது செவ்வாய் தாமரைக்கு ஒப்பிடப்பட்டால்
இராமனது இனிய சொற்களை
பவழம் பேசுமா? வெண் புன்னகையும் வீசாதே!
எனவே
பவழம் திருவாய்க்கு உவமை ஆகாது

பாடல்-540:

இராமனின் பற்கள்
முத்துக்களோ
முழுநிலவின் சிறு சிறு துண்டுகளோ
வெண் நிற தேவாமிர்தத் துள்¢களோ
அற வித்துகளின் முனைகளோ
சத்தியமரத்தின் உடும்புகளோ
முல்லையரும்போ
மயிலிறகின் அடிக்குருத்தோ
புன்னை மொட்டோ
எதனை நான் சொல்வேன் அம்மா.

பாடல்-541:

இராமனது மூக்கிற்கு
நாங்களே உவமையாகிறோம் என
இந்திர நீலக்கல்லின் ஒளிக்கொழுந்து வேண்டுகிறது
மரகதமணியின் ஒளித்திரட்சி வேண்டுகிறது
உவமையாக இருக்க முடியவில்லை!
இந்திரகோவம் எனும் பூச்சியை
கவ்விப் பிடிக்கும் பச்சோந்தியும்
அம்மூக்கிற்கு இணை அல்ல!

பாடல்-542:
தண்டகாரண்யத்தில்\
கரன் முதலிய அரக்கர் நடுங்க
இராமன் கையிலுள்ள வில்லினை விட்டதும்
அரக்கர்களது உடல்கள் தலை இழந்தன
உண்ண வந்த பேய்கள் கூத்தாடின
வானவரும் முனிவர்களும் அறக்கடலும் கூத்தாடின
நான்கு வேதங்களும் கூத்தாடின
இந்த பெருமையெல்லாம் இராமனது புருவத்திற்கு
சரியான உவமையா என நீயே அறிக!

பாடல்-543:

இராமனின் நெற்றியை
நிலவுடன் எப்போது ஒப்புமை செய்யலாம்?
வளர்ந்து வளர்ந்து தேய்தல் இல்லாவிட்டால்!
ராகு எனும் பாம்பினால் கவ்வுதல் இல்லாவிட்டால்!
தினசரி  பிறத்தல் இறத்தல் இல்லாவிட்டால்!~
அசையும் இருளில்
நிலவு அசையாமல் பலகாலம் நின்றால்!

பாடல்-544:

இராமனது திருமுடி மயிரினை
மழையெனக் கூற இயலாது ஏன்?
நீட்சி பெற்று திரண்டு
பளபளப்பாக
கருத்து ஒழுங்குடன்
நீலமணி நிறம் பெற்று
முறுக்காகப் பின்புறம் தாழ்ந்து
நுனி சுருண்டு
சந்தனம், துகில் முதலிய எந்த வாசனையும் இல்லாமல்
நறுமண மலர்கள் இல்லாமல்
இயற்கை மணம் வீசும் இராமனின் திருமுடி
இப்போது திரண்ட சடையாகி விட்டதம்மா! அதனால்
மழை என்பது பிழை!

பாடல்-545:

இராமனின் நடை
காளை நடை என்றால்
யானை வருந்தாதோ?
தன்னை அடைய
நிலமகள் திருமகள் இருவரும் வர
எல்லையிலா செல்வம் தர
அதனை மறுத்து
காட்டில் வாழும் நாளிலும்
தன் நிலை மாறாத பண்பு
யானையிடம் உள்ளதெனில் வருந்தாதோ?

பாடல்-546:

இவ்வாறு
அனுமன் மொழிய மொழிய
தீயிலிட்ட மெழுகு என
தன்னை அறியாமல் தளர்ந்தாள் சீதை
அவனைத்
தரையில் வீழ்ந்துவணங்கினாள் உடனே அனுமன்
“நாயகனார் சொன்ன அடையாளச் சொல் ஒன்று உண்டு
இராமன் கூறிய குறிப்புகள் உண்டு
அன்னநடையாளே கேள்” எனகூறத் தொடங்குவான்.

பாடல்-547:

“காட்டில் நடப்பது சிரமம்
காட்டில் நான் தங்கும் நாள்களும் சில
அதுவரை
என் தாய்களுக்கு பணி செய்து அயோத்தியிலேயே இரு”
எனக் கூறியதை கூறுக
ஆனால் அதற்கு முன்பாகவே அவள்
உடுத்த மர உரியோடும் என் மீது சினத்தோடும்
சீதை என் அருகில் நின்றாள் - அதை உரைக்கவும்”
என்றான் இராமன்”

பாடல்-548:

நீண்ட மகுடம் கொண்ட தசரதன்
ஆணையிட்டு அரசாட்சி ஏற்றேன்
பிறகு இழந்தேன் - 
காட்டுக்குப் புறப்பட்டேன்
மதில் கொண்ட கோட்டை வாசல் கடப்பதற்கு முன்
சீதை கேட்ட கேள்வி
“காடு எங்கே இருக்கிறது?புறப்படலாமா?”
இதைச் நினைவூட்டு என்றார் இராமபிரான்.

பாடல்-549:

குழந்தை குணம் கொண்ட சீதை
தேர் செலுத்தும்
சுமந்திரனை நோக்கி
“வள்ளல் இராமனின் ஆறுதல் சொற்களில்
கிள்ளை சீதை மனத்துயர் மறந்தாள் என்க
கிளிகளையும் நாகணவாய்ப்பறவைகளையும்
இனி எனக்குப் பதிலாக
ஊர்மிளை வளர்க்கச் சொல்க”
இதை நினைவு செய்க என்றான் இராமன்.

பாடல்-550:

இதற்குப் பிறகும் உணர்த்த ஏதுமில்லை
என்ற இராமபிரான்
“எனது பெய்யர் பொறித்த
அரிய கலை கொண்ட மோதிரம் இது
நீட்டு” என்று
தனது நெடிய கையால் தந்த
கணையாழி இது” என அனுமன் தர
வாள் நுதலி சீதை கண்டாள்.

--அனுமனோடு மீட்போம்.

Saturday, 12 October 2013

குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள்


அந்த
நீல நிற மீன்கொத்திப்பறவை பார்க்கும் தூரத்தில்
காயப்போட்டுள்ளார்கள் அந்த கவுனை
சிற்பிகள்தான் மறு பிறவியெடுத்து
குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள் ஆகமுடியும்போல

அந்த ஆடையின் வடிவிலேயே
ஒரு
சின்னஞ்சிறு குழந்தையை
எப்படித்தான் செய்கின்றனரோ

அடுத்தமுறை நீங்கள் அறியலாம்
கிளிப் போட்டு
காய வைக்கும்போது
காற்றில்
மேலும் கீழும் பறப்பது
கவுனில் இல்லாத துணிவடிவக்குழந்தைகள் அல்ல
மாயக் குழந்தை ஒன்றின் வீசும் கைகள்!


-- ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (16.10.2013)

சுந்தரகாண்டம் 501-525




பாடல்-501:

இப்போது நான்
எதற்காக உயிர் வாழ வேண்டும்?
என்ன நன்மைக்காக உயிர் தரிப்பது?
என்ன நன்மை வந்து விடும்?
பிறர் மனை சேர்ந்த பெண்ணை
சேர்ப்பது கூடாது என்று நினைத்து தானே
உயிர்த்தலைவன் இராமன் இங்கு வரவில்லை?
அறம் இல்லாததை செய்து கொண்டிருக்கிறேன்
அறவடிவன் இராமன் வருவான் என
பொழுது போக்குகிறேன்!

பாடல்-502:

எப்போது இந்தப் பெரும்பழி நேர்ந்ததோ
அப்போதே உயிர் விட்டிருக்க வேண்டும் நான்!
உலகம் ஏற்க முடியாத பழி சுமந்து
பெருமை அழியும் உயிர் வாழ்வது
மறு உலகில்
வசந்தம் காணவோ!

பாடல்-503:

எதிர்பார்ப்புகள் முடிந்ன
வறண்ட பாலை மணல் உள்ளமாகி
சீதாப்பிராட்டி மனம் உதிரத் தொடங்கியது
அது நினைக்கிறது இப்படி:-
“என்னிடம் அன்பு அழித்து விட்டார்கள்
இராமனும் இலக்குவனும் என்பதால்
வலிய பழி சுமக்கப் போகிறார்கள்
சுமக்கட்டும்
வான் புகழ் கொண்ட ஜனகர் குலப்பெண்
எனத்தோன்றினேன்
எனது துயர் துடைக்க இப்போது
என்னைத்தவிர யார் உள்ளனர்?”

பாடல்-504:

“நான் உயிர் வாழ்வதை
உலகத்தார் ஒப்பமாட்டார்கள்
ஏன்?
வஞ்சக மானின் பின்னே இராமனைப் போகவிட்டேன்
மைத்துனர் இலக்குவனையும் ஏசி அனுப்பினேன்
நஞ்சு போன்ற இராவணனின் வீடு புகுந்த நங்கை நான்
நிச்சயம் உலகம் எனை விரும்பாது”

பாடல்-505:

“வலிமை மிக்க இராமர் இலக்குவர்
அரக்கரை எதிர்ப்பார்கள்
போரில் வென்றாலும் வெல்லட்டும்
வீழ்ந்தாலும் வீழட்டும்
இல்வாழ்வுக்கென ஒரு அறம் இருக்கிறது
அதனை இறக்கச் செய்த நான்
இன்னும் உயிர் வாழ்வதால்
எனக்குரிய இழி சொற்கள் பழி சொற்கள்
என்னையே சேரவேண்டும் அவர்களுக்கு அல்ல”.

பாடல்-506:

“மானத்துக்கு தீங்கெனில்
கவரி மான் உயிர் விட்டுவிடும்
அது போன்ற மகளிர் முன்
நான் ஒரு பேதை ஆனேன்!
“கருமுகில் இராமனைப் பிரிந்து
கள்வன் ஊரில் இருந்தவள் இவள்!” என
ஏசும்படி வாழ வேண்டுமோ நான்?

பாடல்-507:

“அற்புதன் இராமன்
அரக்கர் வர்க்கம் அழிப்பான்
வில்லால்  எனை நிச்சயம் சிறை மீட்பான்
அந்நாளில் “தனது வீட்டுக்குள் வர
தக்கவள் நீ அல்ல” என்று சொல்லிவிட்டால்
என் கற்பை
எந்தத் தன்மையால் நிரூபிப்பேன்?”





பாடல்-508:

“நான் இறப்பதே அறத்தின் விருப்பம்”
என்னைத் தடுக்கும் அரக்கியர்
தற்போது உறங்குவது நல் வினைப்பயனே
நான் இறக்க இதுவே உகந்த நேரம்”
நினைத்துக் கொண்டே சீதை
இறக்க முடிவு செய்தாள்
குருக்கத்திமரம் அருகே சென்றாள்

பாடல்-509:

சீதை இறக்கச் செல்வது
அனுமனுக்குப் புரிந்துவிட்டது
அச்சம் அடைந்தான்
சீதை திருமேனி தீண்டிடக் கூசினான்
ஆதலால் சொற்களால் அவளைத் தீண்டினான்
“தேவர் தலைவன் அண்டநாயகன்
அனுப்பிய அருள் தூதன் நான்”
என்று தொழுதுக் கொண்டே பிராட்டி முன் தோன்றினான்

பாடல்-510:

“மடந்தையே
அடியேன் வருகை இராமனின் ஆணை!
உலகங்கள் குடைந்து குடைந்து
உன்னைத் தேடுகின்ற வானரங்கள்
எண்ண முடியாதவை ஆயின!
தவம் செய்துள்ளேன்
தங்கள்  சேவடி நோக்கி தரிசித்தேன்”

பாடல்-511:
இங்கு நீ இருப்பாதை இடரில் உழலும்
ஆண் தகை அறியவில்லை
அதற்கு காரணம் உண்டு
“அரக்கர்கள் வர்க்கம் இன்னும்
வேரொடு அழியவில்லை” என்பது தவிர
வேறு எந்த காரணமும் இல்லை.

பாடல்-512:

“நெய் நிறை விளக்கே! சீதையே
என்னை வேறாக நினைக்காதே
நீ ஐயப்படலாம் என்பதால்
உண்மை உணர
அடையாளம் என்னிடம் உள்ளது
இராமன் உணர்த்திய உரைகளும் உள்ளன
அப்போது
உள்ளங்கை நெல்லிக்கனி போல நீ உணர்வாய்
தவிர்க்கவும் தற்கொலையை ! ” என்றான் அனுமன்

பாடல்-513:

சீதையினைத் தொழுது நிற்கிறான் அனுமன்
சீதையோ கருணையும் கடும் சினமும் அடைந்தாள்
சீதையின் மின்னல் எண்ணம் இது:-
“இவன் அரக்கன் அல்லன்
நெறி நின்று ஐம்புலன் வென்ற முனிவன்
அதுவுமில்லையெனில் தேவனாக இருப்பான்
இல்லையெனில்
நல் உணர்வு உரைப்பவனாக இருப்பான்
தூயன்
குற்றமிலான்”

பாடல்-514:

அரக்கனாக இருக்கட்டுமே
அமரனாக இருக்கட்டுமே
குரங்கினத் தலைவனாக இருக்கட்டுமே
கொடுமை தர வருகிறவனாகட்டுமே
எம்பிரான் இராமன் நாமம் சொல்லி
உருக்கி விட்டான்
உணர்வைத் தந்தான்
பிரிய இருந்த உயிரைத் தந்தான்
இதை விட உதவி உண்டோ? 

பாடல்-515:

சீதை தெய்வம் ஒரு கணம் நின்றது
அனுமனை உற்று கவனித்தது
பேசலாமா வேண்டாமா என்று கருதியது
உள் நெஞ்சு அதற்கு முன் எண்ணியது:-
“என் உள்ளம் இவனைக் கண்டதும் இரங்குகின்றது
கள்ள மனம் கொண்ட வஞ்சகன் இவனல்ல
என் துன்பம் கண்டு
கண்ணீரால் நிலம் நனைய
நினைவுடைச் சொற்கள் புலம்புகிறான்”
இவனிடம் பேசுவோம்
பிறகு -“வீரா ! நீ யார்?” என்றாள்
முதல் சொல்லே அனுமனுக்கு முற்றான தேன் சொல்!

பாடல்-516:

சீதை கூறிய சொற்களை
தலையில் கொண்டான் அனுமன் பிறகு
தனது கைகளையும் தலைமேல் கொண்டான்
“தாயே
தூயவன் இராமன் உன்னைப் பிரிந்த பின்பு
துணைவனாக சுக்ரீவனைப் பெற்றான்
அவன் தான் சூரியனின் மைந்தன்
கவிக்குலமாம்  குரங்குகளின் கூட்டத்த¨லான்
குற்றமிலான்”

பாடல்-517:

சுக்ரீவன் அண்ணன் வாலி
இராவணன் வலிமை அழிக்கும்படி
வாலினால் இறுக்கிப் பிணைத்து
எட்டுத் திசையிலும் எழுந்து தாவிய
வெற்றி உடையவன்
தேவர்கள் வேண்டியதால்  பால்கடலை
மந்திமலையில் சுற்றிய
வாசுகி எனும் பாம்பின் உடல் தேய
அமுதம் தோன்றச் செய்யும்
தோள்களைப் பெற்றவன் வாலி.

பாடல்-518:

அப்படிப்பட்ட வலிமை வாலியை
உன் தலைவன் இராமபிரான் ஒரே ஒரு அம்பினால்
அவன் ஆவி வாங்கினான்!
வாலியின் தம்பி சுக்ரீவனுக்கே
அரசாட்சி நல்கினான் எம் மன்னவன்!
சுக்ரீவனைத் துணை எனக் கொண்டான்
நாயேன் சுக்ரீவன் அவையில் இருந்தேன்
நல் நெடும் காற்றின் மைந்தன் நான்
அடியேன் நாமம் அனுமன்.

பாடல்-519:

வானரங்களின் வலிமையோடு
உன் தலைவன் மனம் ஒத்துக் கூடியுள்ளான்
வானரங்களால்
உலகங்கள் யாவற்றையும் கையில் எடுக்க இயலும்
கடலைத் தனித்தனியே தாண்ட இயலும்
வானினும் உயர் தோற்றம் எங்களுக்கு
எழுபது வெள்ளம் எனும் எண்ணிக்கையில் உள்ளோம்
உன் தலைவன் இராமன் நினைத்ததை
முகத்தால் அறிந்து
குறைவறச் செய்து முடிப்போம்”

பாடல்-520:

அன்னையே 
உன்னைத் தேடிட
பல திசைகளிலும்
வானரங்கள் புறப்பட்டுள்ளன
பவழக்கொடியுடைய ஏழு கடல்கள்
ஏழுகடல்களைச் சூழ்ந்த ஏழு தீவுகள்
சிறப்பு மிகு நாக லோகம்
விண் - மண் - இடைவெளி
அண்டத்தில் எல்லாப்பக்கங்கள்
இவை தவிர
அண்டம் தாண்டி அப்பால் உள்ள
பல கிரகங்களிலும் தேடப்போயுள்ளன
குறிப்பிட்ட நாள் எல்லைக்குள் திரும்பும்!

பாடல்-521:

இராமனது அருள் ஆணை பொய்க்குமா?
அன்றே சொன்னான் “தென் திசையில் தேடு” என
எவ்வாறு கூறினான் எனில்
இழி தொழில் இராவணன் கடத்திய நாளில்
ரிஷிய முகக் குன்றில்
துணி சுற்றி  நீ வீசினாய் நகைகளை
எமக்கு அருகில் போட்டாய்
அதனைச் சொன்னதும்
இராமன் சொன்னதே அவ்வார்த்தை!

பாடல்-522:

“சீதாதேவியே
கொற்றவன் இராமனுக்கு
சுக்ரீவன் நட்பு கிடைத்த அன்று
உன் அணிகலன்கள் கொண்ட துணி முடிச்சைத் தந்தேன்
அன்று அவன் நிலை
எனது வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது
அன்று இராமன் நீங்காமலிருக்க
உயிர் காப்பாற்றியவை உன் நகைகளே
ஆம் அவைகளே -
இராமனை இறக்காமல் காத்தன
அன்று மட்டுமல்ல இன்று -
உன்னையும் காப்பாற்றின உன் மங்கல அணிகள்!

பாடல்-523:

பழியை வென்ற அனுமன் கூறியது:-
“இராமனின் நிலை இருக்கட்டும்
மற்றது கேளுங்கள்
வாலியின் மகன் அங்கதன்
சுக்ரீவனால் ஏவப்பட்டுள்ளான்
இரண்டு வெள்ளம் வானரர் சேனையோடு
கிஷ்கிந்தை விட்டு
தென் கடற்கரை அடைந்திருக்கிறான்
வீரம் மிக்க அங்கதன்”

பாடல்-524:

அனுமன் இசைக்க இசைக்க
சீதாதேவி உவகையும் உயரம் ஏறிற்று
துன்பத்தால் ஒடுங்கிய மேனி
வான் வரை விம்மி ஓங்கிற்று
“நான் உயிர் பிழைக்கும் காலமும் வந்து விட்டதோ!”
அருவி போல் கண்ணீர் ஒழுகும் கண்ணாள்
“ஐய! சொல்..” என்றாள்
ஐயன் மேனி அறிவதற்கு எப்படி இருந்தது” என்றாள்

பாடல்-525:

“துடி இடையாளே
இராமன் திருமேனி
உவமானத்தின் தன்மையிலோ
உவமானத்தின் பண்பிலோ கூறினால்
அந்த உவமைகள்
தமது இலக்கணம் இழக்கும்
ஆதலால்-
நான் கூறும் அடையாளங்களின் தொடர்ச்சியால் அறிக” என
இராமனின் அடி முதல் முடி வரை
அனுமன் கூறுவான் இவ்விதம்.

-அனுமனோடு மீட்போம்.

Monday, 7 October 2013

சுந்தர காண்டம் 476- 500


பாடல்-476:

பசுமையான வளையல் அணிந்தவளே!
அந்த இருவரும் அற்ப மனிதர்கள்
எனினும்
உன்னை எனக்குத் தந்த உதவி பெரிது
அதனால் உயிர்க் கொலை வேண்டாம் என  விடுகிறேன்
ஆனால் உனக்கு வேண்டுமெனில்
அவர்களைக் கொலை செய்யும் முறையும்
ஆராய்ந்து இயற்றுவேன்! அதையும்  பார்ப்பாய் !

பாடல்-477:

“குறைந்த நாட்களே வாழப் போகிறவளே!
கேள்
ஆழமான அகழி காவல் காக்கும் அயோத்தி அடைவேன்
பரதன்  உயிர் குடிப்பேன்
உலகம் அழிக்கும் ஊழித் தீ போல
மிதிலை நகர் முழுதும் அடியோடு அழிப்பேன்
எளிதாக இங்கு வந்து
உன் உயிரும் போக்குவேன்! பார்!”

பாடல்-478:

செந்தாமரைக் கண்ணாளை அகத்தில் வைத்து
புறத்தில் அவளை ஏசிவிட்டு
இராவணன் மிகவும் பொங்கினான்
எரிக்கும் கதிர் வாளை நோக்கி
கூறியது இதுவே:_
“நீ எனக்கு இணங்கவில்லை
கொல்ல வேண்டிய காலம்
பனிரெண்டு மாதத்திலிருந்து
இரண்டு மாதமாகி விட்டது
இனி நீயே அறிந்து கொள்
மரணமா? வாழ்வா? என்பது உன் கையில்!”


பாடல்-479:

இராவணனுக்கு
தான் மிரட்டியது போதாதென்று
தோன்றியது போலும்
 அரக்கியரைத் தனியே அழைத்தான்
சிரிப்பில்லாத முகம் பிளந்த வாய் கொடும் கோபம்
மூன்றின் கூட்டுத்தொகை ஆன அரக்கியரையும்
மிரட்டினான்
“சீதையை அச்சப்படுத்தியோ நல்ல அறிவுரை கூறியோ
என் வசம் ஆக்குக ..இல்லையேல்
உங்களுக்கு நான் நஞ்சாவேன்”

பாடல்-480:

இராவணன் என்னும் இடி
சீதாப்பிராட்டியை இத்தனை நேரம் வதைத்தது
அசோகவனம் நீங்கியது அரண்மனைக்கு அகன்றது
அடுத்த இடி வந்தது
அரக்கியர்கள் வடிவில் சூழ்ந்தது
இராகு எனும் பாம்பு விழுங்கி
பிறகு உமிழ்ந்த தூய நிலவு போன்ற சீதையை
மயில் போன்ற சீதையை
அரக்கியர்கள் அத்தனை பேரும்
ஒரே நேரத்தில் சுற்றிக் கொண்டனர்
பெரும் ஓசையுடன் அதட்டினர்
சிந்தைக்குத் தோன்றியதெல்லாம் பேசினர்!

பாடல்-481:

ஒவ்வொரு அரக்கியரும்
ஒவ்வொருவரை மிஞ்சும் வண்ணம்
சீதையை மிரட்ட முற்பட்டனர்
சிலர்-
கண்ணில் கனல் வர கோபம் காட்டி மிரட்ட
சிலர்-
மின்னும் சூல்த்தையும் வேலையும் காட்டி மிரட்ட
இன்னும் சிலர்-
“கொல்லுங்கள் கொல்லுங்கள் குடல் கிழிய
வயிறாரத் தின்னுங்கள் தின்னுங்கள்”
என்று மிரட்டினர்.

பாடல்-482:

இன்னும் சில அரக்கியர்
கேள்விகள் கேட்கவும் செய்தனர்
“இராவணன் யார் தெரியுமா?
உலகைப் படைத்த பிரமனின் வழித்தோன்றல்
ஆம்
பிரம்மனின் மகன் புலஸ்தியன்
புலஸ்தியன்மகன் விசிர முனிவன்
விசிர முனிவனின் மகன் இராவணன்
மூவுலகத் தலைவன்
சாமவேதத்தின் ஆயிரம் பகுதிகளிலும் வல்லவன்
அறிவாளன்
மெய் அன்பு உன்னிடம் வைத்தது தவிர
அவன் செய்த இழிதொழில் வேறென்ன?”

பாடல்-483:

இன்னும் சில அரக்கியர்கள்
சுத்தமாய் வடிகட்டிய அநியாயங்களை
புனிதவதிக்கு புத்திமதியாக்கினர்:-
“பெண்களில் தீயவளே!
புண்ணில் கோல் இட்டுக்குத்தியது போல பேசினாய்
இதனால்
மண்ணில் மானுடர்கள் தம் குலத்தோடு
அழிய வைத்து விட்டாய்
உன் உடலும் அழியும்படி
நோய் போன்ற செயல் செய்து விட்டாய்
உண்மையை
நடுநிலை நின்று பார்க்கத் தெரியாதவளே!

பாடல்-484:

இன்னும் சில அரக்கியர்
மிச்சம் வைத்திருந்த ஏச்சுகள்
உச்சகட்டமாய் பாய்ந்தன
“அறிவற்றவளே
உன் மனதில் சிக்குமாறு சொல்கிறோம் கேள்
புகுந்த குலத்துக்கும் பிறந்த குலத்துக்கும்
புகையும் சுடு நெருப்பு விதைக்க வந்தவளே
உணர்வில்லாதவளே
இந்த நிமிடமே இராவணனை அடைக
இல்லையேல் உன் இனமே இருக்காது”

பாடல்-485:

அரக்கியர்கள்
சீதையைக் கொல்வது போல் நெருங்கினார்கள்
கொடுமை செய்தார்கள்
“இராவணன் வெல்வான் இவளைத் தின்னுங்கள்”
என்று கூச்சலிட்டபடி
பயமுறுத்தும் உடம்புகளோடு வந்தார்கள்
இராவணன் கட்டளையும் சீதை நினைத்தாள்
ஒரே நேரத்தில்
அத்தனை துயரமும் நினைத்தாள்
மன உறுதி குறையவில்லை ஆனால்
கண்ணீர் விட்டு
தனது அவலம் நினைத்து சிரித்தாள்

பாடல்-486:

துயரங்கள் கொத்து கொத்தாக
செவி வழியே உடல் வழியே
தேளாகப் புகும்போது
தேனான சொல்லுடன் வந்தாள் திரிசடை
ஆண்டவன் அனுப்பிய தாய்ப்பால் போல்
சீதை இதயம் நோக்கி வந்தாள் திரிசடை
“தாயே
நான் கண்ட கனவின் பயனை
முன்பே சொன்னதை நினை
வீண் கவலை பிழையாகும்” என்றாள்
கேட்டதும்
சீதையின் இதயச்செவியில்
இன்பத் தேன் பரவிய மகிழ்வுடன்
“அன்னை போன்றவளே! நல்லது!”


பாடல்-487:

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்!
அறிஞர் போன்ற திரிசடை
தனது கனவு காட்டப்போகும் உண்மைகளை
அரக்கிகளுக்கு எடுத்துச் சொன்னாள்
மாமன்னன் இராவணன் கட்டளை தவிர
ஏதுமறியா அரக்கியர்
திரிசடை சொற்கள் கேட்டு அதிர்ந்தார்கள்
நிறுத்திக் கொண்டனர் ஏச்சுக்களை!
சீதையின் உயிர் உடலில் நின்றது!

5. உருக்காட்டுப்படலம்

பாடல்-488:

அனுமன் எண்ணங்கள் இவை :-
“சீதை காண ஏற்ற காலம் இது
காவல் அரக்கியர் இன்னும் உறங்கவில்லையே
அவர்களே உறங்க நினைத்தாலும் உறங்க முடியாதே”
நினைத்துக் கொண்டே அனுமன்
மந்திரம் உச்சரிக்க
இறந்தது போல மயக்கம் அடைந்தார்கள்!

பாடல்-489:

சீதா தேவி
உறங்காதவர்களும் உறங்கக் கண்டாள்
துயரம் தாங்க முடியவில்லை
நெஞ்சினால் எது சிந்தித்தும்
உய்யும் வழி காண முடியவில்லை
நெகுகின்றாள் ஆனால் அஞ்சாமல் நின்றாள்
உள்ளம் அழிவுற்றாள்
இராமன் அன்பு பேச வாய்ப்பு கிடைக்குமா
இளகிடும் சொற்கள் கூறி
இன்னும் இளகி மேலும் வருந்தினாள்.

பாடல்-490:

வலிமையான விதியே! சொல்!
கரிய மேகம் போன்ற இராமன்
நெடிய கடல் போன்ற இராமன்
அடர் இருள் போன்ற இராமன்
தனியே தவிக்கும் என் உயிரை
நிலைப்பெறச் செய்ய
வில்லின் இடி போன்ற முழக்கமுடன் வருவானா
நாண் ஒலி ஒலிக்குமா? விதியே நீ சொல்!

பாடல்-491:

அறிவில்லா நிலவே !சூரியனே! கூர் நிலவே
விரைந்து செல்லாத மந்தமான இரவே
குறையாத இருளே
எல்லாரும் என்னைத்தான் வருத்துவீர்களா?
என்னை நினைத்தும் பார்க்காத வில்லாளனை
சற்றும் வருத்த மாட்டீர்களோ!

பாடல்-492:

பூங்கொடிகளே!
அனல் காற்றுத் துணையுடன்
நீங்களும் தான் துன்பம் செய்கிறீர்கள்
என் உயிர் நிலைமை தெரியும் தானே
தன் மேனியும் கடல் மேனியும் ஒன்றாகப் பெற்ற
இராமனுடன் காட்டில் பழகி வரும் நீவீர்
என் குறை உரையாடக்கூடாதோ?

பாடல்-493:

“இராமன் வராமல் போகான்” எனும் வலிய எண்ணத்தால்
ஆயிரம் கோடி இடர்களைக் கொண்டேன்
வலி தீர்த்துவிடு அன்புச் சேவகனே
நாராயணனே தனி நாயகனே

பாடல்-494:

“மரங்கள் அடர்ந்த காட்டுக்கு
என்னுடன் வருதலை சிதையே நீ தவிர்
அயோத்தியிலேயே இரு” என்றாயே
உன் அருள் இதுதானா
என் உயிர் உண்ணமாட்டாயோ!”

பாடல்-495:

“பேணிக் காக்கும் உணர்வே
பேணும் உயிரே
வெட்கமில்லாமல் எதற்கு
இன்று என்னுடன் உழல்கிறீர்கள்?
தனி நாயகன் இராமனைக் காணும் வரை
கழிய மாட்டீர்களோ
நான் அடையும் பழி
உமக்கும் வேண்டுமா? போய்விடுங்கள்!”

பாடல்-496:

நான் எதற்கு மகிழ்வது?
எப்படி மகிழ முடியும்?
முடியாத வழிகளை உடைய வனத்தில் நுழைந்து
புறப்பட்ட இராமனால்
முடிவிலாப்புகழ் தசரதன் முடிவுற்றான்
அப்படிப்பட்ட இராமன் துயர் துடைப்பான் என மகிழ்வதோ!
சீதை தன்னை மதிக்காமல் உயிர்விட முடிவு செய்தாள்
ஆம்!
அவள் எண்ணங்களால் தன்னையே குத்திக் கொள்கிறாள்

பாடல்-497:

மின்னலிடும் அணிகள் இடையில் விளங்கும் சீதை
இடர்களால் துவண்டாள்
உயிர் விம்மி அழுதாள்
“உயிர் உண்டு என்பதால்தானே இடர்களும் இருக்கின்றன?
இடர்களைத்தான் விட்டுவிட முடியவில்லை
உயிரை விட்டால் துன்பமும் நீங்கும் புகழும் சேரும்”
என நினைத்தாள்.


பாடல்-498:

பொறுமையாக இருந்தேன்  இத்தனை நாட்கள்
உயிரைப் போற்றிக் காப்பாற்றி விட்டேன்
எதற்காக?
வீரக்கழல் அணிந்த இராமனைக் காணும் ஆசையால்
நீண்ட இந்நகரின் சிறையிலே
அரக்கர்கள் வதையிலே வாழ்ந்து விட்ட என்னை
அந்தப்புனிதன் ஏற்பானோ?

பாடல்-499:

“இங்குள்ளவர்களை அரக்கிகள் என்கிறேன்
உண்மையில் நானே அரக்கி
ஆம்
பிற ஆடவர்கள் என்னை விரும்பியதை உணர்ந்தும்
உயிரோடிருக்கின்றேனே
அரக்கரும் அரக்கியரும் சொன்னவை எல்லாம்
கடும் சொற்கள் எல்லாம்
என் செவியில் தங்கியும் உயிரோடு இருக்கின்றேனே
இப்படியே நீண்ட காலம் வாழ்ந்தேனே
நானே அரக்கி நானே அரக்கி”.

பாடல்-500:

தன்னையே
தன் எண்ணங்களால் கிழிக்கும் சீதை
தன் உயிரையும் பழிக்கிறாள்
உத்தமிகளும் உத்தமர்களும்
அதிகபட்சம் கலங்குவதே உலக இயற்கையோ!
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பதே வல்லவன் வகுத்ததோ!
ஆம்!
சீதை தன் துயரை விரிக்கின்றாள்
“சொற்களை விட்டுப் பிரியாத பழியை
சுமந்து தாங்குகின்றேனே ஆம்
நான் நல் பிறப்புக்காரி!
நான் நல்ல குடியில் பிறந்தவள்!
கற்புள்ள பெண்கள் கதையில்தான் இருப்பார்கள்!
வீட்டை விட்டுப் பிரிந்து
கற்பை நிரூபித்தவர்கள்
என்னை விட யார் உள்ளனர்!!”
இப்படியெல்லாம் பழித்தும் இழித்தும்
தாழ்த்தியும் உயர்த்தியும்
சீதை தெய்வம் உழன்றது.


--அனுமனோடு மீட்போம்.


Friday, 4 October 2013

இரண்டு அன்புகள்




மாலை இருளில்
சாலை குறுக்கே
சவுக்கு சொடுக்கியது போல நெளிகிறது
கோதுமை நிறப் பாம்பு
அதன் வழியில் அது போக
என் சாலைவழியே நான் ஏக
இருவகை அன்புகளுக்கும் இடையில்
இப்போது சமதூரம்.


--ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (9.10.2013)
               

Wednesday, 2 October 2013

மகிழ்ச்சி நிரந்தரம்



காலை வண்டிப் பயணம்
அறுபது கிலோ மிட்டரில்
ஆபீசுக்குப் பறக்கும்போதும்
பள்ளி செல்லும் பிள்ளைகளின்
கட்டி கட்டியான பவுடர் மாவும்
கருப்பு திருஷ்டிப் பொட்டும்
குதூகலிக்க வைக்கத் தவறுவதில்லை
அவர்கள் என்னைப் பார்த்து
கைகள் ஆட்டவில்லை
முகமும் நோக்கவில்லை
மகிழ்ச்சி இருபுறமும்
ஒரே நேரம் நிகழவில்லை என்பதைத் தவிர
பிரபஞ்சம் எப்போதும் எவருக்கேனும்
மகிழ்ச்சி ஊற்று
சுரந்து கொண்டேதான் உள்ளது.

காந்திபென்சில்




நண்பர் தந்தார் சிறிய ஆரஞ்சு பென்சில் ஒன்றை
கட்டை விரல் நீளம் கருப்பு கூர் மூக்கு
அது எத்தனை உதவி நினைவுக்கு
அது எத்தனை அவசியம் ஒரு பதிவுக்கு
ரப்பர் போட்டு அழிக்கும் வரை நினைவிலிருக்கும்
துண்டு பென்சிலின் உதவியே அத்தனை பெரிது
கையிலிருந்த பென்சிலைப்பார்த்தேன்
மகாத்மா காந்தி முன்னாளில் பொதுக்கூடம் கிளம்பும் முன்னர்
அவசர அவசியமாய் தேடிய
பென்சிலின் நீளமும் இதுவே தான் இருக்குமோ
சின்ன சின்ன பொருட்கள் உலகில் பெரிய பெரிய இருப்பிடம்
பென்சிலை பேசும்குரல் கேட்டது
“என்னைத் தொலைக்கலாம் சிறிது சிறிதாய் சீவலாம்
காந்தி நினைவோ
இந்தியாவின் நீளம் அகலம் ஆழம் உயரம் அனைத்தும்”

Saturday, 28 September 2013

முக அகம்



மவுனமாய் இருக்க இருக்க
கனத்து கனத்து
சுரக்கும் சொற்களில் அமுதத் தன்மை மற்றும்
சற்றே ஒரு கூர்வாள்
இரண்டும் கலந்த
முக அகம்.

Friday, 27 September 2013

யானை முடி




பிரம்மாண்டம்  இந்த உலகம்
நம் பங்கு மிக மிகச் சிறிய அணு
அதனை நாம் இயக்குவதாக
எண்ணும் பளு எண்ணம்
நம் இயக்கத்தைத் தடுக்கிறது
யானை முடி யானை மேல் ஒன்று
யானை அதனால் இயங்கவில்லை.

Wednesday, 25 September 2013

சுந்தர காண்டம் 451 -475


பாடல்-451

“கயிலை மலை எடுத்தேன்
திசை யானைகளை வென்றேன்”
இப்படி வீரம் பேசும் நீ
இலக்குவன் என்னை காத்து நின்ற போது
நேரில் உன் உருவுடன் வந்தாயா?
இந்த அவமானம் போதவில்லையோ?
உன் தலையை பெண்களின்
காலிலும் வைக்க வேண்டுமோ!

பாடல்-452:

அற்¢வில் ஏழையே
நீ ஒளிந்துள்ள இடம் இது என
என் கோமகன் அறிந்த
அதே நாளில் என்ன நடக்குமோ தெரியாது
கடல் அழியுமோ இலங்கை அழியுமோ ஊழி வருமோ
உன் உயிரை அழித்தாலும்
கோமகன் சினம் இன்னும்
ஏதேது செய்யுமோ

பாடல்-453:

கொடும் கோபம் கொண்ட அரக்கரை
அழித்த பின்பும்
இராமபிரான் கோபம் அடங்குமோ?
எனது வள்ளல் சீற்றத்தை
இந்த உலகம் தாங்குமோ?
மிஞ்சுமா ஏதாகிலும்? நான் அஞ்சுகிறேன்
இதற்கு அறக்கடவுளே சாட்சி!

பாடல்-454:

மண்ணுலகினர் அஞ்சிட விண் உலகினர் அஞ்சிட
உன் இழி செயலை விலக்க
எண்ணம் எதும் உள்ளே இலாதவனே
திருமால் எளியன்
நான்முகன் எளியன்
சிவன் எளியன்
எங்கள் நாயகன் அப்படி அல்ல முட்டாளே!

பாடல்-455:

இராமரும் இலக்குவரும்
மானிடர் தானே என நினைக்கிறாய்
காட்டிலே உயர்ந்த மலை போன்ற
கார்த்த வீரியனை
பரசுராமனாகி ஒற்றை மனிதனாக
வீழ்த்தியதை எண்ணிப்பார்
இராமனது தன்மை புரியும்

பாடல்-456:
நினது செல்வம் இழந்து
உயிரும் இழக்கப்போகிறவனே
“இருவர் மட்டும்தானே
இராமரும் இலக்குவனும்” என அலட்சியம் செய்கிறாய்
யுக முடிவில்
உலகம் எல்லாம் அழிக்கும் நாராயணன் வரும் போது
அந்த இருவருடன் போரிடும் போது
நான் சொன்னது உண்மை என உணர்வாய்

பாடல்-457:

இரணியாட்சன்
இரணியாட்சன் தம்பி இரண்யகசிபன்
இவர்களில் யாராவது
பிறன் மனைவி விரும்பினார்களா
வில் நாக்கு உராய்ந்து தழும்பேறிய
மற்ற மற்ற அரக்கர்கள்
யாரேனும் பிறன்மனை விரும்பிச்சேர்ந்து
மகிழ்ந்து வாழ முடிந்ததா? யோசி

பாடல்-458:

ஐம்புலன் இன்பவழி சென்றவர்
எவரேனும் சிறந்துள்ளார்களா?
பிரம்மனோ தேவர்களோ அசுரர்களோ
யாராயினும் சரி
பாவத்திலிருந்து நீங்க முற்படலே சிறப்பு
எல்லா உலகும்
உன் ஆணைக்கு அடிமை புரியும் வாய்ப்பு எப்படி வந்தது
உன் பாவப்பயனா? உன் இளமையில் நீ செய்த தருமமா?
பாடல்-459:

இவ்வளவு பெரும் செல்வமும் உனக்கு
சிவபெருமான் தந்தது எதற்காக? நீ
மேலும் தவநெறியில் ஒழுகி
பெரும் செல்வம் அனுபவிக்க வேண்டும்
என்ற அருள் தானே?
அறிவில்லாத நீ
செல்வமும் அழிய உறவும் அழிய
அறம் தவறுகிறாய்
உன் செல்வமும் அதிகாரமும் பெருகியதே
உன் அறத்தால் வந்தது தான்
அந்த வழியில் நடக்க விரும்ப மாட்டாயா?

பாடல்-460:

வீரம் மாறாதவர் இவ்வுலகில் இறந்து விட்டனர்
மாறா வலிமை மிக்கவர் இவ்வுலகில் இறந்தனர்
இரக்கம் அற்றவர் இறந்தனர்
அறம் தவறியோர் இறந்தனர்
பற்றுகள் நீக்கி
காமம் வெகுளி மயக்கம் எனும்
மூன்று உட்பகை அழித்தவர்களோ
பாச பந்தம் நீங்கினர்
பிறப்பும் இறப்பும் தவிர்த்தனர்
வேறு யாராவது
பிறப்பு  பிணியிலிருந்து நீங்கினார்களா சொல்!

பாடல்-461:

அன்று நீ செய்த
கொடும் செயல்களை நான் கேட்டேன்
தண்டகாரண்யத்தில்
இராமன் புகுந்த போது
இனிய தமிழ் மொழி அகத்தியன்
“இழி தொழில் அரக்கர்கள் இம்சையால்
தவம் ஆற்ற முடியாமல் தவிக்கிறோம்
அவர்களைக் கொல்க
உன்னால் தான் முடியும்” என்று
வருந்திட நீயே காரணம்.

பாடல்-462:

இராமன்
உன்னைப்பற்றி கேள்விப்பட்டான்
உன் வலிமை
உன் ஆயுள்
உன் அரக்கர் படை பெருமை
முனிவர்கள் புகழக் கேட்டான்
அதன் பிறகு தான்
உன் தங்கை சூர்ப்பனகை மூக்கு அறுத்தான்!
அதை அறிய மாட்டாயோ?
உன் தம்பிகளாகிய கரன் தூஷணன் திரிசரா
தோள்களும் தாள்களும்
சின்ன பின்னமாக்கினான்
இதனை நீ சிந்திக்க மாட்டாயோ?

பாடல்-463:

நீசனே
நன் நெறி அறியாதவனே
உனது இருபது கரங்கள் பிடித்து
உன் வாய் வழியே இரத்தம் கொட்டுமாறு குத்தி
உன்னை சிறையில் அடைத்த
சுத்த வீரன் கார்த்த வீரியார்ச்சுனன்
ஆனால் அவனது
வைரம் பாய்ந்த ஆயிரம் கைகளையும் தோள்களையும்
வெட்டித் தள்ளியவன் பரசுராமன்
ஆனால் அப்படிப்பட்ட பரசுராமனே
இராமபிரானால் வலிமை போனவன் ஆனான்

பாடல்-464:

கண்டவரை
கடிக்கும் பாம்பு
மந்திரத்தால் அடங்கும்
செருக்கு கொண்ட உன்னை
இடித்துச் சொல்லி
“இது தவறு” என ஆதாரமுடன்
அறிவு வழி செலுத்துவோர் இல்லை
நீ செய்த தீமை எண்ணத்தையே
அவர்களும் எண்ணுகிறார்கள்
உன்னை முடிப்பவர்கள் அவர்கள்
அதனால்
நீ அழிவாய் என்பது தவிர
வேறென்ன முடிவு இருக்கிறது!

பாடல்-465:

இப்படியெல்லாம் உரைத்த சீதை வார்த்தைகள் கேட்டு
இராவணனின்
இருபது கண்கள் மின்னலும்
தீப்பொறியும் சிந்தின
கோரப்பற்களின் ஒளி வீசும்படிவாய் பிளந்து
அதட்டி ஆர்ப்பரித்தான்
குன்றுகள் இடிபட்டு விழுந்தன
இதை இன்னும் எதற்கு
விளக்க வேண்டும்?
இராவணன் கோபத்தின் அளவு
அவனது காம அளவும் தாண்டி வெளிப்பட்டது.

பாடல்-466:

திசைகளையே மறைக்கும் தோள்கள்
கனல் விழிகள்
எல்லாமும் மறைய
ஒரு பெண் இகழ்ந்து விட்டாளே என்று
குமுறிக் கொண்டே
“இவளைப் பிளந்து தின்பேன்” என்றான்
ஆனால் அப்படிச் செய்ய முடியாமல்
சீதையிடம் கொண்ட காமம் தடுத்தது
காமமும் கோபமும்
எதிர் எதிரே நின்று வாட்டின
இரண்டையும் அடக்க முடியவில்லை
கோபத்தால் சீதையைக் கொல்ல நெருங்கினான்
அவளிடமுள்ள
காமத்தால் சீதை விட்டு விலகினான்
நெருங்குவதும் பின் வாங்குவதுமாக அலைந்தான்.


பாடல்-467:

அப்போது
அனுமன் எண்ணம் இது:-
“அருந்ததி ஒத்திட்ட கற்புச்செல்வி
எம் சீதையே
ஆளுடை நாயகன் தேவியை
என் முன்பே தவறாகப் பேசிவிட்டான்
அந்த நீசன் தொடும் முன்
அவனை மிதித்து உழக்கி
பிறகு சீதை மீட்பேன்”
பாடல்-468:

அனுமன் உணர்ச்சிப்பிழம்பானான்
“தனியனாய் நிற்கின்ற இராவணன்
தலை பத்தும் சிதறிடத் தாக்குவேன் இலங்கையே
குளிர்கடலின் கீழே பாய்ச்சுவேன்
புனித மாதவ அரசி சீதையை
இனிதே சுமந்து இராமனிடம் சேர்ப்பேன்”
இதெல்லாம் நினைத்து
தன் கரம் பிசைந்தபடி இருந்தான்.

பாடல்-469:

வாள் போல் கொடிய அரக்கன்
அண்டத்தையே அழிக்கக்கூடியவன்
உலகம் அழியும் ஊழிக்கால நெருப்பு போல கோபம்
முற்றியவன் ஆனான்
ஆனாலும்
நீண்ட காமம் வென்றதால்
கோபத்தை ஒரு விதமாய் வ்ன்று
பேச ஆரம்பித்தான்:-

பாடல்-470:

ஒன்றைப் புரிந்து கொள் சீதையே
உன்னைக் கொல்வேன் என்று தான்
ஆனால் கொல்லவில்லை எழுந்தேன்
என்னைப்பற்றி நீ சொன்ன வார்த்தைகள் சரியே
அதற்கெல்லாம் ஒரே காரணம் தான்
என்னால் முடிந்த காரியம் முடியாத காரியம்
என இரண்டு என்னிடமில்லை
வெல்வதும் தோற்பதும் எனக்கு விளையாட்டே.

பாடல்-471:

இன்னொன்றும் கூறுகிறேன்
நன்றாகக் கேள்
அன்று நான் வஞ்சனையால் கவர்ந்தேன் கவர்ந்தேன்
என்கிறாயே...
என்னால் இராமனைக் கொல்ல முடியும்
கொன்றிருந்தால் நீ இறப்பாய்
நீ இறந்தால் எமனால் நானும் இறந்திருப்பேன்
இதனை உணர்ந்தே
வஞ்சக் வேடம் தாங்கி வந்தேன்

பாடல்-472:

“தேன் என்பதை அறிய வைக்கும் சொல் உடையவளே..
கேள்!
மாயமானைத் துரத்திய மானிடர்கள்
இராமனும் இலக்குவனும்
கவர்ந்து சென்றது நான் தான் என அறிந்தால்
வரமாட்டார்கள்
வருவார்கள் என நினைப்பது உன்
ஏழைமை உணம்
கவர்ந்து சென்றது இராவணன் என அறிந்தால்
தேவர்களும் பின் வாங்குவர்”

பாடல்-473:

மென் தோள் கொண்டவளே
நீ சொன்னாய்
வீரீயார்ச்சுனன் உயர்வு என!
ஆனால் அவன் உயிர் இருக்கும் போதே
யாவரினும் உயர்ந்த மும்மூர்த்திகள் வாழும் போதே
இந்திரனை எனக்கு ஏவலாள் ஆக்கினேன் 
மூன்று உலகமும் ஆட்சி செய்கின்றேன்
என்னைத் தவிர இத்தனை சிறப்பு எவருக்கு உண்டு
வேறு காரணம் வேண்டுமா?

பாடல்-474:
என் விழி போன்றவளே
குழந்தை மொழியாளே கேள்
“மும்மூர்த்திகளையும் தேவர்களையும்
வலிமை அழித்து வெற்றி பெற்ற நான்
இராம இலக்குவ மனிதர்களைக் கொன்று
பழி ஏற்பட நடக்க மாட்டேன்
அவர்களை பணிவிடைச் செய்யச் சொல்வேன்”


பாடல்-475:

குற்றமற்ற அழகு அரசீ!
அற்ப ஆற்றல்
அற்ப இயல்பு
அற்பத் தொழில்
இம்மூன்றும் கொண்ட அற்ப மனிதர்கள்
வீரம் முதிர்ந்த என்னிடம் செல்லாது
இதோ இதோ! இன்று பகலிலேயே செல்கிறேன்
அந்த இருவரையும் ஒரே கையால் பற்றுகிறேன்
கொண்டு வருகிறேன்!”

                                                                         --அனுமனோடு மீட்போம்.