Thursday, 19 March 2015

மனதிடம் வேண்டுகோள்
பேனா திறந்து சட்டென எழுதி டைரியில் வைத்திருந்து மீண்டும் புதுப்பித்து எழுதிய காலங்களை அடிக்கடி கலைத்துகலைத்து  பாஸ்வேர்டு கேட்கும் கம்யூட்டர் கேலி செய்கிறது. மூச்சடக்கித் தான் முத்தெடுக்க வேண்டும். கைகளே பழகு. மனமே பாஸ்வேர்டை திருக்குறள் போல் மனனம்  செய். சிந்தனையே பிளாகர் ஓபன் ஆகும் வரை கெட்டியாக பொறுமையாக கலைந்து போகாதிரு. உனக்கு தமிழின் வாசகன் காத்திருக்கிறான். ஆதலால் - ஆதலால் - நீ மவுனத்திடம் யாசகம் செய்து உன் அகத்தமிழை பரப்புவாயாக.  

Monday, 16 March 2015


ஆச்சரியமும் செய்தியும் எங்கும் கிட்டலாம். சமீபத்தில் திருச்சியில் ஒரு ஓட்டலில் கை அலம்பும் இடத்தில் சின்னதாக ஒரு நோட்டீஸ் கண்டேன். கூடவே வந்திருந்த நண்பர் அவசரமாக காருக்கு கூப்பிடும் முன் எனது  மகள் எடுத்துத் தந்த சிறிய நோட்டில் குறித்துக்கொண்டேன். அது என்ன? பூமி வெப்பம் அடைவது எல்லோருக்கும் கவலை அளிப்பதுதான். ஆனால் என்ன செய்யலாம்? என்று கேட்டால் நழுவி விடுவோம்.
துளசிச் செடி பற்றி தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். எப்படி? ஒரு துளசிச்செடி நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் ஆக்சிஜன் தருகின்றது. மீதி நான்கு மணி நோம் ஓசோன் தருகின்றது. ஒவ்வொருவரும் 16 செடிகள் நட்டால் பூமி வெப்பம் நிச்சயம் குறையும் என்றது அந்த செய்தி.
வாருங்கள் நண்பர்களே
நடுவோம் ஓர் துளசிச்செடி