எந்த ஏக்கம் நமக்கு நன்மை தரும்?
*******************************************
ஒற்றியூர் வாழும் எழுத்தறியும் பெருமானே. எனக்கு ஒரே ஒரு ஏக்கம்தான். நேசம் இல்லாத பொய்யான அடியவனாக நான் இருக்கிறேன். ஊக்கமோ மகிழ்வோ இல்லாத எனது நெஞ்சத்தின் உறவு அகலச் செய்துவிட்டால் தூக்கமில்லா ஆனந்தத் தூக்கம் எனக்கு கிட்டும் அல்லவா? எஅனக்கு அருள் செய்வாயாக.
பாடல்:22
நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
தூக்கமிலா ஆனந்தத் தூக்கம் அன்றி மற்றும் இங்கோர்
ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.