முல்லா கதைகள்: 6
*****************
மதிய வேளை. முல்லா ஆனந்தமாக ஓர் மல்பெரி மரத்தின் கீழே தங்கி இருந்தார். சற்று தொலைவில் தர்பூசனிக் கொடியில் பெரிய பெரிய தர்பூசனிப் பழங்கள் காய்த்திருப்பதைக் கண்டார். தான் நின்றிருந்த மல்பெரி மரத்தில் சிறிது சிறிதாய் பழங்கள் நிறைய இருப்பதையும் ஒப்பிட்டார்.
“ இந்த உறுதியான பெரிய மரத்தில் சின்னஞ் சிறிய பழங்களையும்; அந்த மென்மையான கொடியில் பெரிய பெரிய பழங்களையும் ஆண்டவன் ஏன் வினோதமாகப் படைத்திருக்கிறான்?”
முல்லாவின் சிந்தனை முடியும் முன்னர். ஒரு ம்ல்பெரிப்பழம் முல்லாவின் மொட்டை தலையில் விழுந்து கீழே ஓடியது.
“ கடவுள் ஏன் இப்படிப் படைத்தான் என்று இப்போது புரிகிறது. இல்லாவிட்டால் என் தலை நொறுங்கியிருக்குமே” என்று சொல்லிக்கொண்டார் முல்லா.
நீதி: ஒவ்வொரு துன்பமும் அமைக்கப்பட்ட விதத்தில் அமைக்கப்பட்ட நேரத்தில் நம்மை அணுகி துன்பம் கொடுத்தே தீரும். ஏற்றே ஆக வேண்டும். அதனை நாம் கேள்வி கேட்க முடிவதில்லை.
No comments:
Post a Comment