Friday, 24 July 2026

நாம் சொன்ன அளவில் நம் துன்பம் போகுமா? (12)

 நாம் சொன்ன அளவில் நம் துன்பம் போகுமா?   

***********************************************************


எழுத்தறியும் பெருமானே. உன்னை வணங்கி தவமும், மாதவமும் செய்கிறவர்கள் துன்பம் தீர சிவனே என்கிறார்கள். கங்கை சடைப் புண்ணியனே என்கிறார்கள். சிவ நாமம் சொன்ன அளவிலேயே துன்பம் தீர்கிறது என்கிறார்கள். ஆனால் என்னளவில் நடை பெறவில்லை. என் மீது இரங்கி துன்பம் நீக்குவாயாக.


பாடல்:12

மன்னளவில் சோதி மணிபோல் வாய் மாதவத்தோர்

தென்னளவும் வேணி சிவனே என ஒரு கால்

சொன்னளவில் சொன்னவர் தம் துன்பொழிப்பாய் என்பர் அது

என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே. 


**

No comments:

Post a Comment