நாம் எப்படி கருணை பெற வேண்டும்?
*******************************************
உத்தமனாகிய எழுத்தறியும் பெருமானே. நீ என்னை ஏற்காமல் அகற்றுவாய் என்றால் என்னால் தாங்க இயலாது. உனது ஊர் சொல்வேன். பேர் சொல்வேன். நினது திருவடிப் பெருமைகளைச் சொல்வேன். எதுவாயினும் எனது பிழை எதுவென நேராகச் சொல்வாயாக. அப்படி சொல்லாமல் மவுனம் காப்பது, உனக்கு அழகல்ல நீதியும் அல்ல என உனக்கு யாரால் சொல்ல இயலும்? எனக்கு அரூள்வாயாக.
பாடல்:21
ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
சீர்சொல்வேன் என்றனை நீ சேர்க்கா தகற்றுவையேல்
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதியீதல்ல என்றே
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment