நாம் எதனை இகழ்கிறோம்?
**********************************
எனது மனம் ஒரு கல் ஆகிவிட்டது. ஏதோ ஒரு கானகத்தில் அது அலைகிறது. இது கூட பரவாயில்லை. மேலும் அது ஒரு தவறு செய்கிறது. அது என்ன வெனில் புல் என்ற சிறிய தாவரத்தை மிகப் பெரும் அளவில் மதிக்கிறது. ஆனால் பசும் பூக்கள் கானகமெங்கும் கண்டும் இகழ்வது ஏன்? பொய்யனாகிய இந்த அடியவன் அடைகின்ற வேதனைக்கு எல்லைக் கோடு இல்லை. எழுத்தறியும் பெருமானே எனக்கு இரங்குவாயாக.
பாடல்:18
கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
புல்லை மதித்தையோ பைம்பூ இழந்த பொய்யடியேன்
ஒல்லைபடுகின்ற ஒறுவே தனை தனக்கோர்
எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment