நாம் சோடை போவது ஏன்?
*****************************************
எழுத்தறியும் பெருமானே. என் மனதின் அசல் தன்மைகள் நீங்கி இன்று ஓர் பாதகனாக நிற்கின்றேன். ஏன்? ஐம்புலன்கள் என்னை வெங்கதிர்கள் வாட்டுவது போல வாட்டின அதனால் நான் இவ்வாறு காய்ந்து வறண்டு தளர்ந்தேன். இந்நிலையில் நீ எனக்கு என் தாகம் தீர அருள் நீர் தந்து தாகம் தணிப்பாயாக. என் வாட்டம் இன்னுமா அறியவில்லை? எனக்கு அருள்வாயாக.
பாடல்:17
பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின்னருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும் அறியாயோ எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment