நம் விதியை மாற்றும் வழி இருக்கிறதா?
*************************************************
எழுத்தறியும் பெருமானே. விதி என்ற ஒன்று என்னைத் தாக்காமல் தப்பிக்க வேண்டும். அடுத்த கட்டமாக அந்த விதி என்னளவில் செயல்படாது எனும் கதியே என் விதியாக வேண்டும்.
. இந்த எளியேனின் மன அமைப்பு பிழைகள் கொண்டதென்று என்றும், கொடிய குற்றங்கள் கொண்டது என்றும் என்னைத் தள்ளி வைத்துவிட்டால் இந்தப் பொய்யனுக்கு உதவிடவோ விதியை மாற்றவோ எனக்கு யாருமில்லை. உலகிலேயே கொடியது பணத்தால் அல்ல, எண்ணத்தால் ஏழையாக இருப்பது. உன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று உளவு அறிய முடியாத ஏழை நான் . எனக்கு அருள் செய்ய எண்ணுவாயாக.
பாடல்: 24
ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன் இவன்
பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன்
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment