நாம் சரண் அடைய என்ன அவசியம் இப்போது?
*******************************************************
பலர் நினைக்கிறார்கள், வாழ்க்கை தன் வழியில் செல்லட்டும் அல்லது செல்கிறது என்று. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை வள்ளல் பெருமான் சொல்வது இப்பாடல்.
ஐம்புலன்கள் நம்மை “இன்பம் காட்டுகிறேன் வா!” என்று சொல்லி பள்ளங்கள் கொண்ட இருட்டில் நம்மைத் தள்ளுகின்றது. மனம் இதனை உணர்ந்தும் தடுக்க முடியாமல் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக தனது வாழ்நாள் முழுதும் கட்டிக்கொண்டே வருகின்றது. சுமக்க வைத்த மூட்டைகள் தரும் துன்பங்கள் இன்று பெரிதாகிவிட்டன. ஓ! எல்லாவற்றையும் நம் மனதால் சரி செய்து கொள்ளலாம் என இருந்தேன். அவற்றை இனி மனதை விட்டு எடுக்க முடியாது - உன் அருள் கிடைத்தால் தவிர - துன்பச் சுமை- என்னால் எடுக்க முடியாது. எழுத்தறியும் பெருமானே. எனக்கு அருள்வாயாக.
பாடல்:25
மடுக்க முடியா மல இருட்டில் சென்று மனம்
கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்க வைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி
எடுக்க முடியாதே எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment