நம்மை ஈசன் பொறுப்பது ஏன்?
*************************************
என் அருமைத் தாய் போன்ற எழுத்தறியும் பெருமானே. சொல்ல முடியாத அளவு துன்பம் தரும் இந்த பூமியில் நான் படாத பாடுகள் இல்லை. இத்தனைத் துயரமும் உனது திருவடி சார்பினால் தீரும் என அறிந்தும் நான் அதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை என்றாலும் கீழ்மை பொருந்திய எனது குற்றங்களைப் பொறுத்தல் உனக்கே பொறுப்பாகும்.
பாடல்:15
பன்னரும் இப்பார் நடையில் பாடுழன்ற பாதகனேன்
துன்னிய நின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
என்னருமைத் தாய் நீ எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment