நாம் தள்ளப் பட்டால் நம் கதி?
******************************************
குளிர்ந்த கொன்றை மலர் மாலை சூடிய ஈசா. சங்கு கொண்ட விஷ்ணுவும்; தாமரையில் வாழும் பிரம்மனும் காண இயலாத ஈசா. உமை ஒரு பாகம் கொண்டவரே. இந்த ஏழை முகத்தைப் பார்க்கமாட்டேன் என்று நீ தள்ளி விடுவாயானால் என் கதி என்ன? எங்கு சென்று என்னால் வாழ முடியும்? எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
பாடல்: 10
சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு
பங்குடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே
***
No comments:
Post a Comment