நம் உடம்பு எப்படிப்பட்டது?
பாடல் : 5
********************************************
எது நிலையானது இல்லையோ அதனை நேசிக்கிறோம். எத்தனை தடவை சொன்னாலும் உடம்பு நேசம் நாம் விடுவதில்லை. இது நம் நெஞ்சத்தின் மிகத் தவறான எண்ணம். இன்னும் சொல்லப் போனால் நோயான எண்ணம். சோர்வுற வைக்கும் இந்த எண்ணம் நம்மைத் தடுமாறச் செய்கிறது. ஆம் . வாழ்வில் ஒரு நாள் இந்த உடம்பு நிற்க முடியாமல் படுத்துவிடும். நில்லா உடம்பு என்பது இறத்தலைக் குறிக்கும். இந்த நமது நோயான எண்ணத்தை இந்த உலகில் யாரிடம் சொல்வது? யாவும் அறிந்த ஈசா , எழுத்தறியும் பெருமானே அருள்வாயாக.
நில்லா உடம்பை நிலையென்றே நேசிக்கும்
பொல்லா நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
சொல்லா மன நோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment