நாம் கன்றுக்குட்டியைப் போல அழுதோமா?
**************************************************
தில்லைப் பெருவெளி மன்றத்தில் நடனம் செய்யும் மாணிக்க மாமலையே. கரத்தில்மழு ஏந்தி வெற்றி பெறும் வித்தகனே என உன் பெருமைகளை எல்லாம் பாடி உருகி தாயைப் பிரிந்த கன்று அழுவது போல அயர்கிறேன்.அழுகிறேன். என் கண்ணீர் துடைத்து அருள என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே? எனக்கு அருள்வாயாக.
பாடல்:11
மன்றினிடை நடஞ்செய் மாணிக்க மாமலையே
வென்றி கையுடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்தழும் என் கண்ணீர் துடைத்தருள
என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment