Friday, 24 July 2026

நாம் எங்கு உள்ளோம்? (20)

 நாம் எங்கு உள்ளோம்?

*********************************

எனக்கு ஒன்று புரிகின்றது.       நான் ஆணவம், கன்மம், மாயம் எனும் மூன்று மலக் கடல்களில் தத்தளிக்கின்றேன்.  நீ என்னை ஆளாவிட்டால் அடியார்கள் எனை நோக்கி கைகொட்டிச் சிரிப்பது உறுதி. அது மட்டுமல்ல என்னை நோக்கவும் கூசுவார்கள் . அந்த அவமானம் எனக்கு வேண்டாம். எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள்வாயாக.


பாடல்:20


மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்

ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்

கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்

ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


***


No comments:

Post a Comment