நாம் எங்கு உள்ளோம்?
*********************************
எனக்கு ஒன்று புரிகின்றது. நான் ஆணவம், கன்மம், மாயம் எனும் மூன்று மலக் கடல்களில் தத்தளிக்கின்றேன். நீ என்னை ஆளாவிட்டால் அடியார்கள் எனை நோக்கி கைகொட்டிச் சிரிப்பது உறுதி. அது மட்டுமல்ல என்னை நோக்கவும் கூசுவார்கள் . அந்த அவமானம் எனக்கு வேண்டாம். எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள்வாயாக.
பாடல்:20
மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment