Friday, 24 July 2026

யார் மிகப் பெரிய ஏழை? ( 19)

யார் மிகப் பெரிய ஏழை?

***********************************

என் குற்றங்கள் அளவிட முடியாதன. அது  தங்கத்தை மதிக்கிறது. ஆனால் பொன் போன்ற உன் திருவடி குறித்து போற்றுவதும் இல்லை. மனதினால் எண்ணுவதும் இல்லை. உலக வாழ்வு நிலை என மயங்கி எந்நேரமும் இயங்குகின்றது.  வாழ்நாளெல்லாம் துன்பப்படும் ஏழை கூட , வயிற்றுப்பசி என்ற ஒரு துன்பத்தை மட்டுமே அடைகிறான். நானோ அந்த ஏழையினும் ஏழை. ஆம். எண்ணத்தால் உன் பொன்னடி போற்றாத ஏழை. என் எண்ணம் உயர்த்துக. உன் பொன்னடி போற்றச் செய்க.  எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்:19


பொன்னை மதித்தையா நின் பொன்னடியைப் போற்றாத

கன்னிகரும் நெஞ்சால் கலங்கின்ற கைதவனேன்

இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்

என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.


************


No comments:

Post a Comment