Friday, 24 July 2026

நாம் ஏன் புண்ணியமற்று ஏமாறுகிறோம்? (14)

 நாம் ஏன் புண்ணியமற்று ஏமாறுகிறோம்? (14)

****************************************************

திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே  பூக்களில் தேன் அருந்தும் வண்டினைப் போல நினது திருவடியே கதி எனச் சார்ந்து  உனது பொன் போன்ற அருளை புண்ணியம் செய்தவர்கள் பெற்றுக்கொண்டிருக்க, நானோ காமம் எனும் கள் அருந்தி கண் மூடி ஏமாந்துகொண்டிருக்கிறேன். என்னை மீட்டு உன் திருவடிப் பேற்றினில் ஈடுபடுத்தி கரையேற்றுவாயாக.



பாடல்:14


பூ மாந்தும் வண்டென நின் பொன்னருளைப் புண்ணியர்கள்

தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான்

காமாந்த காரம் எனும்கள்ளுண்டு கண்மூடி

ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே. 


***


No comments:

Post a Comment