Friday, 24 July 2026

உலகம் பெற்றது எவர்? ( 31)

 உலகம் பெற்றது எவர்? 

*********************************

நின்னை நீயே பெற்றுள்ளாய். ஆம். இந்த உலகம், அதன் செயல்கள் அனைத்தும் உன்னுடையவை. இதைத்தவிர வேறெங்கும் போய் உன்னைத் தேட வேண்டியதில்லை. மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட வாழ்வு பெற்று அவதிப்படும் என்னையும் ஆள்வது உன் கடமை அன்றோ? என்னை உடையவனே. எழுத்தறியும் பெருமானே. எனக்கு அருள்வாயாக.



பாடல்:31


நினையுடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய்

மனையுடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே

இனையுடையான் என்றிங்கெனையாள்வதுன் கடனே

எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


***


No comments:

Post a Comment