Friday, 24 July 2026

நம் எண்ணங்களைத் தாண்ட முடியுமா? (27)

 நம் எண்ணங்களைத் தாண்ட முடியுமா? 

*************************************************

எழுத்தறியும் பெருமானே. எனது வாட்டத்தைக் கேள். பிறப்பு சுழல் ஒரு புறம் என்னை வாட்டுகின்ற இத்தருணத்தில் நலம் என்ற ஒன்று கிடைக்குமா என்ற ஏக்கமும் ஒரு வாட்டம்தான். சுமைதான்.

 இந்நிலையில் உண்ண உண்ணத் தெவிட்டாத உண்ண உண்ணக் குறையாத அமுதமான உன்னையன்றி வேறு ஒன்றை எவரால்தான்  எண்ண முடியும்? முடியாது.எனக்கு அருள்வாயாக.



பாடல்:27 


பண்ண முடியாப் பரிபவங்கொண்டிவ்வுலகில்

நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்

உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும்

எண்ண முடியாதே  எழுத்தறியும் பெருமானே.


***


No comments:

Post a Comment