நாம் உண்மையில் யார்? (2)
பாடல்: 2
*******************************
மத்து தயிரில் அலைகின்றது. ஆனால் அது சுவை அறியுமா? வஞ்சகனுக்கு நல்ல புத்தி வருமா? பைத்தியக்காரன் ஒருவனுக்கு வலிய நோயை ஏற்கும் பண்பும் இருக்குமானால் அவன் கதி என்ன? பேயாக , நாயாக, வீண் நாள் போக்கும் என்னை உனது தாமரை போன்ற திருவடிக்கு ஆளாக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படுமோ. எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
மத்தனை, வன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணி கொள்
பித்தனை, வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன் தன் முளரிதாட்(கு) ஆளாக்க
இன்னும் எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
No comments:
Post a Comment