ஒற்றியூர் திருக்கோவிலுள் யார் உள்ளார்?
*************************************************
உலகம் முழுதும் கடைந்து பெறப்பட்ட விஷத்தை, மக்கள் நலனுக்காகவே உலக நலனுக்காகவே தொண்டையில் வைத்து அந்த விஷக்கறை பெற்ற நீல கண்டா! தயவு கொண்ட ஈசனே. எழுத்தறியும் பெருமானே . எனக்கு இவ்வாழ்வு அயர்ச்சி தருகிறது. மலர்ச்சியாய் மாற ஒரே ஒரு சொல் சொல்லமாட்டாயா. ஒருவேளை ஒற்றியூர் திருக்கோவிலின் உள்ளே இல்லாமல் நீங்கிவிட்டாயோ. அதுவும் அறியேன்.
பாடல்:30
ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதி நீ
அல்லையோ நின்றிங் கயர்வேன் முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூய திருக்கோயிலுள் நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment