எது நம்மைக் கொட்டி எடுக்கும் தேள்?
******************************************
முற்பிறப்பில் செய்த வினைகள் என்னைத் தேள் போலக் கொட்டுகின்றன. மனம் வெதும்புகின்றது. எதையும் ஒளிக்காத உன்னை அழைத்தேன் . உன் முன் அழுதேன். வாடுகின்றேன். நல்லோர்கள் தேவர்கள் வாழ வேண்டும்; உலகம் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நஞ்சு உண்டாயே என் அருமை அப்பா! இன்று உன்னைக் காணமுடியாமல் எங்கே ஒளிந்து கொண்டாய் என் எழுத்தறியும் பெருமானே?
பாடல்:28
வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
இங்கொளிக்கா நஞ்சமுண்ட என் அருமை அப்பா நீ
எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
****
No comments:
Post a Comment