நம் துயரம் எப்படிப்பட்டது?
**************************************
தீமையின் இருப்பிடமான எனது மனதினால் அடையும் துயரம் , வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் தரும் துயரம் போன்றது. அளவுக்கு அதிகமான செல்லம் தந்து வளர்த்தமைபோன்றது அந்தத் துன்பம்.
அந்தத் துன்பங்களை பாட்டினால் பாடி எழுதலாம் என முயற்சித்தேன் , அதுவோ நினது அடியார் புகழ் போன்று ஏட்டுக்கு அடங்காத அளவில் விரிகின்றது. நான் என்ன செய்வேன் எழுத்தறியும் பெருமானே. என் மீது இரக்கம் காட்டுவாயாக.
பாடல்:16
வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளை எனத்
தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
பாட்டுக் கடங்கா நின் பத்தர் அடிப்புகழ் போல்
ஏட்டுக்கடங்காது எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment