ஆட்கொள்ளப்படுவது என்று?
************************************
எழுத்தறியும் பெருமானாகிய ஈசனே. எனக்குள் ஒரே ஒரு கேள்விதான். என்னைச் சுற்றிலும் வஞ்சகர்கள் என்பதாக எண்ணுவது சரியல்ல. அவர்கள் வழியில் அவர்கள் போகட்டும்.
என் பாதை என்ன? உன் பொன் அடிக்கு ஆளாக வேண்டும் என்ற ஒரே துடிப்போடு வாழும் மேலானவர்கள் இருக்கின்றார்களே! அவர்கள் திருவடியை நான் வாழ்த்தலாம் அல்லவா? அதனையும் நான் செய்யாத ஒரு நாயாக உள்ளேன். தேன் பாகு சர்க்கரைப் பாகு அமுதப்பாகு வெல்லப்பாகு என்றெல்லாம் தனிச்சுவை தரும் உன் அருளைப் என்று எனக்கு தரும் நாள் எதுவோ. அதனை என்னால் அறிய முடியவில்லையே. எஅனக்கு அருள்வாயாக.
பாடல்:23
போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன் அடிக்காள்
ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின் அருளை
ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment