நம்மை என்ன செய்ய வைப்பார் ஈசன்? (4)
பாடல் : 4
***************************************
பொய் எல்லாம் மெய் என்றே தெரிவதால், விழிக்கு மை பூசிய கண்கள் கொண்ட பெண்களின் போகம்( புணர்முலையார் போகம்) எனக்குப் மிகப் பெரும் இன்பமாகத் தெரிகின்றது. மையல் வந்து உறுகின்றது. இந்த உணர்வுக்கே ஆட்படுவதால் இறந்து போவதும் நிகழ்கின்றது. அழியட்டும் இவன் என்றும்விடலாம். நீ காத்தருளவும் செய்யலாம். உன் சித்தம் எது? என்ன நடக்கும்? எனத் தெரியவில்லையே எழுத்தறியும் பெருமானே. அருள்வாயாக.
மைப்படியும் கண்ணார் மயல் உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன் தன் கழல் கருதச் செய்வாயோ
இப்படி என்று அப்படி என்று என் (ன) அறிவேன் உன் சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே
***
No comments:
Post a Comment