சந்த்யாவந்தனம்: (9) 7.12.25
ஸந்தியாவந்தனத்தின் ஜீவநாடியாயிருப்பது அர்க்கியப் பிரதானம். மார்ஜனம், பிராசனம் முதலிய பகுதிகளும் உண்டு.
அஷ்டாங்க யோகத்தின் முதற்படிகளான இமயமும் நியமமும் போன்று அவை பூர்வ அங்கங்களாக அமைகின்றன.
புறத்தூய்மையுடன் அகத் தூய்மையும் தேவை என்பது இம்மந்திரங்களின் கருத்தினின்று தெளிவாகும்.
இயமம் பற்றி திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
“கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத்திடை நின்றானே”
யோகத்திற்கும் சந்த்யாவந்தனத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆம். ஆசனம் மற்றும் பிராணாயாமம் இரண்டிலும் உண்டு. அதுமட்டுமல்ல.
சந்த்யாவந்தனத்தின் “ஜபம்” எனும் பகுதியால் புலன்களை வசப்படுத்தும் தியானம், தாரணை, சமாதி ஆகிய படித்தரங்கள் வந்து விடும்.
உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துகள் உணராமல் உபாசனை செய்யலாமா?
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment