அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்(8) 6.12.25
பகவான் ரமணர் பாடல் : 7
உனை ஏமாற்றி ஓடாது உளத்தின்மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா
கல் மிதப்பதில்லை. ஆனால் தெப்பத்தில் ஏறியகல்லினால் மிதக்க முடியும். உலக வாழ்வெனும் நீரில் தத்தளிக்கும் மனம் ஈசனை நினைக்க முடியவில்லை என்று ஏமாற்றி ஓட நினைக்கிறது. அருணாசலா நீ உறுதியாய் இரு என வேண்டி அழுகிறது பக்தனது உள்ளம்.
அபிராமி அந்தாதி , பாடல்:40;
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய்த புண்ணியமே.
“பேணுதற்கு எண்ணிய பேதை நெஞ்சு” எனக் கொள்க .என் அறிவு சிறப்படையவில்லை.என் அறிவு அறியாமை கொண்டது எனும் தாழ்மை கொண்டு ஒப்புக் கொண்டவர்களே வழிபாட்டில் ஆர்வம் கொள்வார்கள்.
அப்பர் பெருமான் “ வாழ்த்த வாயும் ; நினைக்க மட நெஞ்சும்” என்பது அப்பர் பெருமான் வாக்கு.
மடமை கொண்ட நெஞ்சில்தான் வழிபட்டாவது பார்ப்போம் என்ற நினைவு தோன்றும் என்கிறார். இப்படிப்பட்ட பேதை நெஞ்சம் என்னுடையது ஆதலால் என் உள்ளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா.
***
No comments:
Post a Comment