Saturday, 6 December 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (9) 7.12.25

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (9) 7.12.25


பகவான் ரமணர் பாடல் : 8

ஊர்சுற்றும் உளம் விடாது உனைக்கண்டு அடங்கிட

உன் அழகைக் காட்டு அருணாசலா.

பக்தனுக்கு லயமாக காட்சி அவசியம் தேவை. காட்சியிலிருந்து காட்சியன்ற ஒன்றுக்கு செல்ல முடியுமே தவிர காட்சியற்ற ஒன்றை நினைக்க இயல்வதில்லை. அழகின் அம்சமே ஈசன். சுந்தரமே ஈசன். மாயமானைத் தேடி ஓடிய சீதை உள்ளம் கட்டுக்குள் நிற்க இலஷ்மணன் கோடு உதவியது போல நமது மனதுக்கு ஈசனிடம் அழகு தோன்றச் செய்வாய் அருணாசலா.

அபிராமி அந்தாதி (பாடல்:1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர் 

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை 

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன 

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


அம்மையின் அழகு திரு உருவம் கண்டு மனம் அடங்க அபிராமிபட்டர் பாடியது இது.

உதிக்கின்ற சிவப்புக் கதிராக, பெண் நெற்றி உச்சித் திலகமாக,யோக சாதனை மாணிக்க நிறமாக, மாது உளம் போது (பூ) என்பதாக,மின்னல் கொடி போன்ற மகாலஷ்மி அபிராமியை, குங்குமக் குழம்பாக சந்தனத்தில் கலந்து பூசும் தோயமாககாணப்படும் அவள் மேனி வண்ணம் விழுமிய ( மிகச்சிறந்த )துணை என்றார்.

வேறு எந்தத் துணையாலும் மரணம் தவிர்க்க இயலாது. பிறவாத ஆனந்தம் தரவும் இயலாது என்கிறார் அபிராமி பட்டர்.


***


No comments:

Post a Comment