Thursday, 4 December 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (7) 5.12.25

  அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (7) 5.12.25 

பகவான் ரமணர் பாடல் : 6

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்

இதுவோ உனதருள் அருணாசலா.

அருணாசல நினைவு மறந்து விடுவதன் காரணம் என்ன? ஈசன் கைவிட்டதே என்ற காரணம் புரிகிறது. சரி. ஈசன் நினைவு சரிந்துவிழ எது காரணம்? புலன்களா அல்லது மனமா என்ற கேள்விக்கு போகத் தோன்றவில்லை. ஈன்ற அன்னையைவிட தயவு உடையவா  என்னை நீ கை விடலாமோ. இதுவோ உன் அருள் அருணாசலா? என்று பகவான் மனம் நைந்து போகிறது.

பாடல்: 57 / ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்

உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்

செய்ய பசும் தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ? உந்தன் மெய் அருளே?

அறம் வளர்க்கும் அம்மையை மெய்யாகப் பாடினாலே புலவர்கள் எல்லா செல்வமும் புகழும் பெற்றுவிடலாம் எனும் நிலை இருக்கும்போது ; எதுவும் கேளாமலே பூமிக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் அம்மை இருக்கும்போது புலவர்கள் பொய்யும் மெய்யுமாக செல்வம் புகழ் தராதவர்களைப் பாடுமாறு இயம்ப வைப்பது ஏன்? இதுவா உன் அருள்? என்று கேட்பது குறைத்துப் பேசியது போல உயர்த்தியது எனக் கொள்க.


No comments:

Post a Comment