நான் ஒளவை பேசுகிறேன் (5) 5.12.25
அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தாலன்றிப் பழா.
ஏ மனிதர்களே! நான் பார்த்துவிட்டேன் இவ்வுலகில். எதற்கும் காலம் ஒன்று வரவேண்டும். அதுவரை அடுத்தடுத்து தொடர்ந்து முயன்றாலும் அந்த காரியம் நிறைவேறுவதில்லை.
இதனை நான் எப்படிச் சொல்கிறேன் என்றால் வடிவத்தால் நீண்ட மிக உயரமான மரங்களின் காய்கள் கண்டேன். ஏன்,அவை பழுத்துத் தொங்கவேண்டியதுதானே! ஏன் பழுக்கவில்லை? ஆம், அதற்குரிய பருவம் வரவில்லை.
இயற்கை விளைவும் சரி, மனித முயற்சிக்குப் பலன்களும் சரி - காலத்தின் கையில் இருக்கிறது.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment