சந்த்யாவந்தனம் (7) 5.12.25
உப நயனத்தில் அளிக்கப்படுவது காயத்ரீ மந்திரம். மந்தி உபதேசம். அது அனைத்தையும் விடச் சிறந்தது. முதன்மையானது. எனவே பிரம்மோ(உ)பதேசம் எனப்படுகிறது. இராணுவத்தில் பிரம்மோஸ் ஏவுகணையின் பெயர் இதுவே. சிக்கல் தருணங்களில் கடைசியாக ஏவப்படும் ஆயுதமும் பிரம்மாஸ்திரம் என்றே பேச்சு வழக்கில் கூறப்படும்.
“பிரபஞ்ச ஸாரம்” எனும் நூலில் ஆதி சங்கராச்சாரியார் பின் வருமாறு கூறுகிறார்.”இகத்திலும் பரத்திலும் நல்வாழ்வை நாடும் துவிஜர்களால் முறைப்படி இம்மந்திரம் ஜபித்தற்கு உரியது. துவிஜர்கள் எனும் சொல் பிராமணர்க¨ளையும், ஷத்திரியர்களையும், வைசியர்களையும் குறிக்கும். பரிசுத்தமான தாய் தந்தையரிடம் நல் குலத்தில் உதித்தவர்களும் புத்திமான்களுமான துவிஜர்களால் உப நயனம் தினமும் அவரவர் சம்பிரதாயத்துடன் உபாசிக்கப்பட வேண்டும். உப நயன் டீஷை பெற்றது முதல், பிரணவத்துடன்; வியாஹ்ருதியுடன்,சிரசுடன் கூடிய இந்த காயத்ரி மந்திரம், சந்தியா உபாசனையாலும்; ஜபத்தாலும்; தியானத்தாலும் உபாசிக்கப்பட வேண்டும்”
சந்தியா வந்தனத்தின் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு. அவை என்ன?
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment