சந்த்யாவந்தனம்: (8) 6.12.25
சந்தியா வந்தனத்தின் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு. அவை 1) அர்க்யப் பிரதானம் 2) பிராணயாமம் 3) காயத்ரி ஜபம்.
அர்க்யப்ரதானத்தின் கருத்தை விளக்க வேதத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. சூரியனை எதிர்த்து அரக்கர்கள் அன்றாடம் போராடுகின்றனர்.
இரு பிறப்பாளர்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து பூமியில் விடும் அர்க்கியம்(நீர்) வஜ்ராயுதம் போல் வலிமை படைத்து அரக்கர்களை முறியடிக்கிறது என அது சிலேடையாகக் கூறுகிறது.
எது அரக்கர் படை? அஞ்ஞானமே அரக்கர் படை. அறியாமையாகிய அரக்கர்கள் போருக்கு வரும்போது செய்ய வேண்டியது என்ன? ஞானம் பெற வேண்டும்.
ஞானமே சூரியன். போர்க்களம் மனிதனுடைய மனவெளி. இப்போரில் வெற்றி காண உதவும் பிரம்மாஸ்திரம் போன்றது காயத்ரீ மந்திரம்.
அரக்கர்படை திரும்பத் திரும்ப வந்து அகவெளியில் சூழ்ந்து கொள்வதால் தமக்காகவும் பிறர்க்காகவும் அறிவாளிகள் அன்றாடம் அறியாமையுடன் போர் புரிந்துக் கொண்டே இருக்கவேண்டும்.
தினந்தோறும் சாப்பிடுவதை மறந்தாலும் மறந்தாலும் ஸந்தியாவந்தனத்தை மறக்கக்கூடாது. “ஸந்தியாவந்தனம் செய்தால் தான் சாப்பாடு” என்று சொல்லும் தாய்மார்கள் இன்றும் உண்டு.
ஸந்தியாவந்தனத்தின் ஜீவநாடி எது?
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment