அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (6) / 4.12.25
பகவான் ரமணர் பாடல் : 5
இப்பழி தப்பு உனை ஏன் நினைப்பித்தாய்
இனி யார் விடுவார் அருணாசலா.
அருணாசலா என்னை நான் அறியாமல் ஈர்த்து உன் வசமான நான், இந்நிலையில் என்னைக் கைவிட நினைத்தால் அது உனக்குப் பழியாக மாறிவிடும் .
ஏன் என்னை நினைப்பிக்க வைத்தாய் என்று ஒரே ஒருகணம் கேட்கிறேனே தவிர இனி எந்த ஆத்ம சாதகனும் பக்தனும் உன்னை விட மாட்டார்கள் அருணாசலா.
அபிராமி அந்தாதி - பாடல் :72 ல் ஒரு வரி வருகின்றது.
என் குறை தீர ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண்?
அடியார்கள் வினையை நீக்குதல் - மரணம் நிகழாமல் காத்தல் - மீண்டும் பிறக்காமல் செய்தல் என்ற மூன்றும் அருள்வது உன் கடமை. வேறு யாரும் இதனைச் செய்வாரில்லை. மீண்டும் பிறந்துவிட்டால்? என்பதில் பிறக்கமாட்டேன் என்ற நம்பிக்கை தொக்கி இருந்தாலும் அவநம்பிக்கை வந்தவராக - அப்படி நான் பிறந்தால் அது யார் குறையாக இருக்க முடியும் என்பதோடு பகவான் ரமணர் பாடல் வரியை சிந்திக்க முடிகிறது.
( ஈசனால் சிந்திப்போம்)
***
No comments:
Post a Comment