Tuesday, 2 December 2025

சந்த்யாவந்தனம்: (5) 3.12.25

  சந்த்யாவந்தனம்: 5 (3.12.25) 


வாமன மூர்த்திக்கு சூரிய தேவன் காய்த்ரி மந்திரத்தை உபதேசிக்கிறார். பிரகஸ்பதி தவம் காக்கும் பூணூலைக் கொடுக்கிறார். பிரம்மச்சரியத்திற்கு காப்பு ( ரஷை) போன்ற முஞ்சிக் கயிற்றை காஸ்யபர் இடுப்பில் கட்டினார். ஆயுளை வளர்க்கும் மாந்தோலை பூமிதேவி போர்த்தினாள். ஓஷதிகளின் கண்வன் சோமன் பலாச தண்டம் அளிக்கிறார்.கெளபீனத்தை தாயார் அதிதி அளிக்கிறாள். குடையை மேலுலக தேவதை அளிக்கிறாள். பிரம்மன் கமண்டலம் அளிக்க, சப்தரிஷிகள் தர்ப்பை அளிக்கின்றனர். உமாதேவி பிஷை இடுகிறாள்.

“பிஷாம் பவதீ

சாஷாத் உமா அதாத் அம்பிகா ஸதீ”

இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட  வாமனர் பிரம்ம தேஜஸ் பெற்று பிரகாசித்தார்.

தக்க சமயத்தில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப்படும் ஒவ்வொரு சிறுவனும் வாமன பிரம்மச்சாரியின் திரு உரு போல தோற்றம் அளிப்பான்.

உபநயனத்தில் குருவானவர் சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச் செய்து ஆசிர்வதிப்பது என்ன?

                                                               ( ஈசனால் சிந்திப்போம்)

No comments:

Post a Comment