நான் ஒளவை பேசுகிறேன் (3) 3.12.25
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
ஏ மனிதர்களே ! செல்வம் இனிமை தருவதாக எண்ணுகிறீர்கள். அது இன்பம் அனுபவிக்க வேண்டிய வயதில் இளமைப் பருவத்தில் கிட்டாமல் முதுமையில் கிட்டினால் துன்பமே. எனவே இனிமையான செல்வமும் இனிமை இல்லாமல் போவதை சிந்தியுங்கள்.
(இளமையில் வறுமை வந்தால் ஒரு மனிதனால் இன்பம் அனுபவிக்க முடிவதில்லை) எனவே செல்வத்தின் தன்மை இளமை முதுமை பொறுத்து மாறுபடுகிறது.
பெண் என்பவள் அழகு அழகு என்கிறீர்கள். ஆனால் நறுமணம் மிக்க மலர் என்றாலும் தோட்டத்தில் தேவைப்படும் பருவம் தவறி நறுமணம் மிக்க மலராக இருந்தாலும் பயன் என்ன? எவருக்கும் பயன் தராமை போன்றே கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீணாய்த்தான் போகும்.
( ஈசனால் சந்திப்போம்)
No comments:
Post a Comment