Monday, 1 December 2025

நான் ஒளவை பேசுகிறேன் (2)

  நான் ஒளவை பேசுகிறேன் (2)

பாடல் (1)

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.


ஏ மனிதர்களே! நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். மகிழ்ச்சி. அது ஏழைப்பையன் கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதாகவோ ; பேருந்தில்  கூட்டத்தில் உங்கள் அமரும் இடத்தை எழுந்து அவர்களை அமரச் செய்ததோ; அன்ன சத்திரம் கட்டுவதோ இருக்கலாம். அப்போது மனம் என்ன எதிர்பார்க்கிறது? அந்த உதவிக்கு பதில் உதவி - பிரதி உதவி - என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தயவு செய்து விட்டுவிடுங்கள். ஆம்.

நான் ஒரு தென்னை மரத்தைப் பார்த்தேன்( தெங்கு) . 

அந்த மரத்திற்கு ஒருவர் வேரில்  நீரை ஊற்றினார். அதன் தாள் (வேர்) அந்த நீரை ஏற்றுக்கொண்டது. 

ஆனால் அந்த தென்னைமரம் நீர் வார்த்தவருக்கு பதில் நன்றியாய் மீண்டும்  வேரினாலேயே தரும்  என்று நீர் வார்த்தவர் நினைக்க முடியுமா? 

தாளில் குடித்து தலையாலே ( மர உச்சி) தருகிறது.  

பல மடங்கு - உயர்ந்த விதத்தில் அந்த உதவி திரும்பி வரும் என்பது உண்மை.

நம்புங்கள் மனிதர்களே. இது உண்மை.

                                                                ( ஈசனால் தொடர்வோம்)

 





No comments:

Post a Comment