நான் ஒளவை பேசுகிறேன் (1)
(மூதுரை விளக்கம் )
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஏ மனிதர்களே கேளுங்கள். தினமும் மலர் கொண்டு சிவந்த திருவுடல் ( துப்பார் திருமேனி) கொண்ட விநாயகரின் திருவடிகள் வணங்குவோம் வாருங்கள்
தும்பிக்கை உடைய விநாயகப் பெருமான் பாதம் வணங்குவாருக்கு
1) சொல்வன்மை கிடைக்கும்
2) நல் சிந்தனை கிட்டும்
3) செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகள் செல்வம் தருவாள்
4) அவரது உடலை நோய் அணுகாது ( நுடங்காது)
( ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment