Wednesday, 10 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  12 ) 11.12.25 / மகாகவி பாரதி பிறந்த நாள்

*************************************************************************************

பாடல் 12. 

***************

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண் நீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்

உண்நீரும் ஆகிவிடும் .

ஏ! மனிதர்களே! நீங்கள் மனிதரின் உடல் தோற்றம் வைத்து எடை போடும் பழக்கம் கொண்டுள்ளீர்கள். அதனை விடுங்கள். அவர்கள் செயல்தன்மை நோக்கி எடை போடப் பழகுக.

தாழை என்றால் தென்னை மரம். தென்னை மரத்தின் மடல் ஆகிய இதழ்கள் - அதாவது மட்டைகள் பெரிதாக உள்ளன. ஆனால் அவை வாசம் வீசுவதில்லை. அருகில் மகிழம்பூச்செடியின் பூக்களோ அவ்வளவு சுகந்த மணம் வீசுகின்றன.

அளவில் மிகப் பெரிதாக இருக்கிறது கடல். உடம்பைக் கழுவ இயலுமா?குடிக்க உதவுமா? இல்லை. 

கடலுக்கு சற்று ஓரமாய் சிறிய ஊற்று கண்டேன். ஆஹா அது தாகம் தணிக்கிறது.

                                                        ( ஈசனால் தொடர்வோம்)

  

No comments:

Post a Comment