நான் ஒளவை பேசுகிறேன் ( 11 ) 10.12.25
***************************************
பாடல் 11.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் - கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்ற கருமம் செயல்.
ஏ மனிதர்களே!
எல்லாச் செயல்களையும் துவக்கி நம்முடைய சொந்த வலிமையால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அதைத் தன்னம்பிக்கை என்றும் இதுவரை நினைத்து வந்துள்ளீர்கள். அது அப்படி அல்ல.
நான் நெல் வயல் போயிருந்தேன். மக்கள் பசி தீர்க்கும் நெல் வயல் அது. சாகுபடி விளைச்சலுக்கு நெல்லை முதன் முதலில் விதைத்தனர். காலம் சென்றது.
“முதலில் முளைத்து வந்த நெல்மணியே போதுமே ! எதற்கு அரிசி மேல் மூடியிருக்கும் உமி ?” என்றேன்.
“முதலில் அரிசி முளைத்தாலும் அதனை மூடி இருக்கும் உமி இல்லாவிட்டால் முளைக்காது” என்றனர் விவசாயிகள்.
ஒன்று புரிந்தது.
எவ்வளவுதான் திறமை மிகுந்தவர் என்றாலும் அளவான தக்க துணவர் இல்லாவிட்டால் கருமம் ( செயல்கள்) ஆற்ற முடியாது.ஜெயிக்க முடிவதில்லை.
( ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment