Tuesday, 9 December 2025

 சந்த்யாவந்தனம்: (12) 10.12.25

*********************************

உங்கள் ஊர் எத்தனை தொலைவு என்று கேட்கும்போது நேரக்கணக்கில் கிலோ மீட்டர் தூரத்தில் சொல்ல முடியும். ஆனால் சந்த்யாவந்தனம் என்ற இந்த அழகிய செயல்பாடு 25 நடவடிக்கைகளில் செயல்பட்டு அடையும் ஓர் மன ஊர் . சந்த்யா தேவதையின் அமைதி ஊர். 

அவற்றை நாம் காணும் முன்னர் ஸந்த்யாவந்தனம் எதற்கு என்ற முக்யத்வம் ஆழமாக அறிதல் பொருட்டு சில உரைகள்.

****

மானுட வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து அவர்கள் பெய் அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டி அனாதி காலமாகத் திகழ்வது வேதங்களே ஆகும். அறநெறிகளை போதித்து நல் வாழ்விற்கு கலங்கரை விளக்கம் வேதங்களே.

“வேதோ அகிலோ தர்ம மூலம்” அனைத்து தருமங்களுக்கும் மூலம் வேதங்களே என்றனர் பெரியோர். எல்லா வருணத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையில் வாழும் மானுடர்களுக்கும் அன்றாடம் செய்ய வேண்டிய கடமையில் முக்கியமானது சந்த்யாவந்தனம் ஆகும்.

“ஸந்த்யா” என்ற சொல், ஸூர்ய பகவானை மனதாலும் உள்ளத்தாலும் சிந்திப்பது மட்டுமல்ல. தனது நிலையை வயப்படுத்துவது மட்டுமல்ல. ஒருவித யோகப் பயிற்சியும் கலந்து  செய்யப்படும் ஆராதனை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

உலகில் உள்ள ஜீவராசிகள் பிரகாசிக்க சூரியனது கிரணங்கள் கொண்ட ஒளிச்சிதறல்களே காரணம் என்பது போல். மனிதனது அறிவுத்திறன் ஜொலிக்கவும் உடல் தேஜஸ் பெறவும் சூரியனே காரணம்.

                                                          ( ஈசனால் தொடர்வோம்)


No comments:

Post a Comment