சந்த்யாவந்தனம்: (13) 11.12.25/ மகாகவி பாரதி பிறந்த நாள்
*********************************************************************
ஒவ்வொரு மனிதனும் பிறந்தபின், உப நயனத்தின்போது எப்போது “காயத்ரீ” மந்திர உபதேசம் பெறுகிறானோ அப்போது இரண்டாவது பிறப்பினை அடைகிறான் என முன்னமே பார்த்தோம். “த்விஜன்” ஆகிறான். அவரது முக்கியமான கடமை சந்த்யாவந்தனமே ஆகும்.
அதிகாலை மற்றும் அந்தி; மாலை வேளைகளில் சேய்யப்படுக் தினசரி கடமை இது. நண்பகலில் செய்யப்படும் போது மாத்யாஹ்னிகம் ( மதியம்) எனப்படும்.
யாஜ்ஞவல்கிய மகரிஷி அருளிய மந்திரத்தில்:-
“ சந்த்யாவந்தனமானது காலையில் செய்யப்படும்போது காயத்ரி தேவீ அருள் பெற வழிபட்டு தியானிப்பது; நண்பகல் எனில் சாவித்ரீ தேவீ அருள் பெற வழிபட்டு தியானிப்பது; மாலையில் என்றால் அவ்வழிபாடு சரஸ்வதீ தேவியின் அருள் பெற வழிபட்டு தியானிப்பது ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று சந்த்யாவந்தனத்தின் காலங்கள் ஒரு பழமொழியால் குறிப்பிடப்பட்டன. அதன் விளக்கம் என்ன?
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment