Tuesday, 9 December 2025

 அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (10) - 8.12.25


எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா

கடல் அலைகளின் ஓரம் கட்டப்படும் மணல் கோபுரம் கடலுக்கு அந்நியம் போல குழந்தை எண்ணுவதைபோல நான் வேறு நீ வேறு என ஏண்ணிக்கொண்டிருக்கிறேன் அருணாசலா.

கடல் கலக்காமல் இருக்கும்வரை குழந்தைக்கு புரியப்போதில்லை. அந்தக் குழந்தையாக என்னை எண்ணிட வைக்காதே. அது உன் ஆண்மைக்கு அழகல்ல என்கிறார் பகவான் ரமணர்.

யான் - தான் - எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி

யாவருக்கும் தோன்றாது சத்தியம் என்பது கந்தர் அலங்காரம் பாடல் (95).



அபிராமி அந்தாதி: பாடல் :81

அருணாசலனே நீ உன் ஆண்மை காட்டி என்னை ஆட்கொள்ளாமல் கைவிடுவாயேல் நெஞ்சில் வஞ்சகம் உள்ளவரோடு இந்த மாய உலகில் இணங்கவேண்டிய சூழல் எனக்கு ஏற்படும். அதை என்னால் ஏற்க இயலாது. அதை நான் விரும்பவுமில்லை.

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரோடும்

பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே


                                                         ( ஈசனால் சிந்திப்போம்) 


No comments:

Post a Comment