Tuesday, 9 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (10) 10.12.25 

*******************************************


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.


ஏ மனிதர்களே! 

இந்த உலகம் மிக மிகப் பழமை உடையது. மிக மிக மிக வயதான உலகம். நமக்கு முன்பே இருந்தது. நமக்குப் பின்பும் உலகம் இருந்துகொண்டே இருக்கும். இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில் நாம் தொடர்பு கொண்டவர்களாகத்தானே இருக்க முடியும்? 

இவ்வளவு ஏன்? இவ்வுலகில் மழைக்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளதை சிந்தித்துப் பார்த்த அவ்வை சொல்வதை அறிவீர்களா?

வான் மழை முணுமுணுப்பதை அறிவீர்களா? அது இதுதான்:-

“இந்த மண்ணுலகில் நான் ஏன் மழை பொழிகிறேன்? இந்த உலகில் ஒரே ஒரு நல்லவன் இருக்கிறான். அவனை முன்னிட்டே மற்றவர்கள் குடிநீர் பெறுகின்றனர். நெல்லுக்காக உழவன் இரைக்கும் நீர், வாய்க்கால் வழி ஓடி பயனில்லாத புல்லுக்கும் அதன் வேருக்கும் பாய்ந்து நீர் வார்ப்பது ( பொசிவது) போல அந்த ஒரு நல்லவனுக்காக நான் பொழிகிறேன்”

இப்போது புரிந்திருக்கும், நாட்டில் மழை பொழிவு குறைவது எதனால் என்று.

                                                                    ( ஈசனால் சிந்திப்போம்)

No comments:

Post a Comment