நான் ஒளவை பேசுகிறேன் (9) 9.12.25
******************************************
தீயாரைக் காண்பதுவும் தீதே ; திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே- தீயார்
குனங்கள் உரைப்பதுவும் தீதே - அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
ஏ மனிதர்களே! நீங்கள் கேட்கலாம்:-
“ஏன் நான் நல்லோரைப் பார்க்கவும் அவர்கள் சொல் கேட்கவும் நல்லார் குணங்கள் உரைக்கவும் ;பழகவும் இணங்கி இருக்கவும் வேண்டும்?” என்று.
நல்ல எண்ணங்களைக் கொண்டு உங்களை நிரப்பிக்கொண்டே இருக்கப் பழகவில்லை யென்றால் உங்கள் குணம் தாழ்வு எண்ணங்கள் நோக்கிப் பாய்வது உறுதி. இது ஒரு உளவியல். அதையே அறிவு அன்னை அவ்வை சொல்கிறார்கள்.
நல்லோரின் உயரம் உங்களை உயர்த்தும். உயர முற்படாத மனிதர்கள் தாழ்வை நோக்கிச் செல்வதே விதி. நல்லோருமது மனதைப் பூந்தொட்டியாக்குவர் . தீயோர் உங்கள் மனதைக் குப்பைத்தொட்டி ஆக்குவர்.
( ஈசனால் சந்திப்போம்)
No comments:
Post a Comment