நான் ஒளவை பேசுகிறேன் (8) 8.12.25
***********************************************
நல்லாரைக் காண்பதுவும் நன்றே ; நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே ;அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
ஏ மனிதர்களே! உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பினால் ஒரு எளிய வழி சொல்கிறேன்.
நல்லவர்களைக் காண்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
நல்லவர்கள் சொற்களைக் கேளுங்கள். நல்லதே நடக்கும். அதுவும் முடியவில்லையா?
நீங்கள் அறிந்த நல்லவர்களின் குணங்களை பிறருக்கு தெரியப்படுத்துங்கள். நல்லதே நடக்கும்.
நல்லவர்களுக்கு இணக்கமாக இருப்பதும் சிறந்த குணமே. ஆம். அவர்கள் எண்ணங்கள் சக்தி கொண்டவை.
***
No comments:
Post a Comment