அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (3)
பாடல் 2ல் பகவான்:
“அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் உற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என அருள்கிறார்.
கடையில் வாழைத்தாரில் தொங்கும். எல்லாம் தனித் தனியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
ஆனால் சில பழங்களில் உள்ளே இரண்டு கொண்டிருக்கும். வெளியே இரண்டு பழத்திற்கும் பொதுவான ஒரே மஞ்சள் தோலால் மூடிய வாழைப்பழம் பார்த்திருப்பீர்கள். அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? ஒரு பழம்தான் என்று சொல்பவர்களுக்கு இரண்டு என வாதிடலாம். இரண்டு பழம் என்பவர்களுக்கு அது ஒன்றுதான் என சுட்ட முடியும்.
ஈசா என அகத்தில் அழகு என்ற அம்சமாய் நீ உள்ளாய். சுந்தரமும் நீதான். அழகு என்ற சொல்லுக்கு சுந்தரம் என்ற இணைச் சொல்லும் உண்டு.
கல்லில் உள்ள எல்லா இடத்திலும் சிலையின் தன்மை உள்ளது அல்லவா.
இரண்டையும் பிரிக்க முடியாமல், பின்னம்( சிதைப்பது) இல்லாமல் “அபின்னமாய் இருப்போம் அருணாசலா” என பகவான் அழைப்பது ஆன்ம குயில் கூவல் போன்ற அழகுடையது.
அபிராமி அந்தாதியில் (பாடல்:9)
அழுதபிள்ளைக்குப் பால் தரும் அம்மையின் கனிவு குறித்த பாடல் இது. சீகாழியில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொற்கிண்ணத்தில் பால் சுரந்து புகட்டியமை பேசப்பட்டது.
“அம்மே நீ என் முன் வந்து நிற்கவே” என்ற கோரிக்கை வைக்கிறார் அபிராமிபட்டர். அப்படியெனில் அப்பன் சிவன் இல்லையா என ஐயம் தோன்றலாம். அப்படி அல்ல. சிவசக்தி என்றே ஒன்றாகக் குறிக்கிறோம். ஒன்றுக்குள் ஒன்று.
அம்மை அப்பனாக வரச்சொல்லும் காட்சி இப்பாடலில் கேட்கப்படாமல் இருந்தாலும் ஏக வடிவே உள்ளது. அறிவின் வேலை த்தனையும் பகுத்துக் கொண்டே செல்வது. ஞானத்தின் வேலையோ பொதுமை கண்டு இணைப்பதும் இணைவதும் ஆகும்.
( ஈசனால் தொடர்வோம் )
No comments:
Post a Comment