Sunday, 30 November 2025

சந்த்யாவந்தனம்: (தொடர்:3)

 சந்த்யாவந்தனம்: (தொடர்:3) 

சந்த்யாவந்தனம் செய்யக் கற்றுக்கொண்டவ்ன் துவிஜன் அல்லது இருபிறப்பாளன் எனப்படுகிறான். தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் இருபிறப்பாளன் - இரண்டாம் முறை பிறந்தவன் - என்று சுட்டப்படும். தரும சாஸ்திரம் இது பற்றி என்ன சொல்கிறது?

“பிறவியில் எல்லோரும் உறுப்பு வழி பிறந்தவ்ர்கள்தாம்.  ஞானக்கண்  திறக்கப்பெற்று பிரம்மத்துக்கு அர்ப்பணமாக கர்ம அனுஷ்டானங்கள் செய்யத் தொடங்கியபின்னர்தான் துவிஜர் அல்லது இரண்டாம் முறை பிறக்கிறோம். ( ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணோ ஜாயதே த்விஜ:”

ஒரு பறவை முட்டையாக முதலில் பிறந்தபோது குறுகிய முட்டையின் அளவே அதனுடைய உலகம். முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த பின்னரே புதியதொரு பேருலகை அது காண்கிறது. இது அப்பறவையின் இரண்டாவது பிறப்பு.

இதுபோலவே, குறுகிய மனப்பான்மையுடன் புலன்களுக்கு அடிமையாகப் பிறந்த மனிதன் அகக் கண் திறக்கப் பெற்று பேரானந்த வடிவான ஆன்ம ஒளியைக் காணும்போதே இருபிறப்பாளன் என்ற பெயருக்கு உரியவன் ஆகிறான். பூணூலாலும் சிகையாலும் மட்டுமல்ல.

யணூல் எனப்து வேதாந்தம்; நுண் சிகை ஞானமாம்.

                                                                      ( ஈசனால் தொடர்வோம்)


No comments:

Post a Comment