Friday, 28 November 2025

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்

 

அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் 


அருளியவர் : பகவான் ரமணர்

காப்பு: 

அருணாசலவரற்கு ஏற்ற அஷர மணமாலை சாற்றக்

கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.


அருணாசல நாயகனுக்குத் தகுதியான எழுத்துமாலையை மணமாலையாகப் பாட வேண்டும் என் தியானிக்கிறார் பகவான் இரமணர். 

எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து “அ” என்ற கரம் “அகரம்” உதவுகிறது. 

நம் அனைவருக்கும் கருணையே வடிவான ஐந்துகரம் கொண்டு காக்கின்ற கருணாகரம் கருணை சாகரம் ; கருணையின் சேகரம் விநாயகப் பெருமானே ஆவார். இரமண பகவான் மூல முதல்வனின் அருளைக் கோருவது அவருக்காக அல்ல. வழியறியா பக்தனுக்காக. 

பக்தனுக்காக எனும்போது தன்னை ஒரு பக்த நிலைக்கு இரமண பகவான் இறங்கி வருகிறார். 

அபிராமி அந்தாதியில் முதல் பாடலில் விநாயகப் பெருமானுக்குதில்லை ஊரர் ( சிவன்) பாகத்து (அம்மை) மைந்தன் விரும்பும்  நீண்ட  கொன்றைமாலையும் சண்பக மாலையும் சார்த்தப்படுகிறது. 

தாரமர் ( தார்: நீண்ட / அமர்: விரும்பும்)கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே என அபிராமிபட்டர் பாடுவார்.

- தொடர்வோம் / 29.11.2025


No comments:

Post a Comment